Tuesday 4 October 2011

கூடங்குளம் அரசியல்


கூடங்குளம் அணு மின் நிலையம் மின் உற்பத்தி தொடங்கிவிடும் தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று எதிபார்த்துக் கொண்டு இருந்த நேரத்தில் “வேண்டாம்என்று கலகக்குரல்.
1988-இல் அன்றைய ரஷிய பிரதமர் கோர்ப்பசேவும், இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியும் ஒப்பந்தமிட்டு தொடங்கப்பட்ட திட்டத்திற்கு இப்படி ஒரு எதிர்ப்பு வரும் என்று அப்போது யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் கடற்படை தளம் கொண்டு வந்தால் அந்த பகுதி முழுக்க முழுக்க ராணுவ பாதுகாப்பு இடமாக மாறிவிடும்.கரையிலும் கடலிலும் எந்நேரமும் ராணுவ கண்காணிப்பும் நடமாட்டமும் இருக்கும். சிலர் இதை விரும்பாமலும இருக்கலாம். .உதாரணமாக ஒரு ஊருக்குள் போலிஸ் நிலையம் கொண்டு வருவதைப் போல.  இது ஒரு பக்கம்.

அணு மின் நிலையம் தொடங்கிய போது ஆரம்பத்தில் யாரும் பெரிதாக நினைக்கவில்லை. அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியால் அங்குள்ள அணுமின் நிலையங்களுக்கு ஏற்பட்ட கதியை கண்டு மக்கள் மிரள ஆரம்பித்து விட்டனர்.பயம் இன்னும் போகவில்லை. சமூக ஆர்வலர்கள் என்று எல்லோரும் சேர்ந்தவுடன் போராட்டம் உண்ணாவிரதம் என்று ஆரம்பித்து விட்டனர்.தமிழ் நாட்டில் பாதுகாப்பான பகுதிகள் என்று சொல்லப்பட்ட இடங்களில் எல்லாம் இப்போது நில அதிர்வுகள் எட்டிப் பார்த்துள்ளன.எனவே பயம் நியாயமானது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் கூடங்குளம் அணுமின் திட்டத்தின்மீது அதிக நம்பிக்கை கொண்டு இருந்தார்.இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து சமாளித்து விடலாம் என்று நினைத்தார்.எனவே கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள மக்கள் இதனை எதிர்த்து போராட்டம் , உண்ணாவிரதம் இருந்தபோது,முதலில்அணுமின் நிலையத்தை ஆதரித்து அறிக்கை விட்டார்.பிற்பாடு உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அப்படியே பல்டி அடித்து அமைச்சரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசைக் கைகாட்டிவிட்டார்.

மற்ற மாநிலங்களில் இருக்கும் காங்கிரஸார், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தங்கள் மாநில கட்சி வளர்ச்சிக்கு
விளம்பரமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் தமிழ் நாட்டு காங்கிரசார் எப்போதும் இதற்கு விதி விலக்கு. மத்தியில் உள்ள தமிழ் நாட்டு மந்திரிகளை சங்கடத்திற்கு ஆளாக்காமல் பாண்டிச்சேரியைச் சேர்ந்த மத்திய மந்திரி நாராயணசாமியை விட்டு சமாதானம் சொல்லச் செய்தனர்.அவர் வந்தார் சென்றார் அறிக்கை விட்டார்.

கருணாநிதி நினைத்து இருந்தால் அவரது ஆட்சிக் காலத்திலேயே
இந்த திட்டத்தினை பற்றிய ஒரு முடிவு எடுத்து இருக்கலாம். ஆனால் அவரோ அடுத்தமுறை ஆட்சிக்கு வரும்போது இந்த திட்டம் தமக்கு சாதகம் என்று இருந்து விட்டார்.இப்போதும் அவர் அணுமின் நிலையத்தைப் பற்றி திட்டமாக எதனையும் சொல்லவில்லை.

ஆனால் எந்த அரசியல் கட்சியும் உறுதியாக இந்த திட்டத்தினை
எதிர்க்கவுமில்லை.ஆதரிக்கவும் இல்லை. அறிக்கை,மேடைப் பேச்சு என்பதோடு சரி. உள்ளாட்சி தேர்தலுக்குள் எல்லாவற்றையும் நீர்த்துப் போகச் செய்துவிடுவார்கள்.ரஷ்யாவை சமாதானம் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகளைஅதிகப்படுத்தி அணுமின் நிலையம் கொண்டுவர முயற்சி செய்வார்கள். தேர்தல் நேர சண்டைகள் மக்களை பிளவு படுத்தாது இருக்க வேண்டும். .

No comments:

Post a Comment