Showing posts with label தனிமை. Show all posts
Showing posts with label தனிமை. Show all posts

Tuesday, 24 April 2018

தனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)

( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ? அவருக்கு நன்றி)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தனிமை.. ஒரு கொடுமை..

பிள்ளையை.. பெண்ணை பெற்று வளர்த்து.. படிக்க வைத்து ஆளாக்கி.. மணமுடித்து வைக்கிறோம்..வேறு ஊரில.. வேறு மாநிலத்தில்.. வேறு நாட்டில் வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்..

இங்கு.. 70வயதிற்கு மேல் நமக்கு.. வாழ்ந்த வீட்டில் தனிமை..
இங்குதான் என் மகள் படிப்பாள்.. இங்குதான் விளையாடுவாள்..
என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான் என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்ப்போம்..


என்ன சமைப்பது?.. என்ன சாப்பிடுவது?.. அ ரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்.. பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது..

தனிமை.. தனிமை..

அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால் பயணம் ஒரு கொடுமை.. லோயர் பர்த் கிடைக்கவில்லை என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும். சென்னை போன்ற ஊர்களில் சென்ட்ரல் போய்ச் சேருவதே ஒரு பிரம்ம பிரயத்தனம்..

சரி.. பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்.. பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்.. என்றால்..அந்த நேரம் அவர்கள்.. ஏதோ மாலில்... ஏதோ ஓட்டலில்.. ஏதோ ஒரு சினிமா தியேட்டரில் இருப்பார்கள்.. கூப்பிடுகிறேன் என்பார்கள்.. அதற்குள் நமக்குத் தூக்கம் வந்து விடும்..

நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம் அவர்களுக்கு இருக்காது.. மூன்று வயது வரைதான் தாத்தா.. பாட்டி என்று கூப்பிடும்.. பிறகு எப்போது அவர்களை அழைத்தாலும்.. அவன் வெளியே விளையாடுகிறான்.. அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருககிறான்.. அவன் டியூஷன் போய்விட்டான் என்ற பதில்தான் வரும்..

வாரம் ஒரு முறையாவது குழந்தைகளைப் பெற்றவர்கள்.. அவர்களுக்கு, தாத்தா பாட்டி கூட பேசச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.. அப்போதுதான் உறவுகள் விட்டுப் போகாமல் இருக்கும்.அதை விட்டு ஆசையாகக் கூப்பிடும் போது.. வீடியோ காலில் முகத்தைக் காட்டி.. ஹாய்.. என்று ஒன்றைச் சொல் சொல்லிவிட்டு ஓடினால் நமக்கு எப்படி இருக்கும்?

நமது பண்பாடு.. கலாச்சாரம்.. தாத்தா பாட்டி உறவுகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது.. நமது பிள்ளைகள்தான்.. அதை மறக்கக் கூடாது.

எத்தனை நேரம டிவி பார்ப்பது?.. இந்த அரசியல்களும்.. பொய்களும் நம்மை மேலும் கலங்க வைக்கின்றன.ஊடகங்களில் வரும் விவாதங்களை ஒருவன் தவறாமல் பார்த்தால்.. அதுதான் அவனுக்கு ஆயுள் தண்டனை என்றே ஆகிவிட்டது.

வயதானவர்களுக்கு சொந்த வீட்டில் இருந்தாலும், அது ஒருவகையில் முதியோர் இல்லம் போல் ஆகிவிட்டது.

ஏதோ.. வாட்சப்.. முகநூல் என்று இருப்பதினால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது..!!!!

கனவில் கூட நம்முடன் முகநூல் நண்பர்கள் இருப்பது போல் ஒரு பிரமை..
ஏதோ.. மார்க்கம்.. மகேசனும்தான் நமக்கு துணை..

😰😰😰😰😰😰😰