Tuesday 27 October 2015

வலைப்பதிவு எழுதுவதால் என்ன பயன்?



வலைப்பதிவர் அல்லாத பலரிடம், குறிப்பாக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம், வலைப்பதிவு என்றால் என்ன என்று புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. பலரும் கேட்கும் கேள்வி “பேஸ்புக் (facebook) மாதிரியா?” என்பதுதான். இன்னும் சிலர் இதில் எழுதுவதால் வருமானம் கிடைக்குமா? இதனால் என்ன பலன்?” என்பதுதான். நம்மில் வலைப்பதிவரில் நிறையபேருக்கே ” இதனால் என்ன பலன்?” என்ற எண்ணம் இருப்பதைக் காண முடிகிறது.

சன்மானம் உண்டா?

வலைப்பதிவர் ஒருவர், தனக்குப் பழக்கமான ஒரு எழுத்தாளரிடம், தான் எழுதும் வலைப்பதிவுகளைப் பற்றி சொல்லி நீங்களும் வலைப்பதிவு ஒன்றினைத் தொடங்கி , வலைப்பதிவராக எழுதலாம் என்று சொல்லி இருக்கிறார். அவரோ எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு “ இண்டர்நெட், அது இது என்று செலவுசெய்து பதிவு எழுதுவதற்கு, பத்திரிகையில் தருவது போல சன்மானம் தருவார்களா?” என்று கேட்டு இருக்கிறார். நமது வலைப்பதிவர் “பணமெல்லாம் கிடைக்காது; எழுதுவதில் ஒரு ஆத்ம திருப்திதான்” என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அந்த எழுத்தாளரோ “ அப்படியானால் எதற்கு எழுத வேண்டும்? எல்லாம் வேஸ்ட்” என்று சொல்லி விட்டார்.

வலைப்பதிவு எழுதுவதால்

வலைப்பதிவு எழுதுவதால் ஏதாவது பயன் உண்டா என்று கேட்டுக் கொண்டே, இன்னும் எழுதிக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. ”விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடே” என்று எழுதியது போதும் என்று விலகியவர்களும் உண்டு. நண்பர் டி.என்.முரளிதரன் – மூங்கில் காற்று அவர்கள் சொல்லும் கருத்துக்கள் இவை.

உண்மையில் பார்த்தால் வலைப் பதிவு எழுதுவதால் பொருளாதாரப் பயன்கள் ஏதுமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. பின் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் சின்ன எழுத்துத் திறமைக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இணையம். கொஞ்சம் பேராவது நமது படைப்புகளை ரசிக்கிறார்கள். ஒரு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. பல நல்ல நட்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.  திறமையாளர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவர்களும் நம்மை அறிந்து கொள்ள வாய்ப்பை அமைத்துக் கொடுத்திருக்கிறது. நமது திறனை வளர்த்துக் கொள்ளும் மேடையாக வலைப்பூக்கள் அமைகின்றன. உடனடியாக நமது படைப்பின் கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது. எதிர்வினைகளை கையாள கற்றுக் கொடுக்கிறது . நம்மை புதுப்பித்துக்  கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது. பலரையும் ஊக்கிவிக்க முடிகிறது. நமது எண்ணங்களுக்கு ஒரு வடிகாலாக அமைகிறது. பத்திரிகையில் எழுதியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது . பிரபல பத்திரிகைகளின் பார்வையில் படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது . போட்டிகளில் கலந்து கொள்ளவும் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கிறது.  வலை உலகம் பல பாடங்களை கற்றுத்தரும் ஆசிரியராக இருக்கிறது. தொடக்கத்தில் எழுதியதற்கும் இப்போது எழுதுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிகிறது. (நன்றி: http://www.tnmurali.com/2014/04/benefits-of-writing-blogposts.html )

ரெஜி ஸ்டீபன்சன் - என்னும் ஆங்கில வலைப்பதிவர், வலைப் பதிவினால் கிடைக்கும் 25 பயன்பாடுகளை, தனது வலைத்தளத்தில் சொல்லி இருக்கிறார். (இயல்பான தமிழில் நான் இங்கு தமிழாக்கம் செய்துள்ளேன்)

#1. Networking with various people worldwide.
   (உலகில் உள்ள பல்வேறு மக்களிடம் வலைத் தொடர்பு
   கொள்ளலாம்)
#2. Blogs help you to improve your writing skills.
   (வலைப்பதிவுகள் உங்களது எழுத்துத் திறமையை அதிகரிக்கச்
   செய்கின்றன)
#3. Mastering a subject.
   (குறிப்பிட்ட துறையில் வல்லுநர் ஆகலாம்)
#4. Flexibility of working hours.
  (பணி செய்யும் போது பிறரிடம் அனுசரித்து செல்லும் மனப்பக்குவம்
  தரும்)
#5. Your photographic skills may improve.
   (உங்களிடம் இருக்கும் போட்டோகிராபி திறமைகள் மேம்படலாம்)
#6. Your videography skills may improve.
   (உங்களிடம் இருக்கும் வீடியோகிராபி திறமைகள் மேம்படலாம்)
#7. Your presentation skills may improve.
  (இன்று உங்களிடம் இருக்கும் திறமைகள் இன்னும் மேம்படலாம்.)
#8. Blogging as a source of income.
   (வலைப்பதிவு எழுதுவதிலும் வருமானம் உண்டு)
#9. Blogs promote small scale business.
   (உங்களது சிறுவணிகத்தினை மேம்படுத்தலாம்)
#10. Blogs promote large scale business.
   (உங்களது பெரும் வணிகத்தினை மேம்படுத்தலாம்)
#11. Blogs make it easy to connect with social media.
   (வலைப்பதிவினை சமூக ஊடகங்களோடு எளிதில் இணைக்கலாம் )
#12. Blog as a source of information
   (தகவல் பரிமாற்றத்திற்கு உதவும்)
#13. Blog as a helping tool for carrying out certain day-to-day activities.
   (அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவும்)
#14. Blogs may act as a portfolio.
   (உங்களுக்கென்று ஒரு போர்ட்ஃபோலியோ உருவாகும்)
#15. Blogs may help you to become a professional writer or blogger.
    (தொழில்முறை வலைப்பதிவாளர் அல்லது எழுத்தாளர் ஆகலாம்)
#16. Blogs may lead you to start a new career.
   (ஒரு புதிய தொழிலை தொடங்க உதவலாம்)
#17. Blogs are very easy to set up.
   (வலைப்பதிவை தொடங்குவது எளிமையானதே)
#18. Blogs help you to increase your knowledge in different fields.
   (வெவ்வேறு வகைகளில் உங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள
   உதவும்)
#19. Gaining popularity and respect from others.
   (மற்றவர்களிடம் நீங்கள் பிரபலமும் மதிப்பும் பெறலாம்)              
#20. Blogging as a hobby.
    (வலைப்பதிவை ஒரு பொழுது போக்கிற்காகவும் வைத்துக்
    கொள்ளலாம்) 
#21. Blogs are easy to update.
   (அன்றாட மேம்பாடு செய்து கொள்ளலாம்)
#22. Blogging may change your attitude towards life.
   (வாழ்க்கையில் உங்கள் அணுகுமுறைகளில் மாற்றம்
   உண்டாகலாம்)
#23.Good exercise for your mind
   (வலைப்பதிவு மனதிற்கு நல்ல பயிற்சியாகும்)
#24.It is possible to become a successful blogger without higher education.
   (அதிக மேற் படிப்பு இல்லாமலேயே ஒரு நல்ல வலைப்பதிவராக
   விளங்கலாம்)
#25.Location is not a problem for blogging as a career.
   (வலைப்பதிவிற்கு நாம் இருக்குமிடம் முக்கியமல்ல)


எனது அனுபவம்:

மாருதி கார் புதிதாக வந்த புதிதில், அவர்கள் “மாருதியின் உரிமையாளர்களே அதன் ஓட்டுநர்களாகவும் இருக்கிறார்கள்” என்று பெருமையாகச் சொன்னார்கள். அதைப்போல வலையுலகில் பெரும்பாலும் வாசகர்களே பதிவர்களாகவும், பதிவர்களே வாசகர்களாகவும் இருக்கக் காணலாம்.

நான் பணியில் (வங்கி) இருந்தபோது, எனக்கு முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில்தான் வேலை. வீட்டிற்கு வந்தால் படிக்கவே நேரம் இருக்காது. இருந்தாலும் ஒருமணி நேரமாவது படித்தால்தான் அன்றைய தினம் நிறைந்ததாகவே இருக்கும். எனவே நானும் தமிழ்மணம் போன்றவற்றில், முதலில் ஒரு வாசகனாக மட்டுமே இருந்து பின்னூட்டங்கள் எழுதிக் கொண்டு இருந்தேன். வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் பொழுது போக்காக எழுதத் தொடங்கி ஒரு வலைப்பதிவர் ஆனேன். இன்றும் என் விரல்களும், மனமும் நான் இன்னும் பணியிலிருப்பது போன்றே உணர்கின்றன. வலைப்பதிவர்கள் வட்டத்தில் எழுதுவது, அவர்களைப் பாராட்டுவது என்பது மனம் மகிழ்வான செயலாகவே இருக்கிறது. தனிமை உணர்வை விரட்டுகிறது. பல்வேறு பிரச்சினைகளில் மனம் தத்தளித்த போது, மனம் தடுமாறாமல் ஒருமுகப்படுத்த உதவியது. வலைப் பதிவர்கள் பலர் எழுதும் வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் பயணக் கட்டுரைகள், பல்வேறு அனுபவங்கள் யாவும் வழிகாட்டிகளாய் இருக்கின்றன. எனது அம்மா இறந்த மீளாத்துயரத்தில் நான் இருந்தபோது, வலைப்பதிவு நண்பர்கள் தந்த ஆறுதல் வார்த்தைகள், மற்றும் காலில் காயம் ஏற்பட்டு முடங்கியபோது அவர்கள் தந்த நம்பிக்கை மொழிகள் யாவும், என்னை நானே மீட்டெடுக்க உதவின. சுருக்கமாகச் சொல்வதென்றால் வலைப்பக்கம் வாராது இருந்திருந்தால், என்றோ தொலைந்து இருப்பேன்.

நூல் வெளியீட்டு விழா மற்றும் வலைப்பதிவர்கள் சந்திப்பு போன்ற சந்திப்புகளில், முகமறியாமல் இருந்த பல நண்பர்களை முதன்முதல் சந்திக்கும் போது ஏற்படும் உணர்வை (ஏதோ போன ஜென்ம பந்தம் என்பார்களே) விளக்க இயலாது.

                                            Image courtesy -  jannoon028/FreeDigitalPhotos.net


72 comments:

  1. வலைப்பதிவு நமக்கு என்ன செய்யும் என்பதை தமிழ், ஆங்கிலப் பதிவர்கள் கருத்துக்களோடு பகிர்ந்து கொண்டது அருமை. நான் பல வருடங்களாக பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அதில்கூட ஏற்படாத மனநிறைவு வலைப்பதிவில் எழுதும்போது ஏற்படுகிறது. அதற்கு காரணம் பதிவுக்கு உடனே கிடைக்கும் பின்னூட்டங்கள்தான்.
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் எஸ்.பி.எஸ் அவர்களே!

      Delete
  2. அனைத்திலும் பணம் எதிர்ப்பார்க்கும் மனங்கள் உண்டு...

    உங்களின் அனுபவம் பலரும் நினைக்கும் உண்மையான உண்மை ஐயா... நன்றி...

    ரெஜி ஸ்டீபன்சன் அவர்கள் சொன்னதை நண்பர் டி.என்.முரளிதரன் அவர்கள் முத்து முத்தாக சொல்லி விட்டார்... அவருக்கும் பாராட்டுகள்...

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. பதிவர் மூங்கில்காற்று முரளிதரன் சொன்னவை அனைத்தும் முக்கிய காரணங்களே!

    ஃபேஸ்புக் எல்லாம் இப்போ சமீபத்தில் வந்ததுதானே! ஆனால் வலைப்பதிவு அதிலும் தமிழில் வந்து காலம் பத்து ஆண்டுகளுக்கு மேல் இல்லையோ!

    நம் அனுபவங்களைப் பதிய ஒரு இடம் இது. அதுவுமில்லாமல் கூகுளில் தேடி எடுப்பதும் சுலபம். முகநூலில் தேடி எடுக்கமுடியுமா என்ன?

    பதிவுகளாக எழுதியவைகளையே அச்சிலும் கொண்டு வரலாம்தானே? என்னுடைய நான்கு புத்தகங்களும் முதலில் பதிவுகளாகவே எழுதப்பட்டவை. நான் வலைப்பூவை விட்டு விலகுவதாக இல்லை. முதலில் வலையில் வெளியிட்டபின், கூடுதல் வாசகநண்பர்களுக்காக முகநூலிலும் பதிகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. துளசி டீச்சரின் அனுபவ மொழிகள். டீச்சருக்கு நன்றி.

      Delete
  4. எது எப்படியோ தாங்கள் சொல்வது போல ஆத்ம திருப்தி அது இங்கே கிடைக்கிறது அதைவிடவும் நமக்கு கிடைத்த உறவுகள் உண்மையில் பூர்வஜென்மத்தொடர்போ என நினைக்கவும் வைக்கிறது. நல்லதொரு சிந்தனை.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி, கவிஞர் ’தென்றல்’ சசிகலா அவர்களுக்கு நன்றி.

      Delete
  5. கூகுள் ஆண்டவர் மனது வைத்தால் விளம்பரம் மூலம் எதிர் காலத்தில் வருமானமும் வரலாம் ! அப்படி வந்தால் பதிவர்கள் எண்ணிக்கையும் நூறு மடங்கு கூடும் :)

    ReplyDelete
    Replies
    1. ஆண்டை கூலியைக் குறைத்தால், வேலையாள் வேலையைக் குறைப்பான் என்பார்கள். பகவான்ஜி அவர்களே! காசை எதிர்பார்த்து எழுதினால் , இப்போதுள்ள வாசகர்கள் நம்மை விட்டு விலகி விடுவார்கள்.

      Delete
  6. அருமையான அவசியமான பதிவு
    முரளீதரனின் கருத்தைப் பகிர்ந்தது அருமை
    செலவுக்குதான் வழி இருக்கிறதே ஒழிய
    வரவுக்கு வழியில்லை
    ஆனால் ஆத்ம திருப்தி என்கிற வகையில்
    இது முதலீட்டுச் செலவே என்பது
    எனது கருத்து
    பயனுள்ள பகிர்வு
    பகிர்வுக்கும் தொடரவும் அல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே! நாமெல்லாம் ” வரவில்லாமல் செலவு செய்தோமே ‘’ ரகம். தங்கள் பாராட்டிற்கு நன்றி!

      Delete
  7. பல்வேறு விஷயங்களை தங்கள் தனிப்பாணியில் மனம் திறந்துசொல்லியுள்ள மிகவும் பயனுள்ள பதிவு. ஆத்ம திருப்தி என்பதை நாம் பணம் கொடுத்து வாங்கவே இயலாது.

    //முகமறியாமல் இருந்த பல நண்பர்களை முதன்முதல் சந்திக்கும் போது ஏற்படும் உணர்வை (ஏதோ போன ஜென்ம பந்தம் என்பார்களே)//

    அதே .... அதே ! :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. //ரெஜி ஸ்டீபன்சன் - என்னும் ஆங்கில வலைப்பதிவர், வலைப் பதிவினால் கிடைக்கும் 25 பயன்பாடுகளை, தனது வலைத்தளத்தில் சொல்லி இருக்கிறார். (இயல்பான தமிழில் நான் இங்கு தமிழாக்கம் செய்துள்ளேன்)//

    இதில் வரிசை எண் 10 மற்றும் 11 ஆகியவற்றில் தமிழாக்கம், அவசரத்தில், ஒரே மாதிரி விழுந்துள்ளது. முடிந்தால் மாற்றி விடுங்கோ, ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K அவர்களுக்கு, நீங்கள் குறிப்பிட்ட பிழைகளை சரி செய்து விட்டேன். நன்றி! (ஈரோடு செல்வதற்கு புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். திரும்பி வந்ததும் மற்ற மறுமொழிகளை எழுதுகிறேன்)

      Delete
    2. மிக்க நன்றி, சார். தங்களின் ஈரோடு பயணம் இனிமையாக அமைய என் வாழ்த்துகள். அன்புடன் VGK

      Delete
    3. தங்களைப் போன்ற அன்பானவர்களின் ஆசீர்வாதத்தில் ஈரோடு பயணம் (திருமண வரவேற்பு) நன்றாகவே அமைந்தது.

      Delete
  9. //இன்றும் என் விரல்களும், மனமும் நான் இன்னும் பணியிலிருப்பது போன்றே உணர்கின்றன. வலைப்பதிவர்கள் வட்டத்தில் எழுதுவது, அவர்களைப் பாராட்டுவது என்பது மனம் மகிழ்வான செயலாகவே இருக்கிறது. தனிமை உணர்வை விரட்டுகிறது. பல்வேறு பிரச்சினைகளில் மனம் தத்தளித்த போது, மனம் தடுமாறாமல் ஒருமுகப்படுத்த உதவியது. //

    எனக்கும் இதே உணர்வுகள் அவ்வப்போது அடிக்கடி ஏற்பட்டது உண்டு. அதே உணர்வுகளைத் தாங்கள் சொல்லிக் கேட்கும்போது மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  10. அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஐயா,
    நான் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்த போதும் ஏன் இப்போதும் இதனால் என்ன பயன் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் விவாதிக்க தகுந்த இடமாக, பலவற்றைத் தெரிந்துக்கொள்ள உதவும் களமாக,,
    அதனினும் எத்தனை உறவுகள்,,,
    தங்கள் விளக்கம் அருமை,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
  11. ஆத்ம திருப்தி கிடைக்கிறதே அதைவிட வேறேன்ன வேண்டும்?!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களுக்கு நன்றி. நீங்கள் மீண்டும் முன்பு போல , தாங்கள் எழுத இயலா விட்டாலும், அவ்வப்போது ஒன்றிரண்டு பதிவுகளையாவது எழுதுங்கள்.

      Delete
  12. நான் தங்களிடம் கைப்பேசியில் சொன்னது போல,
    தினமும் இரண்டு எனக்குப் புதிய பதிவர்களிடம் பேசுகிறேன்.
    கையேடு என் கையோடு மட்டுமன்றி, என் செயலோடும் செய்
    கையோடும் கலந்து விட்டது .

    புதிய நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள் .
    இவர்கள் நமது வாழ்வில் புதிய மைல் கற்கள் .
    புதிய ஒளி விளக்குகள்.
    அவை காட்டும் வழி
    அலுத்து சலித்துப்போன பல வழிகளில் இருந்து மீட்டு, நமக்கு
    விடுதலை தரும் . தருகிறது.
    இல்லையா !!


    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சுப்புத் தாத்தா அவர்களுக்கு வணக்கம். உங்கள் அனுபவ மொழிகள் மற்றவர்களுக்கு வழிகாட்டி அய்யா!

      Delete
  13. இவ்வாறான ஒரு கேள்வி எழக்காரணமே வலைப்பதிவுதான் என்பதை மனதில் கொள்வோம். நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ள இது பெரிதும் உதவுகிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டுள்ளேன். தாங்கள் பல காரணங்களைக் கூறியுள்ளீர்கள். அத்தனையும் பொருந்தி வருகின்றன. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களது கருத்துரைக்கு நன்றி.

      Delete
  14. அனுபவ மொழிகள்.. அத்தனையும் அருமை..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை. செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

      Delete
  15. நான் கூட முன்பு மாத இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன் . அதில் பணம் கிடைக்கும் . ஆனால் அவர்கள் எப்போது வெளியிடுவார்கள் என்று தெரியாது .இதில் எழுதி முடித்து பப்ளிஷ் என்ற பட்டனைத் தட்டினால் வெளியிடப்பட்டுவிடும் . வாவ் ..அந்த சந்தோஷம்..... ம் ...ம் சொன்னால் புரியாது

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களது அனுபவ மொழிக்கு நன்றி.

      Delete
  16. சார்! பலன்கள் பல இருந்தாலும் வாய்ச் சண்டை போடறதுக்கு தோதான இடம்:)

    ReplyDelete
    Replies
    1. வலைப்பதிவர்களில் பலர் இங்கு போடுவது ‘விதண்டா வாதம்”

      Delete
  17. நான் சொல்ல நினைத்தது எல்லாம் சொல்லப்பட்டு விட்டனவே

    ReplyDelete
  18. வலைப் பதிவு எழுதுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி சொன்னீர்கள். உண்மைதான். இந்த வலைப்பதிவர் உலகத்தில் காலடி(கையடி!) எடுத்து வைத்ததும் புதிய நட்பு வட்டங்கள் உருவாகியது உண்மை. எத்தனையோ பிசிராந்தையார்களையும் கோப்பெருஞ்சோழர்களையும் இணைத்ததில் இந்த வலைப்பதிவிற்கு பெரும் பங்கு உண்டு. அருமையான் பதிவு வாழ்த்துக்கள்!

    வலைப் பதிவு எழுதுவதால் ஏற்படும் சங்கடங்களையும் எழுதுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் கருத்தினுக்கு நன்றி. வலைப்பதிவு எழுதுவதால் ஏற்படும் சங்கடங்கள் குறித்து , அவ்வப்போது வெவ்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளேன். தனியாகவே ஒரு பதிவினில் எழுத வேண்டும்.

      Delete
  19. பாராட்டுகள். ஆனாலும் பல பதிவர்கள் பதிவுலகை விட்டுப் போயக்கொண்டு இருக்கிறார்கள். ஏன் என்று கண்டுபிடிக்க முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி.

      Delete
  20. பாராட்டுகள். ஆனாலும் பல பதிவர்கள் பதிவுலகை விட்டுப் போயக்கொண்டு இருக்கிறார்கள். ஏன் என்று கண்டுபிடிக்க முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. அய்யா முனைவர் அவர்களுக்கு, பதிவுலக சங்கடங்கள் குறித்து வெவ்வேறு தலைப்புகளில் நிறையவே சொல்லி இருக்கிறேன். தங்கள் கருத்தின்படி, தனியாக ஒரு பதிவு எழுதுவது குறித்து யோசிக்கிறேன்.

      Delete
  21. ஆத்ம திருப்தி கிடைக்கின்றது அதைவிட நீயா நானா என்று அன்புச்சண்டை போட எழுதியே இங்கு போல வசதி முகநூலில் இல்லை ஐயா! அருமை சிந்தனைப்பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் சிவநேசன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  22. வலைப் பூ உலகெங்கும் உறவுகளை ஏற்படுத்தித் தருகின்றதே ஐயா
    திருமிகு முரளிதரன் ஐயா அவர்களின் கருத்துடன் முழுவதுமே ஒத்துப் போகின்றேன் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தையாருக்கு நன்றி!

      Delete
  23. அன்பு நண்பருக்கு வணக்கம்...
    எனது 10 வது அகவையிலேயே நானும் தமிழ்நாடு முழுவதும் அறியப்படும் மிகப்பெரிய எழுத்தாளராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டு எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு எழுதத் தொடங்கியவன் இது பேராசை என்று யாரும் நினைத்தாலும் அதனைப்பற்றி கவலை இல்லை.
    எவ்வளவோ பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பி இருக்கின்றேன் அவைகள் எங்கு போனதோ நானறியேன் இருப்பினும் மனம் தளராது எழுதிக்கொண்டே இருந்தேன்
    2010 தில்தான் வலைப்பூவை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது உடனே அதனைப்பற்றி அறிந்து வலைப்பூ தொடங்கினேன்

    இன்று தாங்களைப் போன்ற பல நண்பர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்ல உலக அளவில் கிடைத்து விட்டது இது என்னைப் பொருத்தவரை வெற்றியின் ஆரம்பமே..

    இப்பொழுது நாமும் நூல் வெளியிடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்து இருக்கின்றது அதற்கு காரணம் வலைப்பூதான்.
    நான் இனி தொடர்ந்து எழுதுவேன் கடைசிவரை.. 4000 பேர் படிக்காவிட்டாலும் 4 பேராவது எனது எழுத்தையும் ? ? ? படித்து கருத்துரை பதிந்தால் போதுமென்று ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

    தமிழ் மணம் 10

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் எழுத்தார்வம் வியக்க வைக்கிறது. நீங்கள் இன்னும் எழுதலாம். எழுத்தாளர் ஆகலாம். உங்கள் படைப்புக்கள் யாவும் நூல்களாக வெளியிடலாம். வாழ்த்துக்கள்.

      Delete
  24. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்
    உள்ளம் நிறைவு தரும் செயலாகவே வலைப்பதிவை விரும்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொன்னதைப் போல, வலைப்பூ எழுதுவது என்பதில் ஒரு உளநிறைவு உள்ளது அய்யா!

      Delete
  25. அனைததும் உண்மை.... ..உண்மையன்றி..வேறு இல்லை...........

    ReplyDelete
    Replies
    1. தோழரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  26. அழாகன தொகுப்புடன் தங்கள் விளக்கம் அருமையாக இருந்தது நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி. புதுக்கோட்டையில் உங்களோடு நிறைய பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். வாய்ப்புகள் அமையவில்லை.

      Delete
  27. நல்லதொரு கட்டுரை.வலைப்பூவில் எழுதுவதால் என்ன பயன்? என்ற கேள்வி எனக்கென ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கும் எண்ணத்தை நிறைவேற விடாமலே வைத்திருந்த நிலையில் ஒரு நண்பரின் கட்டாயத்தால் வலைப்பக்கத்தை துவங்கினேன். முந்நூறு பதிவுகளைக் கடந்து விட்டேன். அதன் வழி கிடைத்த அறிமுகங்கள், வலைப்பக்க நண்பர்களின் பகிர்வுகள் தந்த விசயங்கள் அதிகம். நினைவுகளை, நிகழ்வுகளைச் சேகரிக்கும் கிடங்காக என் வலைப்பக்கத்தை பயன்படுத்தி வருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. 300 பதிவுகளுக்கும் மேல் எழுதிய சகோதரர் மு.கோபி சரபோஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழ்மணத்தில் அவ்வப்போது உங்கள் பதிவுகளை படித்து இருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  28. வணக்கம்
    ஐயா

    நல்ல கருத்து மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா த.ம 13

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் கருத்துரைக்கு நன்றி..

      Delete
  29. மிக சிறப்பான பதிவு ஐயா.
    மிக விரும்புகிறேன் இதை.
    இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி கோவைக்கவி அவர்களுக்கு நன்றி.

      Delete
  30. ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கிறது! முரளிதரன் கூறியது போல பல நட்புக்கள் கிடைப்பதுடன் பல தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது! நம்மை மேம்படுத்திக் கொள்ளவும் முடிகிறது! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  31. மிக நுட்பமான கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாய் வலைப்பூவில் எழுதி வருகிறேன். என் சிறந்த நண்பர்களில் பலர் இன்று நம் பதிவர்களே.. வலையில் எழுத வரும் அனைவருக்கும் ஒரு சிறு கையேடாக உங்கள் பதிவு தரப்பட வேண்டும்... வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. மோகன்ஜி அவர்களின் அன்பான பாராட்டிற்கு நன்றி.

      Delete
  32. நல்லதொரு பகிர்வு.

    சம்பாதிக்க இது பயன்படுவதில்லை என்று சொல்ல முடியாது - எத்தனை நண்பர்களை நமக்கு இது சம்பாதித்துக் கொடுத்திருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி. தாமதமான எனது மறுமொழிக்கு மன்னிக்கவும்.

      Delete
  33. நான் தமிழை மறந்துவிட கூடாது என்பதைவிட தமிழ் என்னை மறந்துவிடகூடாது என்பதற்காய், தாயகம் விட்டு பிரிந்து, தமிழை விட்டு பிரிந்து கால் நூற்றாண்டை கடந்தபின்னும் அவ்வப்போது எனக்குள்ளும் என்னை அறிந்த சிலருக்குள்ளும் என் தமிழை தவழவிட்டிருந்த என்னை வலைத்தளத்திற்குள் வளையவர செய்த நண்பரின் தூண்டுகோல் இன்று எனக்கு உலகளாவிய வாசகர்களை எற்படுத்திகொடுத்திருக்கின்றது என்பதை எண்ணும்போது, பலரும் சொல்வதுபோல், ஏற்படுகின்ற ஆன்ம திருப்தியை எந்த அளவுகோலால் அளப்பது.

    நன்றி.

    கோ

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரர் கோயில்பிள்ளை அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தமிழ்மணத்தில் உங்கள் கட்டுரைகளை அவ்வப்போது படிப்பேன். கடல் கடந்தும், தமிழ் மீது கொண்ட காதலால் வலைப்பூ ஒன்றினைத் தொடங்கி எழுதிவரும் தங்களுக்கு வாழ்த்துக்கள். தாமதமான எனது மறுமொழிக்கு மன்னிக்கவும்.

      Delete
  34. நன்றி ஐயா..நானும் எனது பயணத்தைத் தமிழோடுத் தொடங்கியுள்ளேன்..தமிழோடு இணைவோம் ஐயா..நன்றி..

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களுக்கு நன்றி.. உங்கள் வலைப்பூவில் கருத்துரை ஒன்றினைத் தந்து இருக்கிறேன். தாமதமான எனது மறுமொழிக்கு மன்னிக்கவும்.

      Delete
  35. தங்களின் மறுமொழிக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  36. எழுதுவதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறெதிலும் கிடைப்பதில்லை என்பது மட்டும் நிதர்சன உண்மை.
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete