Showing posts with label காந்தி. Show all posts
Showing posts with label காந்தி. Show all posts

Thursday, 21 July 2016

மகாத்மா காந்தியைக் கொன்றது யார்?




நேற்று (20.07.16) காலை வழக்கம் போல தினசரிகளைப் படித்துக் கொண்டு இருந்தேன். ஒரு அரசியல் செய்தி எனது கவனத்தை ஈர்த்தது. 

// ‘மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்.’ என அவதூறாக பேசிய விவகாரத்தில், வருத்தம் தெரிவிக்காவிட்டால், வழக்கு விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று ராகுல் காந்தியை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்தது. ….. …. நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘பஞ்சாப்–அரியானா ஐகோர்ட்டு ஆவணத்தில் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. காந்தியை கோட்சே கொலை செய்தார் என்பதற்கும், காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொலை செய்தது என்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. நீங்கள் (ராகுல் காந்தி) ஒருபடி மேலே போய்விட்டீர்கள். நீங்கள் பொத்தாம்பொதுவாக கூறக்கூடாது’’ என கண்டித்தார்.//
-    (நன்றி : தினத்தந்தி 20.07.2016)

கோர்ட் நடவடிக்கையைப் பற்றி விமர்சனம் செய்வது கூடாது என்பதால், இங்கு இதுபற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. எனினும் மகாத்மா காந்தி கொலை சம்பந்தமாக அன்று வந்த செய்திகளையும், இன்றைய நாட்டு நடப்பையும் ஒப்பிட்டு பார்ப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

அன்றைய செய்திகள்:

மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டபோது வந்த செய்திகள் இவை.
                                                                                                                                                         

// இருபதாம் நூற்றாண்டில் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதாகும், சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, சதித்திட்டம் தீட்டிய ஆப்தே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர் //

மேலும் விவரங்களுக்கு படிக்கவும்- கீழே உள்ள இணையதள முகவரியை சொடுக்கவும் :மகாத்மா - கொல்லப்பட்ட வரலாறு- http://kannalattuthingaasaiya.blogspot.in/2012/02/blog-post_222.html 
.
காந்தி தேசமே காவல் இல்லையா?

இன்றைய காலகட்டத்தில், எல்லாவற்றையும் பார்க்கும்போது, நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில் வரும் ’காந்தி தேசமே காவல் இல்லையா?; என்று தொடங்கும் பாடல்தான் நினைவுக்கு வந்தது.
                                                                                                                                                  
1985 இல் வெளிவந்த இந்த படத்தில் ரஜினிகாந்த் – அம்பிகா சத்தியராஜ் ஆகியோர் நடித்து. இருக்கிற்றர்கள். டைரக்‌ஷன் – எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இசை – இளையராஜா. பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியன் குழுவினர்.கீழே பாடல் வரிகள்.

காந்தி தேசமே காவல் இல்லையா
நீதிமன்றமே நியாயம் இல்லையா
பதவியின் சிறைகளில் –
பாரதமாதா பரிதவிக்கிறாள்

சுதந்திரதேவி சுயநலப் புலிகளின்
துணி துவைக்கிறாள்
துணி துவைக்கிறாள்
தாயை மீட்க வா! தர்மம் காக்க வா!

காந்தியும் நேருவும் வாங்கிய சுதந்திரம்
ஒருசிலர் உரிமையில்லை
வளமிங்கு குறைவில்லை
ஏழைக்கு நிறைவில்லை
வறுமைக்கு வறுமையில்லை
வறுமைக்கு வறுமையில்லை

சாலையில் தனிமையில்
அழகிய இளமையில்
நடக்கவும் முடியவில்லை
நடக்கவும் முடியவில்லை
இளமையும் கலைந்தது
இருபுறம் நரைத்தது
வேலையும் கிடைக்கவில்லை
வேலையும் கிடைக்கவில்லை

ஜாதி என்கின்ற
மாயப் பேயொன்று
ரத்தம் கேட்கின்றதே
தர்மம் தப்பித்துக்
கள்வர் கோட்டைக்குள்
தஞ்சம் கேட்கின்றதே

இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள்
எல்லையில் நிறைந்திருப்பார்
எல்லையில் நிறைந்திருப்பார்
நாட்டினைக் காசுக்கு
காட்டியே கொடுப்பவர்
ஊருக்குள் ஒளிந்திருப்பார்
ஊருக்குள் ஒளிந்திருப்பார்

அகிம்சையைப் போதித்த தேசத்தில்
ரத்தத்தின் ஆறுகள் ஓடுதடா
ஆறுகள் ஓடுதடா
ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல்
வான்வரை ஏறுதடா வான்வரை ஏறுதடா

விடுதலை வாங்க – அன்று நாம் தந்த
விலைகள்தான் கொஞ்சமா?
வேலியே இங்கு பயிரை மேய்கின்ற
நிலைமைதான் மாறுமா?

(பாடலில் உள்ள வரிகளுக்காகவே இந்த பாடலை இங்கு மேற்கோளாகக் காட்டி உள்ளேன். பாடலைக் கண்டு கேட்க கீழே உள்ள திரையை சொடுக்குங்கள். வீடியோ நன்றி SEPL)
                                  
                            (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)