உரிக்க உரிக்க வெங்காயத்தில்
இறுதியில் ஒன்றுமே இல்லை!
கண்ணீர்தான் வந்தது!
நினைத்து நினைத்துப் பார்த்தேன்
வாழ்க்கை நிலையாமையில் முடிந்தது!
ரசித்து ரசித்துப் பார்த்தேன்
வாழ்க்கை தேனாய் இனித்தது!
குடிசையில் வாழ்ந்தாலும்
கோபுரத்தில் இருந்தாலும்
மனதின் ஆட்டம் ஒன்றே!