Sunday 29 January 2017

வலையுலக அனுபவங்கள்



(இன்று (29.01.2017 ஞாயிறு) வீதி – கலை இலக்கிய அமைப்பின் 35 ஆவது சந்திப்பு, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய மாடியில் அமைந்து இருக்கும், ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜில் காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது அந்த கூட்டத்தில் பேசுவதற்கு உதவியாக நான் எடுத்து வைத்து இருந்த எனது கட்டுரை இது)
.
கூட்டத்தின் தலைவர் T.சுதந்திரராஜன் அவர்களுக்கும், அமைப்பாளர் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும் புரவலர் கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கம். ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்கள் நேற்று முன்தினம் இம்மாத வீதி இலக்கிய கூட்டத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை (29.01.2017)  உங்கள் வலையுலக அனுபவங்கள் என்ற தலைப்பில் பேச முடியுமா என்று கேட்டார். நானும் சரி என்று சொல்லி, அப்போதே எனது வலைத்தளம் சென்று  குறிப்புகள் எடுக்கத் தொடங்கி விட்டேன்.  வலையுலக அனுபவங்கள் என்று எடுத்துக் கொண்டால், தொடர்ந்து எழுதும் எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பது எனது கருத்து. 

வலைப்பூ தொடக்கம் 

எங்கள் வீட்டில் 2005 இல் கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் இணைப்பு வாங்கியவுடன், தமிழ்மணம் போன்ற தமிழ் திரட்டிகளை படிக்கும் வாசகனாகவே இருந்தேன். பின்னர் கருத்துரைகளை எழுதும் ஆர்வம் வந்தபோது, தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியாது. எனவே வலைப்பதிவில் ஞானவெட்டியான் என்னும் பெயரில் எழுதிவந்த திரு ஜெயச்சந்திரன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அவர் இகலப்பை (eKalappai) என்ற தமிழ் எழுதியைப் பற்றி சொன்னார். இவர் நான் பணிபுரிந்த வங்கி கிளையில் எங்களுக்கு கள அதிகாரியாக இருந்தவர். இந்த இகலப்பை உதவியால் வலைப்பதிவுகளில் Open ID மூலம் பின்னூட்டங்கள் எழுதி வந்தேன். பின்னர் நாமும் ஒரு வலைப்பூ தொடங்கலாமே என்று யோசித்தபோது  வேர்ட் ப்ரெஸ்சிலா (Wordpress) அல்லது ப்ளாக்கரிலா (Blogger) என்று யோசித்தபோது, எல்லோரும் அதிகம் பயன்படுத்தும் ஜிமெயில் வழியான ப்ளாக்கரைத் தேர்ந்தெடுத்து ’பூவரசம் பூ’ என்ற வலைத்தளத்தை தொடங்கினேன். ஆனால் அதில் தமிழ்மணம் ஓட்டுபட்டைக்காக, HTML இல் மாற்றம் செய்தபோது அந்த வலைத்தளமே காணாமல் போனது. எனவே சில மாதம் சென்று, எனது எண்ணங்கள் http://tthamizhelango.blogspot.com என்ற இப்போதைய வலைத்தளத்தினை 19 செப்டம்பர் 2011 அன்று தொடங்கி  எழுதி வருகிறேன். வலைப்பதிவர்  திரு Faizal K.Mohamed  அவர்கள் எழுதிய. ஒரு கட்டுரையைப் படித்த பின்பு NHMWriter என்ற தமிழ் எழுதியையே இன்று எல்லா வகையிலும் பயன்படுத்தி வருகிறேன்.

என்ன எழுதுவது? 

தொடக்கத்தில் இலக்கியம் சம்பந்தமான பதிவாகவே இருக்க வேண்டும் என்று எழுதத் தொடங்கினேன். பின்னூட்டங்கள் என்று எடுத்துக் கொண்டால், ஆரம்பகாலத்தில் என்னுடைய பல பதிவுகளுக்கு பூஜ்யம்தான். இதனை ஆதங்கமாக வைத்து ஒரு பதிவு ஒன்றை (புதிய பதிவர்களே! பின்னூட்டம் பற்றி கவலைப் படாதீர்கள்!) வெளியிட்டேன். http://tthamizhelango.blogspot.com/2011/10/blog-post_25.html அதில் அப்போது அடிக்கடி வலையுலகில் வலம் வந்த வவ்வால் என்பவர்,

// சாரே கவலைப்பட்டாதிங்க நான் உங்களுக்கு ஆதரவு தரேன்.(பின்னூட்டம் கிடைக்காம ரொம்ப நொந்து போயிருப்பிங்க போல தெரியுது) இப்படி மரங்களை காப்போம், மண் வளம் காப்போம் , விவசாயிகள் பாவம்னுலாம் பதிவுப்போட்டா யாரும் எட்டிப்பார்க்கமாட்டங்க(அனுபவம்) சினிமா விமர்சனம்(கில்மா படமா இருந்த டபுள் ஓகே) அடல்ட் ஜோக், கிசு..கிசு எழுதீனா கல்லா கட்டலாம்! :-)) நான் கூட பேங்கில இருந்து வீஆரெஸ் வாங்கலாம்னு பார்க்கிறேன், ஆனால் ஒரு பேங்கிலும் எனக்கு வேலைத்தரமாட்டேன்கிறாங்க :-)) //

என்று நகைச்சுவையாக பின்னூட்டம் எழுதி இருந்தார். அவரது பின்னூட்டம் என்னை யோசிக்க வைத்தது. எனவே வலையுலகை ஒரு மீள்பார்வையாக பார்த்தேன். அப்போது வலையுலகில் மதச் சண்டை, ஜாதிச் சண்டை என்று ஒருபோக்கு ஓடிக் கொண்டு இருந்தது. எனவே எந்த நீரோட்டத்திலும் கலக்காது, அரசியல், அனுபவம், இலக்கியம், கவிதை, நூல் விமர்சனம், சினிமா, என பல்வேறு தலைப்புகளில் எழுதத்தொடங்கினேன். குறிப்பாக சினிமா, அரசியல் என்று எனது பழைய அனுபவங்களோடு நிகழ்கால சூழலையும் கலந்து எழுதியபோது எனது தளத்திற்கு நிறையபேர் வந்தார்கள். எந்த ஒரு பதிவையும் நமது அனுபவத்தோடு, நம்பகத் தன்மையோடு, மற்றவர்களை காப்பி செய்யாமல் நமது தனித் தன்மையோடு எழுதினால் வலையுலகில் நிச்சயம் வரவேற்பு உண்டு. நான் எனது தன்விவரத்தை (PROFILE) வெளிப்படையாகவே வைத்துள்ளேன்..எந்த பொருளில் எழுதினாலும், பொதுவெளியில் இந்தப் பதிவால் ஏதேனும் சட்ட சிக்கல் வருமா என்பதனையும் யோசித்துக் கொள்வேன். 

விமர்சனங்கள் (COMMENTS)

பல்வேறு தலைப்புகளில் எழுதினாலும் எனது தளத்திற்கு வந்து ஊக்கமளித்தவர்கள் மட்டுமல்லாது எதிர்மறை கருத்து தெரிவித்தவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் என்று எல்லோரும் உண்டு. பெரும்பாலும் அவைகள் எல்லாவற்றிற்கும் மறுமொழிகள் கொடுத்து விடுவேன். அதேபோல அவர்களுடைய வலைத்தளங்கள் சென்று எனது கருத்துரையையும் எழுதுவேன். ஆனாலும் ஒருகட்டத்தில் பெயரிலிகள் (Anonymous), முகமூடிகள், போலிகள் (Fake ID) என்று விதண்டாவாதம் செய்பவர்களின் தொந்தரவுகள் அதிகமாக இருந்தது. எனவே எனது வலைத்தள Comments Settings சென்று, அதில் இருந்த Anonymous தேர்வை நீக்கி விட்டேன். இருந்தாலும் சிலர் பேருக்கு ஒரு ஐடியை வைத்துக் கொண்டு வருகிறார்கள் (அவர்கள் தன்விவரம் (PROFILE) சென்று பார்த்தால் ஒன்றுமே இருக்காது) அவர்களால் பிரச்சினை ஏதும் இல்லாத வரை சரிதான்.

வலைப்பதிவர் சந்திப்பு:

நான் தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்தது நமது வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றால் மிகையாகாது. அந்த வகையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் நிறைய பதிவர்களை சந்திக்க முடிந்தது. இதன் பெருமை புதுக்கோட்டை ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களையே சேரும். அடுத்து மூத்த வலைப்பதிவர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை முன்னிட்டு பல வலைப்பதிவர்கள் எனக்கு அறிமுகம் ஆனதோடு சிலரை பதிவர்கள் சந்திப்பிலும் சந்திக்க முடிந்தது. மூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களும் எந்த ஊர் சென்றாலும், அந்த ஊர் வலைப்பதிவர்களைச் சந்திப்பதில் ஆர்வம் உள்ளவர்.

இந்த அடிக்கடியான வலைப்பதிவர் சந்திப்பின் வெற்றிக்கான முக்கியமான காரணம், அவரவர் எல்லையை உணர்ந்து , அவரவர் இடத்தில் இருந்து கொண்டு நட்பை தொடர்வதுதான்.
     
தொழில்நுட்ப அனுபவங்கள்:

வலைப்பதிவர் ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு மின்னஞ்சலும் , வலைப்பதிவிற்காக இன்னொரு மின்னஞ்சலும் வைத்துக் கொள்வது நல்லது. 

எனது வலைத்தளத்திற்கான எந்த தொழில்நுட்ப உதவி என்றாலும், Blogger இல் உள்ள Help பகுதிக்கு சென்று தேடுவேன். அல்லது Google சென்று ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் தேடினால் நிச்சயம் தீர்வு கிடைத்துவிடும். 

ஒருமுறை ஏற்கனவே வெளிவந்த, ’எல்லோர் கையிலும் ‘ரிவால்வர்’ என்ற பதிவினை எடிட் செய்யும்போது, DASHBOARD இல் ஏதோ ஒரு குழப்பத்தில் தவறுதலாக நீக்கி விட்டேன். பின்னர் Google's cache உதவியுடன் கண்டெடுத்து மீண்டும் அப் பதிவையும் அதிலுள்ள பின்னூட்டங்களையும் அப்படியே வெளியிட்டேன்.

என்னால் ஏதேனும் முடியாத பட்சத்தில் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு போன் செய்து அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே செய்து விடுவேன். நான் வலைப்பதிவு தொடங்கிய காலத்தில் எனது வலைப்பதிவில் Reply Button கிடையாது. ஏற்கனவே சுட்டுக் கொண்ட அனுபவம் காரணமாக, நானாகவே HTML இல் மாற்றம் செய்ய எனக்கு பயம். எனவே நான் என்னுடைய பாஸ் வேர்டை அவருக்கு அனுப்பி வைத்து மாற்றம் செய்து கொண்டேன். இப்போது ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் கீழே நான் மறுமொழிகள் எழுத எளிமையாக இருக்கிறது. 


44 comments:

  1. நல்ல கட்டுரை. வலை உலகில் உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் சொன்ன நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  2. எந்த ஒரு பதிவையும் நமது அனுபவத்தோடு, நம்பகத் தன்மையோடு, மற்றவர்களை காப்பி செய்யாமல் நமது தனித் தன்மையோடு எழுதினால் //////// நல்ல ஆலோசனை. உங்கள் அனுபவங்கள் அனைத்தும் அருமை .

    ReplyDelete
  3. அனுபவங்கள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக, சிறப்பாக இருந்தன! மேன்மேலும் பல சிறப்பான‌ பதிவுகள் வழங்க இனிய வாழ்த்துக்கள்!


    ReplyDelete
  4. நீங்கள் பேசிய கிளிப்பி்ங் இருந்தால் இணைத்து விடுங்க ,கேட்டு மகிழ்வேன்(ம்:)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி. நான் இதுவரை அந்த ஆடியோ தொழில் நுட்பத்தை எனது பதிவினில் பயன்படுத்தியதில்லை.மேலும் இங்கே நான் வலைப்பதிவில் வெளியிட்டுள்ள இந்த கட்டுரை, எனக்கு மேடையில் பேசுவதற்கு வசதியாக குறிப்புகளுக்காக மட்டுமே எடுத்துச் சென்றேன்: எனவே இதனை அப்படியே பேசவில்லை.அங்கு மேடையில் நான் பேசிய பேச்சுக்கும், மற்றவர்களோடு செய்த கருத்துரையாடலுக்கும் இந்த கட்டுரைக்கும் நிறையவே வித்தியாசம்.

      Delete
  5. வலையுலக அனுபவங்கள் பற்றி, தெளிவான கருத்துக்களை தங்கள் பாணியில் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்குப் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்கள் பாராட்டினுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      Delete
  6. மிகவும் மகிழ்ச்சி சார்..நன்றி

    ReplyDelete
  7. உங்கள் அனுபவங்கள் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும். நல்ல குறிப்புகள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  8. தங்களின் அனுபவங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமையும்ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

      Delete
  9. உங்கள் அனுபவம் சிந்திக்க வைக்கிறது. என்னை போன்ற ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு பயனுள்ள கட்டுரை இது

    ReplyDelete
    Replies
    1. ராஜி ராஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  10. மிகவும் நன்றி ஐயா... உதவி செய்ய எனக்கொரு வாய்ப்பு, அவ்வளவே...

    // தனித் தன்மையோடு எழுதினால் வலையுலகில் நிச்சயம் வரவேற்பு உண்டு // 100% உண்மை...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. தங்களது அனுபவம் பிறருக்கு பாடமாகும் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

      Delete
  12. வெளியுலகில் தங்களுக்கு ஏற்பட்ட பலவித அனுபவங்களை சுவையாக தொகுத்து தந்துள்ளீர்கள். அருமை.

    ReplyDelete
  13. வெளியுலகில் என்பதை வலையுலகில் என்று மாற்றி வாசிக்கவும். தவறுதலாக தட்டச்சில் வந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  14. அற்புதமான கட்டுரை
    இதைப் படித்து முடித்ததும்
    நான் வலையுலகில் கற்றுக் கொள்ள
    வேண்டியது நிறைய உள்ளதாக உணர்ந்தேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களுக்கு நன்றி. வலையுலகில் கற்றது கையளவு; கல்லாதது இணைய உலக அளவு.

      Delete
  15. தங்களின் வலையுலக அனுபவம் கிட்டத்தட்ட அதே போன்றுதான் எங்களுக்கும் தொடக்க நிலையில் இருந்தது. பின்னூட்டம் என்பது சுத்தமாக இல்லை. என்னடா இது என்று நினைத்து நாங்கள் பல தளங்களூக்குச் சென்று கருத்திட்ட போதிலும்.எங்களுக்கு முதன் முதலில் வந்துகருத்திட்டவர் நம்ம பகவான்ஜி அதுவும் அப்போது வெளியாகியிருந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் பாணியில் நகைச்சுவை பதிவு ஒன்று எழுதிட அதற்கு முதன் முதலாக பகவான்ஜி அவர்கள்தான் கருத்திட்டு தமிழ்மணத்தில் இணைப்பதற்கு யோசனை சொன்னார். எப்படி இணைப்பது அவரிடமே கேட்க அவர் டிடி அவர்களைக் கைகாட்ட அப்புறம் என்ன இதோ இன்று வரை என்ன டெக்னிகல் என்றாலும் டிடி என்று விளிப்பு!! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் அகத்திற்கும் கூட்டம் சேர ஆரம்பித்தது என்றாலும் ஒரு சில தளங்களைப் போல அதிகம் கிடையாது. இப்போதும் 10, 12 க்க்குள் இருக்கும்...எங்களால் முடிந்த அளவிற்குப் பிற தளங்கள் செல்வதுண்டு.அவர்கள் வருகிறார்களா இல்லையா என்பதெல்லாம் இல்லை. பதிவுகளுக்குக் கருத்திட முடிந்தால் இடுவதும் உண்டு. எல்லாம் செல்ல இயலவில்லை என்றாலும். அதே போன்றுதானே எல்லாருக்கும் இல்லையா அதனால் நேரம் இல்லை என்றால் நம் தளத்திற்கு வர இயலாதுதானே என்று நினைத்துக் கொள்வதுண்டு. அப்படிச் சென்றால் அந்தத் தளத்தவர்கள் வரவு உண்டு. எனவே, பதிவுகளை விரும்பினால், நேரமிருந்தால் வருவார்கள் என்று நினைத்துவிடுவதுண்டு. நமக்கு தவறாது வரும் நண்பர்கள் இருக்கிறார்கள்...அதில் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் வரவேற்றுக் கொண்டு நாம் கற்றுக் கொள்ளவும் நிறைய இருக்கிறது, தங்கள் பதிவிலும் பாடங்கள் நிறைய என்று கற்றுக் கொண்டு அப்படியே செல்கிறது..

    நல்ல பதிவு. வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. சகோதர சகோதரி இருவரின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

      .// எங்களால் முடிந்த அளவிற்குப் பிற தளங்கள் செல்வதுண்டு.அவர்கள் வருகிறார்களா இல்லையா என்பதெல்லாம் இல்லை. பதிவுகளுக்குக் கருத்திட முடிந்தால் இடுவதும் உண்டு. எல்லாம் செல்ல இயலவில்லை என்றாலும். அதே போன்றுதானே எல்லாருக்கும் இல்லையா அதனால் நேரம் இல்லை என்றால் நம் தளத்திற்கு வர இயலாதுதானே என்று நினைத்துக் கொள்வதுண்டு. //

      என்று நீங்கள் சொல்வது சரிதான். முன்பு வலைப்பூ மட்டும் இருந்தது. ஆனால் இப்போதோ ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று நிறைய விஷயங்கள். கூடவே தனிப்பட்ட அலுவல்கள், பிரச்சினைகள். எனவே பல நண்பர்களின் வலைத்தளங்களைப் படிக்க மட்டுமே முடிகிறது. படிக்காமல் பின்னூட்டம் இடமாட்டேன். என்னுடைய இப்போதைய, சூழ்நிலை, சிலசமயம், எனது பதிவிற்கான மறுமொழிகளையும், நண்பர்களுக்கான பின்னூட்டங்களையும் எழுத இரவு 11 மணிக்கு மேலும் நீண்டு விடுகிறது.

      Delete
  16. வலைப்பதிவு பதிவில் என்னையும் பற்றிக் குறிப்பிட்டது மகிழ்ச்சி தருகிறது எனக்கும் பின்னூட்டங்கள் பற்றிய ஆதங்கம் நிறையவே உண்டு. ஒரு வார்த்தையில் வெறும்புகழ்ச்சி மட்டும் தரும் பின்னூட்டங்கள் சில நேரங்களில் வருத்தமளிக்கும் வாசித்துதான் எழுதுகிறார்களா என்னும் சந்தேகம் வரும் இது பற்றி நிறையவே கூற இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நான் உங்கள் பதிவுகளையும், அதில் வரும் பின்னூட்டங்களையும் படித்தவரை, உங்களுக்கு வரும் பின்னூட்டங்கள் யாவும் படித்துவிட்டுதான் எழுதுகிறார்கள் என்று நிச்சயம் என்னால் சொல்ல முடியும். ஏனெனில் உங்கள் வாசகர் வட்ட நண்பர்கள் யாவரும் வாசிப்பு ஆர்வம் உள்ளவர்கள். ஃபேஸ்புக்கில் லைக் போடுதல் சமாச்சாரமே வேறு. அவர் மனதை அவரன்றி வேறு யாரும் அறியார்.

      Delete
  17. வாழ்த்துகள் ஐயா.தொடருங்கள் தொடர்கிறேன்.

    ReplyDelete
  18. தங்களின் எண்ணங்களை அருமையாக வெளிப்படுத்தி வருகிறீர்கள் என்பதை தங்களது பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் சொல்ல விரும்புகிறேன். ஒரு வலைப் பக்கத்தை தொடங்கி நடத்துவதென்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். பின்னோட்டத்டைப் பற்றி கவலைப்படாமல் ‘போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்’ என்ற தங்களின் பாணி எனக்குப் பிடித்திருக்கிறது. வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நமக்காக எழுதுகிறோமா இல்லை நிறைய பேர் வாசித்துப் பின்னூட்டம் இட வேண்டும் என்பதற்காக எழுதுகிறோமா என்பது வலையுலகில் விடைதெரியாத ஒரு கேள்வி.

      நான் தவறாது வாசித்து விடும் ஏழெட்டு பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமே இருக்காது. இருந்தாலும் அவர்களும் சளைக்காமல் வாரத்திற்கு இரு பதிவுகள் போட்டு விடுவது இன்னொரு ஆச்சரியம்.
      இன்னும் சிலர் நாம் விரும்பினாலும் பின்னூட்டம் போட முடியாதபடிக்கு பதிவுகள் எழுதுகிறார்கள்.

      இந்த மாதிரியான நிறைய ஆச்சரியங்கள் பதிவுலகில் உண்டு.

      சில வரலாற்று உண்மைகளை அனுபவ உணர்வுடன் கடந்தவன் என்ற நிலையில் நினைப்பதை அப்படியே எழுத முடியாத சில வருத்தங்களும் எனக்குண்டு.

      மனத்தில் நினைப்பதை மறைக்காது எழுதும் உங்கள் பாணி எனக்கு எப்போதும் பிடிக்கும்.

      Delete
    2. கருத்துரைகள் தந்த அய்யா V.N.S அவர்களுக்கும் , எழுத்தாளர் ஜீ.வி. அவர்களுக்கும் நன்றி.

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. அருமையான அனுபவ பாடங்கள் ஐயா...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. கவிஞர் நாகேந்திர பாரதிக்கு நன்றி.

    ReplyDelete
  22. நான் இலங்கையிலிருந்து வருகிறேன்.. தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. தொடர்ந்து இன்னும் எதிர்பார்கிறேன்..

    ReplyDelete
  23. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது....தங்களின் வலையுலக அனுபவங்கள் மூலமாக நான் எதிர்கொண்ட சில பிரச்னைகளையும் கண்டேன். பதிவர்களுக்குப் பயனுள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி. எனது சூழ்நிலையும் வலையுலகிற்கு தொடர்ந்து வர இயலாதவாறு உள்ளது.

      Delete
  24. உங்கள் அனுபவங்கள் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் ... உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அய்யா.!!

    ReplyDelete