Showing posts with label வாட்ஸ்அப். Show all posts
Showing posts with label வாட்ஸ்அப். Show all posts

Tuesday, 24 April 2018

தனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)

( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ? அவருக்கு நன்றி)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தனிமை.. ஒரு கொடுமை..

பிள்ளையை.. பெண்ணை பெற்று வளர்த்து.. படிக்க வைத்து ஆளாக்கி.. மணமுடித்து வைக்கிறோம்..வேறு ஊரில.. வேறு மாநிலத்தில்.. வேறு நாட்டில் வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்..

இங்கு.. 70வயதிற்கு மேல் நமக்கு.. வாழ்ந்த வீட்டில் தனிமை..
இங்குதான் என் மகள் படிப்பாள்.. இங்குதான் விளையாடுவாள்..
என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான் என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்ப்போம்..


என்ன சமைப்பது?.. என்ன சாப்பிடுவது?.. அ ரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்.. பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது..

தனிமை.. தனிமை..

அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால் பயணம் ஒரு கொடுமை.. லோயர் பர்த் கிடைக்கவில்லை என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும். சென்னை போன்ற ஊர்களில் சென்ட்ரல் போய்ச் சேருவதே ஒரு பிரம்ம பிரயத்தனம்..

சரி.. பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்.. பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்.. என்றால்..அந்த நேரம் அவர்கள்.. ஏதோ மாலில்... ஏதோ ஓட்டலில்.. ஏதோ ஒரு சினிமா தியேட்டரில் இருப்பார்கள்.. கூப்பிடுகிறேன் என்பார்கள்.. அதற்குள் நமக்குத் தூக்கம் வந்து விடும்..

நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம் அவர்களுக்கு இருக்காது.. மூன்று வயது வரைதான் தாத்தா.. பாட்டி என்று கூப்பிடும்.. பிறகு எப்போது அவர்களை அழைத்தாலும்.. அவன் வெளியே விளையாடுகிறான்.. அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருககிறான்.. அவன் டியூஷன் போய்விட்டான் என்ற பதில்தான் வரும்..

வாரம் ஒரு முறையாவது குழந்தைகளைப் பெற்றவர்கள்.. அவர்களுக்கு, தாத்தா பாட்டி கூட பேசச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.. அப்போதுதான் உறவுகள் விட்டுப் போகாமல் இருக்கும்.அதை விட்டு ஆசையாகக் கூப்பிடும் போது.. வீடியோ காலில் முகத்தைக் காட்டி.. ஹாய்.. என்று ஒன்றைச் சொல் சொல்லிவிட்டு ஓடினால் நமக்கு எப்படி இருக்கும்?

நமது பண்பாடு.. கலாச்சாரம்.. தாத்தா பாட்டி உறவுகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது.. நமது பிள்ளைகள்தான்.. அதை மறக்கக் கூடாது.

எத்தனை நேரம டிவி பார்ப்பது?.. இந்த அரசியல்களும்.. பொய்களும் நம்மை மேலும் கலங்க வைக்கின்றன.ஊடகங்களில் வரும் விவாதங்களை ஒருவன் தவறாமல் பார்த்தால்.. அதுதான் அவனுக்கு ஆயுள் தண்டனை என்றே ஆகிவிட்டது.

வயதானவர்களுக்கு சொந்த வீட்டில் இருந்தாலும், அது ஒருவகையில் முதியோர் இல்லம் போல் ஆகிவிட்டது.

ஏதோ.. வாட்சப்.. முகநூல் என்று இருப்பதினால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது..!!!!

கனவில் கூட நம்முடன் முகநூல் நண்பர்கள் இருப்பது போல் ஒரு பிரமை..
ஏதோ.. மார்க்கம்.. மகேசனும்தான் நமக்கு துணை..

😰😰😰😰😰😰😰

Sunday, 31 December 2017

ஃபேஸ்புக்கும் வாட்ஸப்பும் நானும்



,விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடே’ என்ற கதையாக நிறைய வலைப்பதிவர்கள் இப்போது வலைப்பக்கம் எழுதுவது இல்லை. எல்லோரும் எங்கே போனார்கள் என்று தேடித் தேடிப் போனதில், பலரும் ஃபேஸ்புக் (Facebook) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) இரண்டிலும் சங்கமம் ஆகி இருப்பது தெரிந்தது. பலநாட்களாக இவற்றிலிருந்து ஒதுங்கியே இருந்த நானும், அங்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆவலில் அந்த கடலில் குதித்து மீண்டு விட்டேன். ஏற்கனவே நான் இதே பொருளில் எழுதி இருந்தாலும், அனுபவம் காரணமாக இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல்கள்.

                                                                                             
தன்விவரம் (PROFILE) இல்லாத நண்பர்கள்

எனது ஃபேஸ்புக்கில் பல நண்பர்கள் Friend Request கொடுக்கிறார்கள். தெரிந்த முகமாக இருக்கலாம் என்று தேடிப்பார்த்தால் அறிமுகமானவர்களாக இல்லை. சிலர் தங்களது முகமாக வேறொருவர் படத்தை  (தங்களுக்குப் பிடித்த கடவுள், தலைவர், நடிகர், நடிகை இன்னும் சிலர் பூக்களின் படத்தை) முகமூடியாக தங்கள் தன்விவரத்தில் (PROFILE) வைத்து இருக்கிறார்கள்

மேலும், அவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டாலும்  ஃபேஸ்புக்கில் Overview என்று பார்த்தால் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.

Friends – No Friends to show
Photos – Follow ………… to get her public posts in your News Feed
Work and Education - No workplaces to show - No schools to show
Places He's Lived - - No places to show
Family and Relationships - No relationship info to show

காலம் இருக்கும் இருப்பில், எனக்கு எந்த விதத்திலும் அறிமுகம் இல்லாத அல்லது தன்விவரம் (PROFILE) சரியாகச் சொல்லாத அல்லது ஒரு சில அடிப்படை விவரங்கள் கூட தர விரும்பாத - அன்பர்களின் Friend Request ஐ எவ்வாறு ஏற்றுக் கொள்வது அல்லது அல்லது அவர்களைத் தொடர்வது என்று தெரியவில்லை. எனவே நண்பர்களாக ஏற்றுக் கொண்டபின்பும் தன்விவரம் (PROFILE) இல்லாதவர்களையும் எனக்கு அறிமுகம் இல்லாதவர்களையும் மற்றும்  எனது ஃபேஸ்புக் கணக்கில் பெயருக்கு நண்பர்களாக இருப்பவர்களையும் நீக்கி விடுவது நல்லது என்று நினைக்கிறேன். ஆனாலும் அதேசமயம் இன்னொரு மனம் அவர்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்று தடுக்கிறது.

வாட்ஸ்அப் நண்பர்கள்

ஃபேஸ்புக் என்பது ஒருவிதமான மயக்கம் என்றால் வாட்ஸ்அப் என்பதும் ஒருவகை மேனியா எனலாம். இங்கு உள்ள ஒரே சவுகரியம் குழுவில் இருப்பவர்கள் அனைவரது செல்நம்பர்களைக் கொண்டு, அவர்களை இன்னார் என்று அடையாளம் காணுவது எளிது. 

ஆர்வக் கோளாறு காரணமாக திரும்பத் திரும்ப ஒரே தகவலையோ படத்தையோ அல்லது வீடியோ காட்சியையோ பதிவு செய்கிறார்கள். எனது பழைய ஆன்ட்ராய்டு போன் ஒன்று இவற்றாலேயே அடிக்கடி ஹேங்க் ஆகி விடும்; பாட்டரியும் சீக்கிரம் தீர்ந்து விடும். (இப்போது புதிய ஆன்ட்ராய்டு போன் வாங்கி விட்டேன்.)

“அன்புடையீர், தேவையில்லா செய்திகள், படங்கள், வீடியோக்கள் என்று திரும்பத் திரும்ப இங்கே பதியப்படுவதால் எனது செல்போனில் இவற்றை நீக்கவே நான் அதிக நேரத்தை தினமும் செலவிட வேண்டி இருக்கிறது. எனவே வெளியேறுகிறேன்.” என்று சொல்லிவிட்டு, நான் இணந்து இருந்த சில வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து வெளியேறி விட்டேன். எனினும், இப்போதும் தகவல் தொடர்புக்காக வாட்ஸ்அப் கணக்கை முடிக்காமல் தொடர்கின்றேன்.

பொதுவான அம்சங்கள்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இரண்டிலும் காப்பி பேஸ்ட் பதிவர்கள் ஆதிக்கம் அதிகம். நீங்கள் கஷ்டப்பட்டு எழுதும் தகவலோ அல்லது எடுக்கும் படமோ இன்னொருவர் பெயரில் அப்படியே மாற்றம் ஆகி விடுகிறது. ஒருமுறை, ஃபேஸ்புக்கில், ஒரு குழுவில், நான் எனது கேமராவில் எடுத்த புகைப்படத்தை இன்னொருவர் தான் முதன்முறையாக எடுத்தது போல், தனது பக்கத்தில் பதிந்து கொண்டார். இதுபோல் அடிக்கடி நிகழும். ( நான் என்னால் எடுக்கப்பட்ட படம்  தவிர, மற்றவர்களது  படங்களை இணைக்கும் போது  எங்கிருந்து எடுக்கப் பட்டவை என்பதனை சொல்லி விடுவது வழக்கம்) 

ஆனாலும் விழா அழைப்பிதழ்கள், கூட்ட நிகழ்ச்சிகள், இரங்கல் செய்திகள் என்று கருத்து பரிமாற்றம் செய்ய இரண்டு தளங்களுமே சிறப்பாக உதவுகின்றன. இதில் உள்ள ஒரே ஒரு சிரமம் பலர் இந்த இரண்டு சேவைச் செய்திகளையும் தாமதமாக படிக்கிறார்கள், அல்லது பார்ப்பதே இல்லை என்பதால் போனிலும் ஒருமுறை இந்த தகவல்களை சொல்லி விட வேண்டி இருக்கிறது.

பொதுவெளியில் தன்னை நடுநிலையாளராக காட்டிக் கொள்ளும் பலரை, இங்குள்ள பதிவுகள் மூலம், அவர்ளது ஒரு சார்பான கருத்துக்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் முக்கியமான, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சில புரட்சிகரமான குழுவினர், மற்ற பொதுவான குழுக்களிலும் ஊடுருவி, இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார்கள் என்பதுதான். இவர்களுடைய வேலை எந்த அரசாங்கமாக இருந்தாலும் எதிர்ப்பதுதான். எனவே இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் எதிர்கால நலன் கருதி கவனமாக இருப்பது நல்லது.

என்னதான் மாய்ந்து மாய்ந்து  எழுதினாலும், குறுஞ்செய்திகளை விரும்புவோரே இங்கு அதிகம் என்பதனால், நமது பதிவுகளை படிக்காமல் அப்பால் போவோர்களே அதிகம்.படிக்கிறார்களோ இல்லையோ லைக் போடுவோர்கள் அதிகம்.

ஏதேனும் ஒரு பதிவை மறுபார்வை பார்க்க வேண்டுமென்றால், இவ்விரண்டிலும் ரொம்பவே கஷ்டம். அதேசமயம், வலைத்தளத்தில் வாசகர்கள் அதிகம் வருவார்கள் என்பதோடு, பழைய பதிவுகளை உடனே பார்ப்பதும் எளிது
.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே ஃபேஸ்புக், வாட்ஸ்அப் குழுக்களில் இடம் பெற்று இருந்தாலும், நான் முதலிடம் தருவது வலைத்தளத்திற்கு மட்டுமே. 

தொடர்புடைய எனது பிற பதிவுகள்

ஃபேஸ்புக் என்றே சொல்வேன் http://tthamizhelango.blogspot.com/2015/07/blog-post.html
ஃபேஸ்புக்கை (Facebook) முகநூல் என்பது சரியா? http://tthamizhelango.blogspot.com/2015/11/facebook_4.html
வாட்ஸ்அப் குப்பைகள் http://tthamizhelango.blogspot.com/2016/06/blog-post_30.html

               அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு 2018 வாழ்த்துகள்

 
                (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)
 

Thursday, 30 June 2016

வாட்ஸ்அப் குப்பைகள்



ஒரு அவசர ஆத்திரத்திற்கு உதவுமே என்று வாட்ஸ்அப் (WhatsApp) ஐ டவுன்லோட் செய்து தெரிந்த நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சில குழுக்களிலும் என்னை இணைத்துக் கொண்டேன்.

காப்பி பேஸ்டு நண்பர்கள்

ஆரம்பத்தில் நல்லாத்தான் போய்க் கொண்டு இருந்தது. ஒவ்வொரு குழுவிலும் என்ன நோக்கத்திற்காக அவை தொடங்கப் பட்டனவோ அது சம்பந்தப்பட்ட செய்திகள், அறிவிப்புகள் வந்து கொண்டு இருந்தன. அப்புறம் வழக்கம் போல காப்பி பேஸ்டு நண்பர்கள் இங்கும் வந்து விட்டனர். அடுத்தவர் படைப்புகளையோ அல்லது தங்களது ஃபேஸ்புக் தளத்தில் உள்ளவற்றையோ காப்பி பேஸ்டு செய்து போட ஆரம்பித்து விட்டார்கள். உதாரணத்திற்கு கபிலர் குறிஞ்சிப் பாட்டில் பாடிய 99 மலர்கள் பற்றிய விக்கிபீடியா பதிவு மற்றும் அவற்றிற்கான படங்களை இன்னும் காப்பி பேஸ்டு செய்து கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சிலர் நான்தான் தென்னைமரம் பேசுகிறேன், பனைமரம் பேசுகிறேன் என்று ஏதாவது கப்சா விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் அரசியல், சட்டஞானம் எல்லாம் உண்டு.

குப்பைகள்

சிலர் தினம் ஒரு கவிதை. இன்னும் சிலர் காலையில் எழுந்தவுடன், தினமும் ‘Good Morning Friends” என்று சொல்லுகிறார்கள்.. இதுவாவது பரவாயில்லை. சிலர் எப்போதோ நடந்த செய்திகளை இப்போதுதான் நடந்தது போன்று பகிர்வு செய்கிறார்கள். பகிர்வதற்கு முன்பு அது சரியான தகவலா என்று உறுதிப்படுத்திக் கொள்வது கிடையாது. இதுவும் போதாதென்று போட்டோ படங்கள் , வீடியோ படங்கள். என்று திரும்பத் திரும்ப ஊடகங்களிலும் ஃபேஸ்புக் தளங்களிலும் வந்தவைகளையே போட்டு அவை நிரம்பி வழிகின்றன.

இதில் உங்களுக்கு என்ன வந்தது என்று கேட்கலாம். இப்படி வழியும் தேவையற்ற தகவல்களை நீக்குவதற்கே (Clear) நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. அதிலும் இந்த போட்டோக்கள், வீடியோக்கள், செல்போனில் கேமரா மற்றும் படங்கள் உள்ள Photo Gallery பகுதியில் அடைத்துக் கொண்டு ஹேங் (Hang) ஆகி விடுகின்றன. சில உறவினர்கள், நண்பர்கள் அனுப்பும் படங்களும் வீடியோக்களும் போட்டோ காலரியில் எங்கோ புதைந்து விடுகின்றன. சிலசமயம் செல்போனில் போட்டோ எடுக்கமுடியாமல் போய்விடும் நிலை. எனவே ஒவ்வொரு முறையும் Power Off செய்து விட்டு மறுபடியும் Power On செய்து செல்போனை பழையநிலைக்கு கொண்டு வர வேண்டி உள்ளது.  

இது விஷயமாக குழு நிர்வாகிகள் (Admin) எடுத்துச் சொல்லியும் யாரும் கேட்பதில்லை. ஆர்வக் கோளாறு காரணமாக திரும்பத் திரும்ப அப்படியே செய்கிறார்கள். 

எனக்கு வந்த பதில்

நானும் பொறுத்தது போதும் என்று வாட்ஸ்அப்பில் ஒரு குழுவில் அனுப்பிய செய்தி இது.

// …. … சங்க நண்பர்களே! சங்க வளர்ச்சி, நிகழ்ச்சி பற்றிய தகவல்களைத் தாருங்கள். ஏற்கனவே மற்ற சமூக வலைத்தளத்தில் வெளியானவற்றை இங்கு மறுபடியும்  Copy & Paste செய்யாதீர்கள். - இப்படிக்கு தி.தமிழ் இளங்கோ //

உடனே வாட்ஸ்அப் நண்பர் ஒருவர் குழுவில் பகிர்ந்து கொண்ட அவருடைய பதில் இது.

// Give Freedom ma.
  Dont insists post this.
  Post that.
  Spot is to Relax and share
  If the postings annoying.
  Let the admin remove //