Saturday, 13 February 2016

திரு V.G.K.அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்



                                    (படம் மேலே) நானும் திரு V.G.K. அவர்களும்)

அண்மையில் எனது வலைத்தளத்தில் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது பயணங்கள் முடிவதில்லை’ - By VGK  என்ற பதிவு வெளியானது குறித்து  http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html பலருக்கும் மனதில் பல கேள்விகள் உதித்து இருக்கும் போல. ஏனெனில்,

 
அப்பப்பா ..... எவ்வளவு ஜோரா எழுதியிருக்கீங்க. தினமும் உங்க வலைப்பதிவுப் பக்கம் நான் வந்து, ஏதேனும் புதிய பதிவு இருக்கான்னு ஆசையாப் பார்த்து பார்த்து ஏமாந்து போவது என் வழக்கம். இதை ஏன் இங்கே இவரின் வலைத்தளத்தில் வெளியிடச் சொன்னீங்களோ ... எனக்குப் புரியலை. //

// ஸ்ரத்தா, ஸபுரி...Saturday, January 30, 2016 11:29:00 am 

கோபால் சார் பதிவு என்றாலே கலர் ஃபுல்லா ரசனையுடன் படிக்க நிறைய விஷயங்கள் இருக்கும். இங்கயும் சூப்பரான படங்கல் சுவாரசியமான பயண அனுபவங்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. நார்த் ஸௌத் எல்லா இடங்கலும் சுத்தி பார்த்து நன்கு எஞ்சாய் பண்ணியிருக்கீங்க. இந்தப்பதிவை ஏன் உங்க பக்கம் ப்போடலே. தமிழ் இளங்கோ சார் அவர்கலுக்கு தான் நன்றி சொல்லனும். விடாப்பிடியாக உங்களை தொடர் பதிவு எழுத வச்சுட்டாங்களே. எங்க படிச்சா என்ன கோபால் சாரின் பதிவுகள் படிக்க எல்லாருமே ஓடி வந்து விடுவோமே. //

என்று கருத்துரை எழுதி இருந்தனர். எனவே இது சம்பந்தமாக சில விளக்கங்கள் இங்கே வெளியிடுவது அவசியமாகிறது.

எனது மின்னஞ்சல்:

இந்த பதிவு விஷயமாக முதன்முதல் அவருக்கு அனுப்பிய மின்னஞ்சல் இதுதான்.

// அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இப்போது வலைப்பக்கம் நிறையபேர் எழுதுவதில்லை. அதிலும் குறிப்பாக மின்னல் வரிகள் கணேஷ் போன்றோர் வலைப்பக்கம் வருவதே இல்லை. ஃபேஸ்புக் பக்கம் போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன். எனவே நண்பர்களையும், மூத்த வலைப்பதிவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதால், அந்த பத்து கேள்விகளூக்கான பதில்களோடு அவசியம் ஒரு பத்துபேரை தொடர் பதிவை எழுத அழைத்து, பயணங்கள் முடிவதில்லை என்ற தொடர் பதிவை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்தி.தமிழ் இளங்கோ 26.01.16 //

திரு V.G.K. அவர்களது கட்டுரை:

அவரும் “பல்வேறு காரணங்களால் என் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் கொடுக்க எனக்குத் தற்சமயம் விருப்பம் இல்லை” என்று மேலே சொன்ன கட்டுரையையும், அவரது படங்களையும்  எனது வலைத்தளத்தில் வெளியிடச் சொல்லி மின்னஞ்சல் வழியே அனுப்பி வைத்தார். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. எனவே மீண்டும் இதற்கு. நான் ஒரு மின்னஞ்சல்  அனுப்பி வைத்தேன். அது இது (கீழே)

// அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். மின்னஞ்சலையும் இணைப்பையும் இப்போதுதான் பார்த்தேன். இந்த கட்டுரையை உங்கள் வலைத்தளத்தில் வெளியிடுவதுதான் முறை. உங்களுக்கென்று ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது. நான் வெளியிடுவது சரியன்று. நன்றி!
அன்புடன்தி.தமிழ் இளங்கோ
நாள்: 28.01.2016 //
   
எனினும் அவரது அன்பு வேண்டுகோளை என்னால் தட்டிச் செல்ல விரும்பவில்லை: எனவே அவரது பதிவினை இந்த எனது வலைத்தளத்தில் வெளியிட்டேன். மேலும், அவருடைய பதிவு என்பதால், நான் மறுமொழிகள் தர விருப்பப்படவில்லை. அவசியமான, முக்கியமான ஓரிரு பின்னூட்டங்களுக்கு மட்டும் நான் எனது மறுமொழிகளை எழுதி இருக்கிறேன். தொடர்ந்து அவரும் இன்னும் மறுமொழிகள்  எழுதிக் கொண்டு இருக்கிறார்.

வாசகர்கள் விருப்பம்:

இந்த பதிவினுக்கு இதுவரை மொத்தம் 127 கருத்துரைகளும் (மறுமொழிகளையும் சேர்த்து) 561 பார்வையாளர்களும் வந்துள்ளதாக DASHBOARD இல் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

நான் முன்பே குறிப்பிட்டது போல ஒவ்வொருவருக்கும் ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது. எல்லா விவரங்களையும் வைத்துப் பார்க்கும் போது திரு V.G.K. அவர்களின் வாசகர்கள், அவரது தளத்திலேயே தொடர்ந்து எழுதவும், அவர்களது கருத்துரைகளை அவரது தளத்தில் எழுதவுமே விரும்புகிறார்கள் என்று தெரிய வருகிறது. மேலும் அவரது மறுமொழிகளிலிருந்து அவருக்குள் இருக்கும் எழுதும் ஆர்வத்தையும் உணர முடிகிறது. 

எனவே அவர் தொடர்ச்சியாக எழுதா விட்டாலும், அவ்வப்போது அவர் தனது வலைத்தளத்தில் வாசகர்கள் விருப்பத்திற்கு இணங்க எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் இங்கே எனது வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட , மேலே சொன்ன அவரது கட்டுரையையும், படங்களையும் , வாசகர்களின் அனைத்து பின்னூட்டங்களையும் மற்றும் மறுமொழிகளையும் அவரது வலைத்தளத்தில் அப்படியே மீண்டும் வெளியிட்டு தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். (ஏனெனில் வலையுலக நண்பர்கள் அடிக்கடி சொல்லும் வாசகம் இது “வரலாறு முக்கியம் நண்பரே”)

இதுபற்றி நண்பர்கள் யாவரும் தங்களது கருத்துக்களைச் சொல்லலாம்.