Thursday 3 November 2011

ஓம் சக்தி தீபாவளி மலர் ( 2011 )


தீபாவளி மலர் என்றாலே அழகிய வண்ணப் படங்களும்,கதை, கட்டுரை, கவிதை என்று பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பின ரையும் படிக்க வைக்கும். இந்த ஆண்டு (2011) நவம்பர் மாதம் வந்துள்ள ஓம் சக்தி (ஆசிரியர் நா.மகாலிங்கம்) மாத இதழ் தீபாவளி மலராக பழமை
யும், புதுமையும் கலந்து வெளி வந்துள்ளது.

பூமியில் ஆப்பம் சுட்டுக் கொண்டிருந்த அவ்வைப் பாட்டி நிலாவுக்கு எப்படி போனார்?. பழைய அவ்வையார் கதைகளை தனக்கே உரிய நடையில் நகைச் சுவையாக தருகிறார் கி.ராஜநாராயணன். கூச்சலும் குழப்பமுமாக இருந்த பாராளுமன்ற கூட்டங்களை பொறுமையுடன் நடத்திய முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் சுவையான பேட்டிக்கட்டுரை. நெல்லை முத்து என்பவரின் கட்டுரையில் எதேச்சையாகவும், தற்செயலாகவும் எப்படி விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு வந்தது என்பதனை இயல்பாகச் சொல்லு கிறார். கல்லாடத்தில் உள்ள இசைக் குறிப்புகள் குறித்து கன்னியாஸ்திரி டாக்டர் மார்கரெட் பாஸ்டின் ஒலிக்கிறார். கொச்சி சமஸ் தானத்தில் நிலவிய சமூக வேறுபாடுகளை ஏ.எம்.சாலன் என்பவர் தொகுத்து அளித் துள்ளார்.

நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் நா,மகாலிங்கம் அவர்கள் “கிராமத்து வறுமை போக்கும் திட்டம் எது?என்று கேள்வி கேட்கிறார்.  அந்த காலத்து ரயில்வே குவாட்டர்ஸ், டிஸ்பென்சரி, ரயிவே ஊழியர்கள் என்று அசோகமித்திரன் இழுத்துச் செல்கிறார்.. சில சமயம் சிலருக்கு யாரோ காதுக்குள் யாரோ பேசுவது போல் இருக்கும்.இதனை வழக்கம் போல கேலி செய்து நகைச்சுவை பண்ணுகிறார், பாக்கியம் ராமசாமி. இன்னும் தமிழ் எழுத்துலகில் நன்கு அறியப் பட்ட எழுத்தாளர்களின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று நிரம்பி வழிகின்றது. எழுத்தாளர்களின் புகைப் படங்களை அவர்களது படைப்புகளின் பக்கங்களிலேயே வெளியிட்டு இருப்பது ஓம் சக்தி தீபாவளி மலரின் தனிச் சிறப்பு ஆகும். இதனால் எழுத்தாளர்களின் முகங்களைக் காணலாம்.


மேலும் சக்தி தீபாவளி மலரில் எதிபார்த்ததைப் போலவே வண்ண வண்ண படங்கள் விரவிக் கிடக்கின்றன. கட்டுரைகளுக்கு ஏற்ற புகைப் படங்கள் மின்னுகின்றன. விளம்பரதாரர் படங்களும் அவ்வாறே. நூலின் விலை அதிகமில்லை. ரூபாய் 70 மட்டுமே. இலக்கிய விருந்து படைத்திட்ட ஓம் சக்தி பணி தொடரட்டும். 








3 comments:

  1. ஓம்சக்தி தீபாவளிமலர் எப்போதும் மெருகோடு வரும் நீங்களூம் மலரைப்பற்றி அழகாய் எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. // VANJOOR said...//
    வணக்கம் வாஞ்ஜூர் அவர்களே! வருகைக்கு நன்றி! உங்கள் வலைப் பதிவில் எனது கருத்தினை பதிந்துள் ளேன்

    ReplyDelete
  3. //ஷைலஜா said...//
    வணக்கம் கண்ணன் பாட்டு ஷைலஜா அவர்களே! கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete