Monday 19 September 2011

நடந்தாய் வாழி காவேரி கரையில் நடக்கவே முடியவில்லை!


நடந்தாய் வாழி காவேரிஎன்று பாடியபடி காவிரியின் தொடக்கம்
குடகுமலை தலைக்காவிரி முதல் கடலில் கலக்கும் காவிரிபூம்பட்டினம் வரை இரு கரைகளிலும் நடை போடும் காலம் என்று ஒரு காலம் இருந்தது.கோவலனும் கண்ணகியும் கூட காவிரி கரை வழியாக திருவரங்கம் வந்து மதுரை சென்றதாக சொல்லுவார்கள்.ஆறுகளின் இரண்டு கரைகளும்,ஏரி குளம் இவற்றின் நான்கு கரைகளும் அவைகளுக்கே இயற்கைக்கே சொந்தம்.

ஆனால் இப்போது நிலைமை என்ன?கிட்டதட்ட கரைகளே கிடையாது.கரைகளில் ஆக்கிரமிப்பு செய்து ஆறுகளில் கழிவு நீரை வெளியேற்றுகின்றனர்.பல இடங்களில் பட்டாவே போட்டு விட்டனர்.ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் சம்பதப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி கரைகளை ஜீப்பில் வந்து கண்காணிப்பார்கள்.ஆறு ஏரி குளம் இவைகள் பாதுகாப்பாக இருந்தன.இப்போது இவைகள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் அசுத்தப்பட்டு கிடக்கின்றன.ஊரிலுள்ள இறைச்சிக் கடை கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள்,செப்டிக் டேங்க் கழிவு நீர்கள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகின்றன.கரைகளை சீர் செய்யவோ பலப்படுத்தவோ முடியாத நிலைமை.இதனால் மழைகாலங்களில் ஒரு சின்ன மழை பெய்தால் கூட ஊருக்குள் வெள்ளம்.

நீர் நிலைகளை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அந்தந்த ஊர் மக்களே இதனைச் செய்தால் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு உண்டாகும்.








No comments:

Post a Comment