இப்போதெல்லாம் பெரும்பாலான கவிஞர்கள் வலைப்பதிவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் வலைப்பதிவர்கள் எல்லோரும் கவிஞர்கள் அல்லர். அதேபோல கவிஞர்களாக மட்டுமே இருப்பவர்களும் உண்டு. அந்த வகையில் கவிஞர்கள் வலைப்பதிவர்கள் என
இரு சாராரையும் உறுப்பினர்களாகக் கொண்டு இலங்குவது வீதி
இலக்கியக் களம், புதுக்கோட்டை ஆகும்.
நேற்று (31.07.2016 –ஞாயிறு)
இவ் வீதியின் 29 ஆவது சந்திப்பு, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய மாடியில் அமைந்து
இருக்கும், ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜில் காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
வழக்கம் போல மறக்காமல் எனக்கும் அழைப்பிதழை மின்னஞ்சல் வழியே அனுப்பி இருந்தார்கள்.
நேற்று காலை 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே
இருந்த வசந்த பவனில் காலை உணவை முடித்துக் கொண்டு பஸ்சில் புதுக்கோட்டை பயணமானேன்.
புதுக்கோட்டை வந்ததும், பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த ’வீதி’யின் ப்ளக்ஸ்
பேனரை படம் பிடித்துக் கொண்டு நிகழ்ச்சிகள் நடக்கும் கல்லூரிக்கு சென்றேன்.
(படம் மேலே) விழா நடந்த அறை வாசலில் புதுக்கோட்டை கம்பன் விழாவிற்கு
வந்து இருந்த, விருத்தாசலம் ஓவியர் மோகன் அவர்கள் சிடி கடை வைத்து இருந்தார்.
நிகழ்ச்சிகள்:
முனைவர் நா.அருள்முருகன் அவர்களின், புதுக்கோட்டை மாவட்டப் பாறை
ஓவியங்கள் என்ற புத்தக அறிமுகம், சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் நாறும்பூ நாதன்
அவர்களின் சிறப்புரை மற்றும் மறைந்த கவிஞர் வைகறை குடும்பநிதி வழங்குதல் என்று மூன்று நிகழ்ச்சிகள்
ஒருசேர நடைபெற்றன. ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் தலைமை தாங்கினார். நூல்
அறிமுகத்தை, கவிஞர்கள் கு.ம.திருப்பதி, ராசி
பன்னீர் செல்வன் மற்றும் தங்கம் மூர்த்தி ஆகியோர் சிறப்புற செய்தனர். பின்னர் எழுத்தாளர்
நாறும்பூ நாதன் அவர்கள் சிறப்புரை செய்ய, முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் ஏற்புரை
செய்தார்.
கூட்டத்தின்
முடிவில் சகோதரி ஆசிரியை மு.கீதா
அவர்கள் , பணம் கொடுத்தவர்கள் பட்டியலை வாசித்திட, மறைந்த கவிஞர் வைகறை மனைவி ரோசலின் மற்றும் அவர்களது மகன் ஜெய்க்குட்டி ஆகியோரிடம் குடும்பநிதி வழங்கப்பட்டது. ( LIC Endowment Policy For Rs
2,03,000/= (Rupees two lakhs and three thosand only) மற்றும்
ரொக்கப் பணமாக ரூ 40,500/=)
இன்று (01.08.16) மீண்டும் ரூ 10,000/= வழங்கப்படுகிறது.)
இன்று (01.08.16) மீண்டும் ரூ 10,000/= வழங்கப்படுகிறது.)
கூட்ட அமைப்பாளர்கள் கவிஞர்கள் நீலா மற்றும் பா.ஸ்ரீ
மலையப்பன் ஆகிய இருவரும் கூட்ட ஏற்பாடுகளை சிறப்புற செய்து இருந்தனர்
(படம் மேலே) மேடையில் (இடமிருந்து வலம்) ராசி. பன்னீர் செல்வன்,
நா.முத்துநிலவன், நா.அருள்முருகன் மற்றும் கு.மா.திருப்பதி
கீழே உள்ள படங்கள் கவிஞர்
பா.ஸ்ரீ மலையப்பன் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொண்டவை.




