Thursday 28 January 2016

’பயணங்கள் முடிவதில்லை’ - By VGK

Gmail

’பயணங்கள் முடிவதில்லை’ - By VGK



(மூத்த வலைப்பதிவர் அய்யா திரு VGK (http://gopu1949.blogspot.in வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் “பல்வேறு காரணங்களால் என் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் கொடுக்க எனக்குத் தற்சமயம் விருப்பம் இல்லை” என்று கீழே உள்ள கட்டுரையை எனது வலைத்தளத்தில் வெளியிடச் சொல்லி மின்னஞ்சல் வழியே அனுப்பி வைத்துள்ளார். அவரது விருப்பப்படி அதனை அப்படியே இங்கு வெளியிட்டுளேன்)





’பயணங்கள் முடிவதில்லை’
தொடர்பதிவு 
By வை. கோபாலகிருஷ்ணன்

எனது அருமை நண்பர் 
திருச்சி திருமழபாடி திரு. தி. தமிழ் இளங்கோ 
அவர்களின் அன்புக்கட்டளைக்காக 
எழுதி அனுப்பப்பட்டுள்ளது.

Reference:  




 



1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

என் பெரிய அக்காவுக்கு, திருச்சி-தஞ்சை மார்க்கத்தில், தஞ்சாவூர் பக்கம் சூலமங்கலம் என்ற கிராமத்தில் 1954 இல் திருமணம் நடைபெற்றது. அப்போது எனக்கு  4 அல்லது 5 வயது மட்டுமே. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் கடும் ஜுரமாகவும் அப்போது இருந்துள்ளது. திருச்சியிலிருந்து ரயிலில் திருமண சாமான் - சட்டிகளுடன் என்னையும் என் வீட்டார் சூலமங்கலம் கிராமத்திற்குக் கூட்டிப்போனார்கள். திருமண சாமான்களை அவசர அவசரமாக ரயிலிலிருந்து இறக்கும் போது என்னையும் ஒரு மூட்டை போல நினைத்து தொப்பென்று கீழே போட்டார்கள். அது எனக்கும் இன்னும் நன்கு நினைவில் உள்ளது. 

2. மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?




(1)

என் 25வது வயதில், 1975 டிஸம்பர் மாதம் என் அலுவலக நண்பர்கள் சிலருடன் (என்னையும் சேர்த்து மொத்தம் ஆறு ஆண்கள் மட்டுமே) சென்னை, மும்பை, கோவா, பெங்களூர், மைசூர் போன்ற இடங்களுக்கு முதல் LTC யில் சென்று வந்தேன். நான், முருகன், ராஜேந்திரன், சிவலிங்கம், வேலு என நாங்கள் ஐவரும் நெருங்கிய நண்பர்கள். வேலுவின் நண்பர் என்ற முறையில் எங்களுக்கு அதிக அறிமுகம் இல்லாத மற்றொருவர் .... அவர் பெயரை ‘ரவி’ என நாம் இங்கே வைத்துக்கொள்வோம்.

சென்னை to மும்பை தனி கூபேயில் நாங்கள் ஆறுபேர்கள் மட்டுமே ஜாலியாகச் சென்றோம். 



மும்பை to கோவா 24 மணி நேரப்பயணமாக முதன் முதலாக கப்பலில் ஏறிச்சென்றோம். கோவாவில் நடுக்கடலில் கப்பலிலிருந்து இறங்கி ஸ்டீம் போட்டில் பயணம் செய்து கோவாவின் தலைநகர் பனாஜியின் கரையை அடைந்தோம். 

மும்பையிலும் கோவாவிலும் பல இடங்களைச் சுற்றி மகிழ்ந்தோம். ஒவ்வொன்றையும் பற்றி ஒவ்வொரு தனிப்பதிவே எழுதக்கூடிய அளவுக்கு, ஏராளமான நகைச்சுவைச் சம்பவங்கள் நிகழ்ந்த, மிகவும் இனிய பயணம் அது.

அவற்றில் மறக்க முடியாத ஒரு சின்ன சம்பவம்: 

தமிழும் சரளமான ஹிந்தியும் தெரிந்த வழிகாட்டி ஒருவருடன், நாங்கள் ஊரைச்சுற்றிப்பார்க்கும் போது, மும்பையில் ரெட்-லைட் ஏரியா என்ற மிக நீண்ட தெருவிலும் நாங்கள் நடந்து செல்ல நேர்ந்தது. இருபுறமும் ஏராளமான வீடுகள். வாசல் கதவுகள், மாடிப்படிகள். பால்கனிகள். சின்னச்சின்ன வயதில் ஏராளமாகவும், தாராளமாக ஆயிரக்கணக்கான குட்டிகள். எங்கள் கைகளைப்பிடித்து இழுக்காத குறை மட்டுமே. 

15 வயது முதல் 50 வயது வரை, அரையும் குறையுமாக ஆடைகளை அணிந்துகொண்டு, முகம் பூராவும் ஜோராக மேக்-அப் போட்டுக்கொண்டு, உணர்ச்சிகளைத் தூண்டும் வண்ணம் பல்வேறு செய்கைகளில் எங்களை நோக்கி அவர்களின் அழைப்புகள் இருந்தன. 

தப்பித்தோம் பிழைத்தோம் என நாங்கள் வேகமாக நடந்து, அந்தத்தெருவினைத் தாண்டி, பஸ்ஸில் ஏறி, நாங்கள் தங்கியிருந்த மாதுங்கா ’அரோரா’ தியேட்டருக்கு அருகில் இருந்த லாட்ஜ் ரூமுக்கு ஓடிவந்துவிட்டோம். எங்களுடன் வந்த வேலு என்பவனுக்கு இதையெல்லாம் பார்த்ததிலேயே குளிர் ஜுரம் வந்துவிட்டது. கடும் கம்பளியைப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டான்.

எங்கள் க்ரூப்பில் மற்றொருவன் (வேலுவுக்கு மட்டும் நெருங்கிய நண்பன் ரவி), எங்களை ரூமில் விட்டுவிட்டு தனியே இரவில் அங்கு அந்த ரெட்-லைட் ஏரியாவுக்கு, திரும்ப அந்த வழிகாட்டியுடன் புறப்பட்டுச் சென்று விட்டான். பிறகு அவனை ஆளையே காணும். மறுநாள்தான் ஒருவழியாக வந்து சேர்ந்தான். அவன் எங்களிடம் பல அனுபவக்கதைகள் சொல்லி மகிழ்ந்தான்.     

நாங்கள் அனைவரும் அவனின் இந்த இழிவான செயலுக்கு மிகவும் கண்டனம் தெரிவித்தோம்.  அதற்கு அவன் எங்களைப்பார்த்து “மிகவும் அருமையான சந்தர்ப்பம் இது. இதை அநியாயமாக நீங்கள் நழுவ விட்டதோடு அல்லாமல் என்னை இப்படித் திட்டுகிறீர்களே” எனச்சொல்லி அவனின் கண்டனங்களை எங்களுக்குத் தெரிவித்து மகிழ்ந்துகொண்டான். 


தமிழகத்தைத் தாண்டிச்சென்ற மேலும் சில பயணங்கள்.

(2)

கேரளா குருவாயூர், கொச்சின் போன்ற இடங்களுக்கு ரயிலில், மகிழ்வுப்பேருந்தில் + காரில் என பலமுறை குடும்பத்துடன் சென்று வந்துள்ளேன்.  கொச்சின் கொந்தளிக்கும் கடலில் பரிசலில் சென்றது மிகவும் த்ரில்லிங்கான அனுபவமாக இருந்தது.  


(3) 

1978-ஆம் வருடம் என் குடும்பத்தாருடன் ஹகரி (குண்டக்கல் அருகில்) என்ற சிற்றூருக்குப் புனிதப்பயணம் சென்று வந்தேன்.

(4)

குடும்பத்தாருடன் 1983 இல் கர்னூல், திருப்பதி, திருத்தணி, காளகஸ்தி போன்ற இடங்களுக்கு ஒருமுறை காரிலும் மறுமுறை ரயிலிலும் புனிதப்பயணம் மேற்கொண்டேன். 

(5)

1984-இல் குடும்பத்தாருடன் அலஹாபாத், காசி, ஜபல்பூர் ஆகிய இடங்களுக்குப் புனிதப்பயணம் சென்று வந்தேன்.
அலஹாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நான்.


(7) 

1985-இல் குடும்பத்தாருடன் பண்டரீபுரம் புனித யாத்திரை செய்து வந்தேன். 

(8)

2004 டிஸம்பரில் குடும்பத்தார் அனைவருடனும் மும்பைக்கு தேசிய விருது வாங்கச் சென்று வந்தேன்.

(9) 

2006 மார்ச்சில் தலைநகர் டெல்லிக்கு முதன் முதலாக என் சின்ன மகனுடன்  சென்று வந்தேன். அங்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தோம். பல இடங்களை ஆசைதீர சுற்றிப்பார்த்து மகிழ்ந்தோம்.


^குதுப் மினார்^

^பாராளுமன்றம்^
^இந்தியா கேட்^
^மஹாத்மா காந்தி நினைவு இடம்^

^மிருகக் காட்சி சாலை^
^ஜூம்ஆ மசூதி^
(10)

2007 பிப்ரவரியில் தேசிய விருது + முதல் பரிசு தங்க மெடல் வாங்க ஜாம்ஷெட்பூருக்கு சென்றேன். பேச்சுத்துணைக்காக என் அக்கா மகனையும் என்னுடன் அழைத்துக்கொண்டு சென்று வந்தேன்.

 

(11)

2008 செப்டெம்பரில் ஹைதராபாத்துக்கு EXECUTIVE ORIENTATION PROGRAM TRAINING க்குக்காக அலுவலக நண்பர்கள் சுமார் 15 பேர்களுடன் (BHEL திருச்சியிலிருந்து ஒரே ஒரு பெண் + 14 ஆண்கள்) புறப்பட்டுச் சென்று அங்கு 15 நாட்கள் தங்கிவிட்டு வந்தோம். ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி உள்பட பல இடங்களைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்து வந்தோம்.      


  
FOUR FINANCE EXECUTIVES FROM BHEL TIRUCHI .... AT TRAIN JOURNEY




^AT BHEL GODAVARI GUEST HOUSE - HYDERABAD^

^AT HRDC - BHEL - HYDERABAD ^

  








^AT RAMOJI RAO FILM INSTITUTE - HYDERABAD^




^ AT A VERY BEAUTIFUL PARK AND 
SHOPPING AREA AT HYDERABAD^

^ சார்மினார் பஜாரில் ^
^கோல்கொண்டா கோட்டையில்^ 

3.எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

எங்குமே தனியே பயணிக்கப்பிடிக்காது. பேச்சுத்துணைக்கு 'நம்மாளு’ யாராவது வேண்டும். ஜன்னல் ஓரமாக இடம் கிடைத்தால் மிகவும் பிடிக்கும். பணம் அதிகம் செலவானாலும் பயணமும் இருக்கையும் படுக்கையும் மிகவும் COMFORTABLE ஆக எனக்கு இருக்க வேண்டும்.


4.பயணத்தில் கேட்க விரும்பும் சை

பயணத்தில் இசை கேட்கும் விருப்பம் ஏதும் எனக்கு இல்லை. பொதுவாகக் காட்டுக்கத்தலாக இல்லாமல் மெல்லிசையாக இருப்பின் சகித்துக்கொள்வேன்.

5.விருப்பமான பயண நேரம்

அதி விரைவாகவும், மிகவும் பாதுகாப்பாகவும், சகல செளகர்யங்களுடனும் திட்டமிட்ட கன்ஃபார்ம்ட் ரிஸர்வேஷனுடன் கூடிய பயணமாக இருக்க வேண்டும். நேரமெல்லாம் எதுவாக இருப்பினும் OK தான்.


6.விருப்பமான பயணத்துணை.

ஹனுமன் போன்ற அனைத்துத் திறமைகளும், சாமர்த்தியங்களும்,  புத்தி சாதுர்யமும் வாய்ந்த என் பெரிய சம்பந்தி திரு. P. பாலசுப்ரமணியன் என்பவரும் அவரின் துணைவியாரான திருமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் அவர்களும், எங்களுடன் பயணம் செய்ய வந்தால் மிகவும் மகிழ்வேன். இவர்களுடன் செல்லும் போது நான் எதற்குமே கவலைப்படாமல் மிகவும் ஜாலியாக பயணத்தை மட்டுமே ரஸித்து அனுபவிக்க நேரிடும்.  

மற்றபடி டிக்கெட் ரிஸர்வேஷன் செய்வது, பயண டிக்கெட்களை பயணம் முடியும்வரை பாதுகாப்பது, ஆங்காங்கே விசாரணைகள் செய்வது, லோக்கல் பயண வண்டிகளை ஏற்பாடு செய்வது, எதையும் நன்கு முன்கூட்டியே திட்டமிடுவது, எனக்கு வேண்டிய ருசியான ஆகாரங்கள் தருவது, ஆங்காங்கே தங்குமிடங்கள் ஏற்பாடு செய்வது, அடுத்தடுத்து பார்க்க வேண்டிய இடங்களைப் பட்டியல் இடுவது, பயணத்திட்டங்களைத் தீட்டுவது, என் லக்கேஜ்கள் உள்பட அனைத்தையும் பொறுப்பாகக் கண்காணித்துப் பார்த்துக்கொள்ளுவது, ஆங்காங்கே லக்கேஜ் தூக்க ஆள் ஏற்பாடு செய்வது என அனைத்தையுமே அவர்கள் இருவரும் திட்டமிட்டு தங்கள் மண்டையை உடைத்துக்கொண்டு பார்த்துக்கொள்வார்கள். 

இவர்கள் இருவருடனும் சேர்ந்து பயணம் செய்தால் எனக்கும் என் மனைவிக்கும் எந்தவொரு தலைவலிகளும் இருக்காது. அவர்களிடம் மொத்தமாகப் பணத்தைக்கொடுத்துவிட்டு, மிகவும் ஜாலியாக பயணத்தை மட்டும் நாங்கள் அனுபவிப்போம்.

7.பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?

தனியாக எங்கும் பயணிக்காததால் புத்தகமெல்லாம் எனக்குத் தேவைப்படாது. நெடுந்தூர பணமாக இருந்து மிகவும் போர் அடித்தால் சீட்டுக்கச்சேரி போடப்பிடிக்கும். மற்றபடி அரட்டை அடித்துக்கொண்டு பயணம் செய்யவே பிடிக்கும்.

8.விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

சிறுவயதினில் நடந்தும், சைக்கிளிலும், மாட்டு வண்டிகளிலும், குதிரை வண்டிகளிலும், சைக்கிள் ரிக்‌ஷாவிலும், மோட்டர் சைக்கிள்களிலும் என அனைத்திலும் நான் பயணம் செய்துள்ளேன்.










முதன் முதலாக குதிரை வண்டியில் பயணம் செய்ததை என்னால் மறக்கவே முடியாது. மிகவும் சிரிப்பான அனுபவமாகும். ஒரு குதிரை வண்டிக்குள் என் குடும்பமே ஏறிக்கொண்டது. என்னை கடைசியாக குதிரை ஓட்டியின் அருகே என் காலைத்தொங்கப்போட்டபடி அமர்த்தி விட்டார்கள். எனக்கு 5-6 வயதுதான் இருக்கும் அப்போது. 

நல்ல வாளிப்பான மொழு மொழு என்று இருந்த முரட்டுக்குதிரை அது. வால் முடிகள் அதற்கு மிகவும் நீளமாக இருந்தது. அடிக்கடி குதித்துக்கொண்டு ஓடிய அது, என்னைத் தன் வாலால் ப்ரஷ் அடித்துக்கொண்டே இருந்தது. எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. 

குதிரை ஓட்டுபவர் சாட்டையால் குதிரையைச் சொடுக்கிக்கொண்டே இருப்பார். சாட்டை என் கண்களில் பட்டுவிடுமோ என பயந்துகொண்டே பயணம் செய்தேன். 

வேக வேகமாக ஓடும்போது நடுவில் வாலைத்தூக்கிய அந்தக்குதிரை, பச்சைக்கலரில் சாணி போட ஆரம்பித்தது.  குமட்டிடும் அந்த வாடை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. 

அத்துடன் அது சாணி போட்டு முடிக்கும்வரை, அதன் வாலால் என் முகத்தில் விசிறி அடித்துக்கொண்டே இருந்தது. எப்போது வண்டியை விட்டு இறங்கப்போகிறோம் என்று ஆகி விட்டது எனக்கு. :)

தற்சமயம் 5 கிலோமீட்டருக்குள் என்றால் ஆட்டோ. 6 to 20 கிலோ மீட்டருக்குள் என்றால் கால் டாக்ஸி.




முன்பெல்லாம் .... 55 வயதுவரை 100 CC சுசுகி சாம்ராயில் 100 கிலோமீட்டர் ஸ்பீடுக்கு மேல் விரட்டிப் பயணம் செய்வது எனக்கு மிகவும் ஜாலியாக இருந்து வந்தது. இப்போது போக்குவரத்துகள், பாதைகள் எல்லாம் மிகவும் மோசமாகவும், ஆபத்தாகவும் இருப்பதால், பைக் ஓட்டுவதை சுத்தமாகவே நிறுத்திக்கொண்டுள்ளேன். 

நீண்ட தூரப்பயணம் என்றால் (Even Tiruchi to Chennai or Bangalore) பெரும்பாலும் ஒஸத்தியான ஏ.ஸி. காரில் பின்பக்கம் இடது பக்கம் ஓரமாக ஜன்னலை ஒட்டி அமர்ந்து செல்லவே விரும்புவேன்.





ரயில்வே ஸ்டேஷன் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி சிரமப்படாமல், வீட்டு வாசலிலிருந்து புறப்பட்டு திரும்பவும் வீட்டுவாசல் வரை அழகாக வந்துசேரும் வசதிமிக்க ஒஸத்தியான AC CAR பயணமே எனக்கு ரயில் பயணங்களைவிட மிகவும் பிடித்தமானது. நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் காரை நிறுத்தச்சொல்லி, நம் ஏற்றுமதி இறக்குமதித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு, பயணத்தைத் தொடர வசதியாக இருக்கும். அப்படிப்பட்ட காரிலும் டிரைவரைத்தவிர 3 அல்லது 4 பேர்கள் மட்டுமே தாராளமாக அமர்ந்துகொண்டு ஜாலியாகப் பயணிக்க வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் உரசிக்கொண்டு அமர்ந்து கும்பலாகச் செல்வது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.

                                                                                                                                                         
9.பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

அவ்வப்போது காணும் காட்சிகளைப் பொருத்து சில சினிமாப் பாடல்களை என் வாய் முணுமுணுக்கும்.


10.கனவுப் பயணம் ஏதாவது ?

கனவுப் பயணத்திற்காக என் மனதில் எவ்வளவோ ஆசைகள் + கற்பனைகள் உள்ளன. எல்லாவற்றையும் இங்கு வெளிப்படையாக என்னால் சொல்ல இயலாமல் உள்ளது. :)




நீண்ட தூரம் செல்லும் சொகுசுப் பேருந்துகளில் இப்போது தூங்கும் வசதிகளும், கழிவறை வசதிகளும்கூட கொடுக்கப்படுகின்றன.  கட்டணம் அதிகமானாலும், இரயிலில் உள்ள படுக்கை வசதியைவிட  இவற்றில் நன்றாகக் காலை நீட்டியும், புரண்டும் படுக்க முடிகிறது. சமீபத்தில் பெங்களூரிலிருந்து திருச்சிவரை, இதுபோன்றதோர் சொகுசுப் பேருந்தில் என் குடும்பத்தார் அனைவரும் நிம்மதியாகவும் செளகர்யமாகவும் படுத்துத் தூங்கிக்கொண்டு வந்தோம்.




விமானப்பயணத்திலும் கூட மிகவும் நெருக்கமாகவும்,  மூன்று இருக்கைகளை ஒட்டியும் போட்டிருப்பதால் பயணிக்கும் போது பலருக்கும் மிகவும் கஷ்டமாகவே உள்ளது.  இருக்கைகள் தாராளமாக விசாலமாக உள்ள EXECUTIVE CLASS + காலை நீட்டி தூங்கும் வசதிகளுடன் உள்ள விமானப்பயணம் தான் எப்போதும் இனிமையானதாக உள்ளது.   





இந்தப்பதிவினை எழுதி அனுப்ப என்னைத் தூண்டிய என் இனிய நண்பர் திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்கு மீண்டும் என் இனிய நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

இந்தத்தொடர் பதிவினை எழுத யாருக்கெல்லாம் விருப்பமோ அவர்களெல்லாம் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் VGK

 பிற்சேர்க்கை (30.01.16) -

அன்புள்ள V.G.K அவர்கள் அனுப்பி வைத்த மின்னஞ்சலில் இருந்த படங்கள் இங்கே (கீழே) -

My Dear Sir, வணக்கம்.

மேலும் சில போட்டோக்கள் இப்போதுதான் கிடைத்தன. கீழே இத்துடன் அவற்றை அனுப்பியுள்ளேன். முடிந்தால் தங்களின் பதிவினில் கடைசியாக இவற்றையும் சேர்த்துக்கொள்ளவும்.

அன்புடன் VGK

டெல்லி பாராளுமன்றம் அருகில் - VGK

 இந்திரா காந்தி நினைவிடத்தில் - VGK + HIS SON 

டெல்லி மெட்ரோ ரயில் பயணத்தில் - VGK
VVIPs மட்டுமே தங்கிடும் 
மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டலில் VGK 


டெல்லி இந்தியா கேட் அருகே VGK

மஹாத்மா காந்தி நினைவிடத்தில் 
பிரார்த்தனையில் VGK 

டெல்லி குதுப்மினாருக்கு வந்திருந்த  
ஜீன்ஸ் பட கதாநாயகன் பிரஸாந்த் அவர்களுடன் VGK

 டெல்லி மிருகக்காட்சி சாலையில் - VGK

டெல்லி ஜூம்ஆ மசூதியைப் பார்த்துவிட்டு 
திரும்பும்போது VGK

டெல்லியில் உள்ள பல இடங்களை 
ஆட்டோவில் சுற்றிக்காட்டிய சர்தார்ஜியுடன் VGK 





127 comments:

  1. வை.கோ. ஜி அவர்களின் பதில்கள் சுவாரஸ்யம்..... ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ் Thursday, January 28, 2016 7:47:00 pm

      //வை.கோ. ஜி அவர்களின் பதில்கள் சுவாரஸ்யம்..... ரசித்தேன். //

      வாங்கோ வெங்கட் ஜி, வணக்கம்.

      தங்களின் சுவாரஸ்யமான ரசனைக்கு மிக்க நன்றி.

      Delete
  2. தொடர் பதிவு பயணம் வாசித்து மகிழ்ந்தேன்.
    ரசனை.
    எல்லோருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.
    (வேதாவின் வலை)

    ReplyDelete
    Replies
    1. kavithai (kovaikkavi) Thursday, January 28, 2016 9:48:00 pm

      வாங்கோ, வணக்கம்.

      //தொடர் பதிவு பயணம் வாசித்து மகிழ்ந்தேன். ரசனை. எல்லோருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். (வேதாவின் வலை)//

      தங்களின் அன்பான வருகைக்கும் ரசித்து வாசித்து மகிழ்ந்ததாகச் சொல்லி வாழ்த்தியுள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  3. கோபு அண்ணாவின் பயணங்களும் அழகிய படங்களும் மிக அருமை அனைத்தையும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. Angelin Thursday, January 28, 2016 9:51:00 pm

      வாங்கோ, வணக்கம்.

      //கோபு அண்ணாவின் பயணங்களும் அழகிய படங்களும் மிக அருமை அனைத்தையும் ரசித்தேன்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அனைத்தையும் ரசித்ததாக அருமையாகச் சொல்லியுள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  4. வைகோ ஸார் செம ரசிகர் என்றுதான் தெரியுமே... பயணங்களையும் ரசித்து, பதிவையும் ரசித்து இட்டிருக்கிறார். சூலமங்கலம் என்றதும் எனக்கு சூலமங்கலம் சகோதரிகள் நினைவு வந்து விட்டது.


    மும்பை அனுபவங்களும், குதிரை வண்டிப் பயண அனுபவமும் சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். Thursday, January 28, 2016 9:57:00 pm

      வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //வைகோ ஸார் செம ரசிகர் என்றுதான் தெரியுமே... பயணங்களையும் ரசித்து, பதிவையும் ரசித்து இட்டிருக்கிறார்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      //சூலமங்கலம் என்றதும் எனக்கு சூலமங்கலம் சகோதரிகள் நினைவு வந்து விட்டது.//

      சூலமங்கலம் என்பது ஓர் கிராமம். பசுபதிகோவில் என்பதே இந்த கிராமத்தை ஒட்டி மிக மிக அருகேயுள்ள ரயில்வே ஸ்டேஷனின் பெயராகும்.

      சூலமங்கலம் கிராமம் அய்யம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 2 கிலோ மீட்டர். பாபநாசம் ஸ்டேஷனிலிருந்து 10 கிலோமீட்டர். தஞ்சாவூர் ஸ்டேஷனிலிருந்து 14 கிலோ மீட்டர். தஞ்சை-திருச்சி ரூட்டில் தான் உள்ளது.

      பிரபல பாடகிகளான சூலமங்கலம் சகோதரிகள் இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களே.

      அவர்களைப்பற்றிய செய்திகள் தொடரும் >>>>>

      Delete
    2. VGK >>>>> ஸ்ரீராம் (2)

      இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சகோதரிகள். கர்நாடக இசையிலும், பக்திப்பாடல்களிலும் புகழ்பெற்று விளங்கிய பல இரட்டையருக்கு (ராதா-ஜெயலட்சுமி, பாம்பே சகோதரிகள், ரஞ்சனி-காயத்ரி, பிரியா சகோதரிகள்) இவர்கள் முன்னோடியாக விளங்கினர்.

      இச்சகோதரிகள் பிறந்த இடம் தஞ்சாவூர் அருகில் அமைந்துள்ள இசைப்பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமம் ஆகும்.

      இவர்களது தாய்-தந்தையர்:
      கர்ணம் ராமசாமி ஐயர், ஜானகி அம்மாள்.

      இவர்கள் சூலமங்கலம் கே. ஜி. மூர்த்தி, பத்தமடை எஸ். கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபாலய்யர் ஆகியோரிடம் முறையான இசை பயின்றனர்.

      இவர்கள் பாடிய தேசப்பக்திப் பாடல்களும், பக்திப் பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை. இவர்கள் பாடியுள்ள, கந்த சஷ்டி கவசம் (முருகக் கடவுளின் மீது இயற்றப்பட்டது) அனைத்து பக்தர்களாலும் விரும்பப்பட்ட ஒன்றாகும்.

      இவர்கள் வாங்கியுள்ள விருதுகள்:

      1) முருக கானமிர்தம்,
      2) குயில் இசை திலகம்,
      3) இசையரசி,
      4) நாதக்கனல்,
      5) கலைமாமணி-தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 1982-1983.

      //மும்பை அனுபவங்களும், குதிரை வண்டிப் பயண அனுபவமும் சுவாரஸ்யம்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் சுவாரஸ்யம் என்ற சுவாரஸ்யமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      அன்புடன் VGK

      Delete
  5. எனது அன்பான வேண்டுகோளுக்கு இணங்க ஒரு சுவையான தொடர்பதிவு ஒன்றினைத் தந்திட்ட அய்யா V.G.K அவர்களுக்கு நன்றி. தாங்கள் தேர்ந்தெடுத்த வெளிப்புறப் படங்கள் யாவும் அருமை. உங்கள் பயண அனுபவங்களைப் பார்க்கும்போது ‘LESS LUGGAGE; MORE COMFORT’ கொள்கை உடையவர் போல் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ Thursday, January 28, 2016 10:56:00 pm

      வணக்கம் சார்.

      //எனது அன்பான வேண்டுகோளுக்கு இணங்க ஒரு சுவையான தொடர்பதிவு ஒன்றினைத் தந்திட்ட அய்யா V.G.K அவர்களுக்கு நன்றி.//

      தங்களின் அன்புக்காக மட்டுமே, இதனை மிகவும் அவசர அவசரமாக எழுதி தங்களுக்கு அனுப்பி வைக்க நேர்ந்தது. இன்னும் நான் சொல்ல நினைத்தவை ஏராளமாக என்னிடம் உள்ளன.

      //தாங்கள் தேர்ந்தெடுத்த வெளிப்புறப் படங்கள் யாவும் அருமை.//

      மேலும் மிகவும் சுவாரஸ்யமான 10 படங்களை உங்களுக்கு இன்று மெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளேன். பார்க்கவும். முடிந்தால் இந்தத்தங்களின் பதிவிலேயே இறுதியில் சேர்த்துக்கொள்ளவும்.

      //உங்கள் பயண அனுபவங்களைப் பார்க்கும்போது ‘LESS LUGGAGE; MORE COMFORT’ கொள்கை உடையவர் போல் தெரிகிறது.//

      ஆமாம். அதே .... அதே ! அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. :)

      இதில் பின்னூட்டமிட்டுள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் அளிக்க எண்ணியுள்ளேன். அதற்கு ஓரிரு நாட்கள் ஆகலாம். அனைத்துக்கும் தங்களுக்கு என் நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      Delete
    2. //பூந்தளிர் Friday, January 29, 2016 5:46:00 pm
      பின்னூட்டம் போட வந்தா எழுத்தெல்லாம் ரொம்ப சின்னதா இருக்கு. படிக்கவே முடியல.. நாளை ட்ரை பண்றேன்.//

      அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ சார், மேற்படி நபரின் வேண்டுகோளுக்கு இணங்க எழுத்துக்கள் அனைத்தையும் சற்றே பெரிதாக்க முடிந்தால் செய்து விடுங்கள். இவர்களில் பலரும் மொபைல் மூலம் பதிவினைப் படிப்பதால், நம்மைபோல அவர்களால் எழுத்துக்களை பெரிதாக்கி படிக்க இயலாதுதான்.
      ஒருவேளை அதுபோலச் செய்ய தங்களுக்கு சிரமமாக இருந்தால் அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும்.

      அன்புடன் VGK

      Delete
    3. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். கீழே சகோதரி பூந்தளிர் அவர்களுக்கான எனது மறுமொழியைக் காணவும்.

      Delete
    4. தி.தமிழ் இளங்கோ Friday, January 29, 2016 10:35:00 pm

      //அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். கீழே சகோதரி பூந்தளிர் அவர்களுக்கான எனது மறுமொழியைக் காணவும்.//

      வணக்கம் சார். கீழே பூந்தளிர் அவர்களுக்கான உங்களின் மறுமொழியைபார்த்தேன் சார். மிக்க நன்றி சார்.

      இருப்பினும் அவர்களிடம் உள்ளது என்னிடம் உள்ளது போன்ற லேடஸ்ட் காஸ்ட்லி சாம்சங் மொபைல் மட்டுமே. அதில் எழுத்துக்களைப் பெரிதாக்கி பதிவுனைப்படிப்பது மிகவும் கஷ்டம் சார். Left and Right இழுத்து இழுத்துப் படிப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.

      மற்றபடி நம் கணினியில் நாம் எழுத்துக்களைப் பெரிதாக மாற்றச் செய்யும் Control (+) and சிறிதாக மாற்றச்செய்யும் Control (-) பற்றி நான் மறக்கவே இல்லை. எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துக்கொண்டும் இருக்கிறேன்.

      டெல்லியில் எடுத்த மேலும் சில சுவாரஸ்யமான படங்களைத் தங்களுக்கு நான் மெயிலில் அனுப்பியிருந்தேன். கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.

      அன்புடன் VGK

      Delete
    5. திரு. தி. தமிழ் இளங்கோ சார் அவர்களுக்கு, வணக்கம்.

      நான் தாமதமாகத் தங்களுக்கு அனுப்பி வைத்த (டெல்லி) படங்களையும் இந்தப்பதிவின் இறுதியில் காட்டியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  6. Replies
    1. கே. பி. ஜனா... Thursday, January 28, 2016 11:49:00 pm
      அருமை.. படங்களும்.//

      மிக்க நன்றி.

      Delete
  7. கோபுசாரின் அனுபவம் ,ஆசை, என பகிர்வு அமர்க்களம். அவர் தளத்தில் வருவது போல இளங்கோ ஐயாவின் தளத்திலும் அதை பகிர்ந்த தொழில்நுட்பம் பிரமிப்பு.

    ReplyDelete
    Replies
    1. தனிமரம் Friday, January 29, 2016 4:10:00 am

      வாங்கோ, வணக்கம்.

      //கோபுசாரின் அனுபவம், ஆசை, என பகிர்வு அமர்க்களம். அவர் தளத்தில் வருவது போல இளங்கோ ஐயாவின் தளத்திலும் அதை பகிர்ந்த தொழில்நுட்பம் பிரமிப்பு.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அமர்க்களமான, பிரமிப்புடன் கூடிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.


      Delete
  8. அருமையான படங்களுடன் பயண பதில்கள் அனைத்தும் அருமை ஐயா... ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் Friday, January 29, 2016 8:29:00 am

      வாங்கோ, வணக்கம்.

      //அருமையான படங்களுடன் பயண பதில்கள் அனைத்தும் அருமை ஐயா... ரசித்தேன்...//

      தங்களின் அன்பான வருகைக்கும், ரசித்துச் சொல்லியுள்ள அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, Mr. DD Sir.

      Delete
  9. சுவையான பதில்கள்!! பதிவு! கண்ணைக் கவரும் விளக்கமான படங்கள்!! அருமையான பகிர்வு!

    ReplyDelete
    Replies
    1. middleclassmadhavi Friday, January 29, 2016 9:43:00 am

      வாங்கோ, வணக்கம். செளக்யமா? பார்த்தே ரொம்ப நாள் (வருஷம்) ஆச்சு :)

      //சுவையான பதில்கள்!! பதிவு! கண்ணைக் கவரும் விளக்கமான படங்கள்!! அருமையான பகிர்வு!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான + சுவையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, Mrs. MCM Madam.

      அன்புடன் கோபு

      Delete
  10. திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களின் பதிவு எப்போதும் சுவாரஸ்யமாக. அழகான படங்களுடனும் அதற்கான விளக்கங்களுடனும் இருக்கும். தான் மேற்கொண்ட பயணங்களை எப்படி இரசித்திருக்கிறார் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

    1984 ஆம் ஆண்டில் திரிவேணி சங்கமத்தில் எடுத்துள்ள புகைப்படத்தில் இருப்பது திரு வை.கோ அவர்களா? நம்பமுடியவில்லை!

    தங்களின் வேண்டுகோளை ஏற்று பதிவு எழுதிய திரு வை.கோ அவரக்ளுக்கும் அதை வெளியிட்ட தங்களுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி Friday, January 29, 2016 9:54:00 am

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களின் பதிவு எப்போதும் சுவாரஸ்யமாக. அழகான படங்களுடனும் அதற்கான விளக்கங்களுடனும் இருக்கும். தான் மேற்கொண்ட பயணங்களை எப்படி இரசித்திருக்கிறார் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.//

      என்னைப்பற்றிய தங்களின் புரிதலுக்கும், அதனை அழகாகக் குறிப்பிட்டு இங்கு சொல்லி பாராட்டியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      //1984 ஆம் ஆண்டில் திரிவேணி சங்கமத்தில் எடுத்துள்ள புகைப்படத்தில் இருப்பது திரு வை.கோ அவர்களா? நம்பமுடியவில்லை!//

      அப்போது எனக்கு 33-34 வயதுதான் சார். அப்போதெல்லாம் எனக்குத் தலைநிறைய கருகருவென்று முடி மிக அடர்த்தியாக இருக்கும் சார். அதனால் தங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். அந்த முடிகளெல்லாம் எங்கே போச்சுன்னு என்னாலேயே இப்போ நம்ப முடியவில்லை. ’முடியே போச்சு’ என்று அதைப்பற்றியே நினைத்துக்கொண்டு கவலைப்படாமல் மறந்தாப்போல இருந்து வருகிறேன். :)

      //தங்களின் வேண்டுகோளை ஏற்று பதிவு எழுதிய திரு வை.கோ அவர்களுக்கும் அதை வெளியிட்ட தங்களுக்கும் பாராட்டுக்கள்! //

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      Delete
  11. திரு தி தமிழ் இளங்கோ அவர்களுக்கு, என் பதிவின் பின்னூட்டமொன்றில் நான் எழுத வேண்டும் என்னும் வேண்டு கோள் கண்டேன் சிறிது அவகாசம் தேவைப்படுகிறது உங்கள் வேண்டுகோள்படி நிச்சயம் எழுதுவேன் நன்றி.

    ReplyDelete
  12. வை.கோ. சார்!

    சமீபத்தில் உங்கள் நகைச்சுவை உணர்வை பகிர்ந்து கொண்ட பொழுது, "கல்கியா? நானா? என்ன ஒப்புமை?" என்று சபை அடக்கத்திற்காகவோ என்னவோ கேட்டீர்களே, இந்தக் கட்டுரை பூராவும் அங்கங்கே நீங்கள் விசிறிப்போட்டிருக்கும் 'கொல்' 'கிளுக்', 'ஹஹ்ஹஹா'..'ஹிஹிஹி' சிரிப்பு சரவெடிகளுக்குப் பேர் என்ன சார்? கல்கியின் நகைச்சுவை இயல்பானது. திட்டமிட்டு பிறரை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக எழுதப்படுவதில்லை. அவரோடு கூடப் பிறந்தது.
    அந்தவிதத்தில் நீங்களும் ஏறத்தாழ கல்கிக்கு மிக நெருக்கத்தில் வருகிறீர்கள் என்பது என் கணிப்பு.

    'திருமண சாமான்களை அவசர அவசரமாக ரயிலிலிருந்து இறக்கும் போது என்னையும் ஒரு மூட்டை போல நினைத்து தொப்பென்று கீழே போட்டார்கள்'-- இதை வாசித்து விட்டு நான் சிரித்த சிரிப்பு எனக்குத் தான் தெரியும்!

    நிறைய படங்கள். திரிவேணி சங்கமத்தில் முட்டியளவு நீரில் நிற்கிறீர்களே! நான் சென்ற போது என் கழுத்தளவு இருந்தது. என்ன தான் நீங்கள் உயரம் என்றாலும்
    கொஞ்சம் மேடு தட்டிய மணல் பகுதி இல்லை நீரின் வேக ஓட்டம் கொஞ்சம் குறைந்த இடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஸ்ரீராமிற்கு ஒரு தகவல். சேலத்தின் ஜங்ஷன் பகுதி சூரமங்கலம் என்று அழைக்கப்பட்டாலும், சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலெஷ்மியும் ராஜலெஷ்மியும் இந்த ஊர்க் காரங்கள் தான். என் தமக்கைகளின் பெயரும் இதே தான்! இருவருமே நன்றாக பாடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி Friday, January 29, 2016 12:19:00 pm

      //வை.கோ. சார்!//

      வாங்கோ சார், நமஸ்காரங்கள் சார்.

      //சமீபத்தில் உங்கள் நகைச்சுவை உணர்வை பகிர்ந்து கொண்ட பொழுது, "கல்கியா? நானா? என்ன ஒப்புமை?" என்று சபை அடக்கத்திற்காகவோ என்னவோ கேட்டீர்களே, இந்தக் கட்டுரை பூராவும் அங்கங்கே நீங்கள் விசிறிப்போட்டிருக்கும் 'கொல்' 'கிளுக்', 'ஹஹ்ஹஹா'.. 'ஹிஹிஹி' சிரிப்பு சரவெடிகளுக்குப் பேர் என்ன சார்?//

      ஏதோ நான் எது பேசினாலும், எழுதினாலும் அவற்றில் நகைச்சுவை சற்றே தூக்கலாக இருப்பதாக தங்களைப்போன்றே என் நண்பர்கள் பலரும் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன், சார். என்னையும் அறியாமல் இயற்கையாக இதுபோல அமைந்து விடுவது God's Gift என்றுதான் சொல்ல வேண்டும்.

      //கல்கியின் நகைச்சுவை இயல்பானது. திட்டமிட்டு பிறரை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக எழுதப்படுவதில்லை. அவரோடு கூடப் பிறந்தது.//

      ஆமாம் சார். புரிகிறது. ஸ்வீட்ஸ்களில் மைசூர்பாகு, ஜாங்கிரி, சோன்பப்டி, ஹல்வா, ரசகுல்லா, குலோப் ஜாமூன், கேஸரி, லாடு, பைனாபிள் ஃபுட்டிங் என பல இருந்தாலும் அரை தித்திப்பான பாதுஷா ஓர் தனி ருசியாக இருப்பது உண்டு. பாதுஷா போல கல்கியின் கதைகளில் ஆங்காங்கே நகைச்சுவை என்ற இனிப்பு ஒளிந்துள்ளதை என்னால் நான் சமீபத்தில் படித்த ‘தப்பிலிகப்‘ என்ற கதை மூலம் என்னால் நன்கு உணர முடிந்தது.

      அதுபோலவே ஆல் இந்தியா ரேடியோவில் பல வருடங்களாக ’தினம் ஒரு தகவல்’ சொல்லி வந்த நம் தென்கச்சி கோ. சுவாமிநாதன் என்பவரும், தான் சிரிக்காமல் தன் பேச்சுக்களால் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துக்கொண்டிருந்தார்.

      //அந்தவிதத்தில் நீங்களும் ஏறத்தாழ கல்கிக்கு மிக நெருக்கத்தில் வருகிறீர்கள் என்பது என் கணிப்பு.//

      ஆஹா, எதையும் அறிவுபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் மட்டும் கூர்ந்து நோக்கி அலசி ஆராயும் பல்வேறு தனித்திறமைகள் வாய்ந்தவரான தங்களின் இந்த கணிப்பினை என்னால் அப்படியே ஏற்றுக்கொள்ளவோ ஒரேயடியாக நிராகரிக்கவோ முடியாமல் தர்மசங்கடத்தில் நான் உள்ளேன். இருப்பினும் தங்கள் மூலம் இதனைக்கேட்க தன்யனானேன். தங்களின் இந்தக்கணிப்பு எனக்கு மேலும் ஊக்கமும் உற்சாகமும் தருவதாக உள்ளது. என் ஸ்பெஷல் நன்றிகள், சார்.

      >>>>>

      Delete
    2. கோபு >>>>> ஜீவி சார் (2)

      //'திருமண சாமான்களை அவசர அவசரமாக ரயிலிலிருந்து இறக்கும் போது என்னையும் ஒரு மூட்டை போல நினைத்து தொப்பென்று கீழே போட்டார்கள்'-- இதை வாசித்து விட்டு நான் சிரித்த சிரிப்பு எனக்குத் தான் தெரியும்!//

      :)))))

      ஆமாம் சார், இது நிஜமாகவே நடந்த சம்பவம் சார். அன்றைய கல்யாணப் பெண்ணான என் பெரிய அக்காவுக்கும் இது நன்றாகவே தெரியும். இப்போதும்கூட அடிக்கடி இந்த சம்பவத்தைச் சொல்லி நினைவூட்டி அவளும் சிரித்து என்னையும் சிரிக்க வைப்பாள்.

      அந்தக்காலத்தில் வீட்டில் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் என்றால் சும்மாவா .... எவ்வளவு கவலைகளும், கார்யங்களும், பொறுப்புகளும் அடுத்தடுத்து இருக்கக்கூடும். உடல்நலம் சரியில்லாமல் கடும் ஜுரத்துடன் துவண்டு போயிருந்த நானும் அவர்களுக்கு ஒரு லக்கேஜ் ஆகவே தோன்றியிருந்திருக்கலாம். அனைத்துப் பொருட்களையும் ஜாக்கிரதையாக எதுவும் விடுபட்டுப்போய்விடாமல் இறக்குவதற்குள் ஒருவேளை ரயில் புறப்பட்டுவிடுமோ என்ற அவசரமும், பதட்டமும்கூட அவர்களுக்கு இருந்திருக்கலாம். :)

      >>>>>

      Delete
    3. கோபு >>>>> ஜீவி சார் (3)

      //நிறைய படங்கள்.//

      இன்றுகூட கூடுதலாக ஒரு 10 படங்கள் இந்தப்பதிவின் கடைசியில் இணைக்கப் பட்டுள்ளன, சார்.

      //திரிவேணி சங்கமத்தில் முட்டியளவு நீரில் நிற்கிறீர்களே! நான் சென்ற போது என் கழுத்தளவு இருந்தது. என்ன தான் நீங்கள் உயரம் என்றாலும்
      கொஞ்சம் மேடு தட்டிய மணல் பகுதி இல்லை நீரின் வேக ஓட்டம் கொஞ்சம் குறைந்த இடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//

      ஆமாம் சார். எங்கள் க்ரூப்பில் பலரும் வந்திருந்தார்கள். ஒருசிலர் மிகவும் வயதானவர்கள். சாதாரணமாகவே தரையில் குச்சி ஊன்றி நடப்பவர்கள். அவர்களுக்காகவே அதிக ஆழம் இல்லாத இடமாகப் பார்த்து, படகினை நிறுத்துமாறு ஸ்பெஷலாகக் கேட்டுக்கொண்டோம்.

      >>>>>

      Delete
    4. கோபு >>>>> ஜீவி சார் (4)

      //ஸ்ரீராமிற்கு ஒரு தகவல். சேலத்தின் ஜங்ஷன் பகுதி சூரமங்கலம் என்று அழைக்கப்பட்டாலும், சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலெஷ்மியும் ராஜலெஷ்மியும் இந்த ஊர்க் காரங்கள் தான்.//

      ஆமாம் சார். அவர்கள் இருவரும் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தஞ்சை to திருச்சி ரயில் மார்க்கத்தில் தஞ்சையிலிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 'பசுபதிகோவில்' என்ற ரயில் நிலையத்திற்கு மிக மிக அருகே உள்ள சூலமங்கலம் என்ற கிராமத்தில் மட்டுமே. அவர்களால் அந்த கிராமமே இன்று பெருமை பெற்றுள்ளது.

      >>>>>

      Delete
    5. கோபு >>>>> ஜீவி சார் (5)

      //என் தமக்கைகளின் பெயரும் இதே தான்! இருவருமே நன்றாக பாடுவார்கள்.//

      அப்படியா ! மிகவும் சந்தோஷம் சார்.

      இதே இரண்டு பெயர்களில் திருச்சி BHEL FINANCE DEPARTMENT இல் இருவர் இருந்தனர். EXECUTIVE TRAINEE, ACCOUNTS OFFICER, SENIOR ACCOUNTS OFFICER, DEPUTY MANAGER, MANAGER, SENIOR MANAGER, DEPUTY GENERAL MANAGER, SENIOR DEPUTY GENERAL MANAGER என வரிசையாக இருவருக்கும் ஒரே நேரத்தில் PROMOTION கிடைத்து வந்தது.

      MANAGER to SENIOR MANAGER PROMOTE ஆகும் போது, ராஜலக்ஷ்மி என்பவர் மட்டும் திருச்சியிலேயே இருக்க, விஜயலக்ஷ்மி என்பவரை மட்டும், BHEL HYDERABAD க்கு TRANSFER செய்துவிட்டார்கள்.

      நான் 2008-இல் ஹைதராபாத்துக்கு 15 நாட்கள் டிரைனிங்குக்காகப் போனபோது, அவர்களுடனும் சற்றுநேரம் சந்தித்துப்பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான வியப்பூட்டும் பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      பிரியத்துடன் கோபு

      Delete
  13. Interesting account and photos of Mr VG's travels from childhood.

    ReplyDelete
    Replies
    1. D. Chandramouli Friday, January 29, 2016 1:28:00 pm

      Good Morning Sir, Welcome Sir.

      //Interesting account and photos of Mr VG's travels from childhood.//

      Thanks for your kind visit and interesting comments, Sir.

      Yours,
      VGK

      Delete
  14. //சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலெஷ்மியும் ராஜலெஷ்மியும் இந்த ஊர்க் காரங்கள் தான். //

    முன்வரியில் சேலத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் நான் குறிப்பிட்டது தவறாக அர்த்தம் கொள்ளப்படலாம். இந்த ஊர்க்காரர்கள் தான் என்று குறிப்பிட்டிருந்தது தஞ்சை மாவட்டத்திலுள்ள சூலமங்கலத்தை. 'கந்த சஷ்டி கவசம்' இந்த சகோதரிகள் குரலில் அமிர்த கானமாய் வர்ஷிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி Friday, January 29, 2016 2:13:00 pm

      //சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலெஷ்மியும் ராஜலெஷ்மியும் இந்த ஊர்க் காரங்கள் தான். //

      //முன்வரியில் சேலத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் நான் குறிப்பிட்டது தவறாக அர்த்தம் கொள்ளப்படலாம். இந்த ஊர்க்காரர்கள் தான் என்று குறிப்பிட்டிருந்தது தஞ்சை மாவட்டத்திலுள்ள சூலமங்கலத்தை. 'கந்த சஷ்டி கவசம்' இந்த சகோதரிகள் குரலில் அமிர்த கானமாய் வர்ஷிக்கும்.//

      தங்களின் மீண்டும் வருகைக்கும், மிகவும் அவசியமான இந்த விளக்கத்திற்கும் மிக்க நன்றி, சார்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  15. வணக்கம், எந்த படைப்பாக இருந்தாலும் அதில் ஆழ்ந்து போகும் ஐயா அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள், அருமையான பயணப் பகிர்வு, எப்பவும் போல் அழகிய புகைப்படங்கள்,
    உங்களையும் மூட்டை முடிச்சுகளுடன் தூக்கிப் போட்டார்களா? கற்பனையில் ஆழ்ந்தேன்....
    நல்ல வெளிப்படையான பதில், அருமை ஐயா,
    வெளியிட்ட தங்களுக்கும் நன்றிகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. mageswari balachandran Friday, January 29, 2016 2:48:00 pm

      //வணக்கம்,//

      வாங்கோ மேடம், வணக்கம். இங்கேயும்கூட தங்களின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆச்சர்யமும் அளிக்கிறது !!!!!

      //எந்த படைப்பாக இருந்தாலும் அதில் ஆழ்ந்து போகும் ஐயா அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்,//

      அடாடா, உங்களின் இந்த வரிகளிலும் நான் அப்படியே ஆழ்ந்து சொக்கிப் போய்விட்டேன், மேடம். :) வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      //அருமையான பயணப் பகிர்வு, எப்பவும் போல் அழகிய புகைப்படங்கள்,//

      மிகவும் சந்தோஷம், மேடம். மேலும் சில படங்கள் இன்று (30.01.2016) புதிதாக தங்களுக்காகவே இந்தப்பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன. பார்த்தீர்களா ?

      //உங்களையும் மூட்டை முடிச்சுகளுடன் தூக்கிப் போட்டார்களா? கற்பனையில் ஆழ்ந்தேன்....//

      தங்கள் கற்பனையில் எனக்கு பலத்த அடி பட்டதா, மேடம்? அறிய ஆவல்! :)

      //நல்ல வெளிப்படையான பதில், அருமை ஐயா,//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான வெளிப்படையான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      //வெளியிட்ட தங்களுக்கும் நன்றிகள் ஐயா.//

      இந்தப்பதிவினை வெளியிட்ட என் அருமை நண்பர், தங்களின் இந்த நன்றியை ஏற்றுக்கொள்வாராக !

      அன்புடன் VGK

      Delete
  16. பின்னூட்டம்.போட வந்தா.எழுத்தெல்லாம் ரொம்ப சின்னதா இருக்கு. படிக்கவே.முடியல..நாளை ட்ரை பண்றேன்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Friday, January 29, 2016 5:46:00 pm

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா. செளக்யமா? நல்லா இருக்கீங்களா? உங்களைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு :)

      //பின்னூட்டம் போட வந்தா எழுத்தெல்லாம் ரொம்ப சின்னதா இருக்கு. படிக்கவே முடியல.. நாளை ட்ரை பண்றேன்//

      பூந்தளிருக்காக மட்டும் எழுத்துக்களை சற்றே பெரியதாக ஆக்கி, இதே பதிவினை மின்னஞ்சல் மூலம் இப்போது அனுப்பி இருக்கிறேன். பாருங்கோ, ப்ளீஸ்.

      பிரியமுள்ள கோபு

      Delete
    2. சகோதரி பூந்தளிர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! எந்த வலைத்தளமாக இருந்தாலும், அந்த தளத்தின், திரையைத் திறந்து வைத்துக் கொண்டு, கீ போர்டில் Ctrl பட்டனை அழுத்திக் கொண்டு, ப்ளஸ் பட்டனைத் தட்டத் தட்ட திரையும், எழுத்துக்களும் பெரிதாகிக் கொண்டே போகும். அளவைக் குறைக்க Ctrl + மைனஸ் பட்டன் அவ்வளவுதான். திரு V.G.K. அவர்களுக்கும் இது தெரியும். மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். (ஆண்ட்ராய்டு செல்போனில் திரையினை லேசாக தட்டத் தட்ட எழுத்துக்கள் பெரிதாகும்)

      Delete
    3. தமிழ் இளங்கோ சார் நான் மொபைல்லேந்து தான் நெட் யூஸ் பண்ரேன். அதுல எழுத்து பெரிசு எப்படி பண்ணனும்னு இப்ப நீங்க சொல்லிதான் தெரிஞ்சுக்க முடிஞ்ச்து கோபால் சாருக்கும் மொபைலில் எழுத்து பெரிசு எப்படி பண்ணனும்னு தெரிஞ்சிருக்காதுல்லியா. அவங்க பழய சில் பதிவிலும் எழுத்து சின்னதா இருக்குனு சொன்னப்போ நீங்க சொன்ன ஐடியா தான் சொல்லியிருந்தாங்க. எனிவே. தாங்க்ஸ் அ லாட்.

      Delete
    4. பூந்தளிர் Saturday, January 30, 2016 10:54:00 am

      //தமிழ் இளங்கோ சார் நான் மொபைல்லேந்து தான் நெட் யூஸ் பண்ரேன். அதுல எழுத்து பெரிசு எப்படி பண்ணனும்னு இப்ப நீங்க சொல்லிதான் தெரிஞ்சுக்க முடிஞ்ச்து கோபால் சாருக்கும் மொபைலில் எழுத்து பெரிசு எப்படி பண்ணனும்னு தெரிஞ்சிருக்காதுல்லியா.//

      அன்புள்ள பூந்தளிர், வாங்கோ, மீண்டும் வணக்கம்மா.

      நம் மொபைலில் உள்ள எழுத்துக்களில் இரண்டு விரல்களை வைத்து அகட்டித் தேய்த்தால் அவை பெரிய எழுத்துகளாக மாறிவிடும்தான். அது எனக்கும் தெரியும்தான்.

      ஆனால் பதிவின் Matter பெரியதாக இருக்கும்போது அவற்றை Left and Right Margin வரை மாற்றி மாற்றி நாம் இழுத்து இழுத்துப் படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கும். அதற்கு மிகவும் பொறுமை வேண்டும். :)

      //அவங்க பழைய சில பதிவிலும் எழுத்து சின்னதா இருக்குனு சொன்னப்போ நீங்க சொன்ன ஐடியா தான் சொல்லியிருந்தாங்க.//

      அதை நல்லா ஞாபகம் வைத்திருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      பிரியமுள்ள கோபு

      Delete
  17. வைகோ சார் செம சுவாரஸ்யமான பயணம் தான் நீங்கள் எதையுமே மிகவும் ரசித்துச் செய்வது உங்கள் பயணங்களிலும் தெரிகின்றது. அதைப் போலவே தங்கள் இந்தப் பதிவையும் தாங்கள் மிகவும் ரசித்து எழுதியிருப்பது தெரிகின்றது. சுவாரஸ்யமான பதில்கள்.

    இதை இங்குப் பகிர்ந்த தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. Thulasidharan V Thillaiakathu Friday, January 29, 2016 6:42:00 pm

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //வைகோ சார் செம சுவாரஸ்யமான பயணம் தான். நீங்கள் எதையுமே மிகவும் ரசித்துச் செய்வது உங்கள் பயணங்களிலும் தெரிகின்றது. அதைப் போலவே தங்கள் இந்தப் பதிவையும் தாங்கள் மிகவும் ரசித்து எழுதியிருப்பது தெரிகின்றது. சுவாரஸ்யமான பதில்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான ரசிக்கும் படியான பின்னூட்டத்திற்கும், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      //இதை இங்குப் பகிர்ந்த தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் நன்றி//

      இந்தப்பதிவினை இங்கு பகிர்ந்த என் அருமை நண்பர், தங்களின் இந்த நன்றியை ஏற்றுக்கொள்வாராக !

      அன்புடன் VGK

      Delete
  18. அருமை!பதிவை இரசித்தேன்! வை கோ வுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. புலவர் இராமாநுசம் Friday, January 29, 2016 6:56:00 pm

      வாங்கோ சார், நமஸ்காரங்கள்.

      //அருமை!பதிவை இரசித்தேன்! வை கோ வுக்கு வாழ்த்துகள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், பதிவை ரசித்ததாகச் சொல்லி அருமையாக வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      Delete
  19. ஒன்றன்பின் ஒன்றாக மனதில் ஆழப்பதிந்த நினைவுகள். வயதுக்குத் தகுந்தாற்போல நினைவுகளும், நிகழ்வுகளும் அமைகிறது.நடைப்பயணத்திலிருந்து,ஆரம்பமாகி சிரமமில்லாத ,சிரமத்துடன் கூடிய எல்லாவித பயணங்களும் அனுபவத்தில் விளங்குகிறது.நல்லவேளை , இன்கையால் இழுக்கும் ரிக்க்ஷா அனுபவம் இல்லை. இந்தத் தொடரையே இப்போதுதான் பார்த்தேன். நல்ல ஸுவாரஸ்யமான தொடர். அவரவர்களுக்கு எழுதாவிட்டாலும் மனதில் வரிசையாக எண்ணங்கள் கரைபுரளும். படித்து ரஸித்தேன். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாட்சி Friday, January 29, 2016 7:51:00 pm

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //ஒன்றன்பின் ஒன்றாக மனதில் ஆழப்பதிந்த நினைவுகள். வயதுக்குத் தகுந்தாற்போல நினைவுகளும், நிகழ்வுகளும் அமைகிறது. நடைப்பயணத்திலிருந்து, ஆரம்பமாகி சிரமமில்லாத, சிரமத்துடன் கூடிய எல்லாவித பயணங்களும் அனுபவத்தில் விளங்குகிறது. நல்லவேளை, இதில் கையால் இழுக்கும் ரிக்க்ஷா அனுபவம் இல்லை. இந்தத் தொடரையே இப்போதுதான் பார்த்தேன். நல்ல ஸுவாரஸ்யமான தொடர். அவரவர்களுக்கு எழுதாவிட்டாலும் மனதில் வரிசையாக எண்ணங்கள் கரைபுரளும். படித்து ரஸித்தேன். அன்புடன்//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகாக ரஸித்து எழுதியுள்ள கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      [கையால் இழுத்துச்செல்லும் ரிக்‌ஷா பார்த்திருக்கிறேன். ஆனால் நான் அதில் ஏறியது மட்டும் இல்லை.]

      பிரியத்துடன் கோபு

      Delete
  20. பயணநினைவுகளை ரசித்து எழுதியுள்ளீர்கள். படங்களும் அருமை. தங்க மெடல் வாங்கிய விபரம் இன்று தான் அறிந்தேன். பாராட்டுக்கள்! எத்தனை திறமைகளுக்குச் சொந்தக்காரர் நீங்கள் என்றறியும் போது வியப்பு மேலிடுகிறது. ஆங்காங்கே நகைச்சுவையும் சேர்த்து எழுதியுள்ளமை ரசிக்க வைக்கிறது. பாராட்டுக்கள் கோபு சார்!

    ReplyDelete
    Replies
    1. ஞா. கலையரசி Friday, January 29, 2016 8:18:00 pm

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //பயண நினைவுகளை ரசித்து எழுதியுள்ளீர்கள். படங்களும் அருமை.//

      ரசித்துப்படித்துச் சொல்லியுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் சில படங்கள் இன்று (30.01.2016) இந்தப்பதிவின் இறுதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

      //தங்க மெடல் வாங்கிய விபரம் இன்று தான் அறிந்தேன். பாராட்டுக்கள்!//

      இதைப்பற்றி முன்பே (2013-இல்) என் பதிவினில் வெளியிட்டுள்ளேன்.
      http://gopu1949.blogspot.in/2013/03/3.html இருப்பினும் நாம் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனது 19.02.2014 அன்று மட்டுமே. :) அதனால் ஒருவேளை அந்தப் பதிவினை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

      //எத்தனை திறமைகளுக்குச் சொந்தக்காரர் நீங்கள் என்றறியும் போது வியப்பு மேலிடுகிறது. ஆங்காங்கே நகைச்சுவையும் சேர்த்து எழுதியுள்ளமை ரசிக்க வைக்கிறது. பாராட்டுக்கள் கோபு சார்!//

      தங்களின் அன்பான வருகையும், ஒவ்வொன்றையும் ரசித்துப் பாராட்டி சொல்லியுள்ளதும் பார்க்க எனக்கும்கூட வியப்பு மேலிடுகிறது. நகைச்சுவைகளைப்பற்றி தாங்கள் தனியாக சிலாகித்துச் சொல்லியுள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்துக்கும் என் நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      Delete
  21. பயணங்கள், அனுபவங்கள், மனதின் நினைவலைகளை தனக்கே உரிய நகைச்சுவையுடன் கூடிய பாணியில் அழகான படங்களுடன் பகிர்ந்தவிதம் அருமை!அவருக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. Friday, January 29, 2016 9:30:00 pm

      வாங்கோ, வணக்கம்.

      //பயணங்கள், அனுபவங்கள், மனதின் நினைவலைகளை தனக்கே உரிய நகைச்சுவையுடன் கூடிய பாணியில் அழகான படங்களுடன் பகிர்ந்தவிதம் அருமை! அவருக்கு என் மனமார்ந்த நன்றி!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  22. பிரமிப்பான தகவல்களும் புகைப்படங்களும் அருமை
    தமிழ் மணம் 8

    ReplyDelete
    Replies
    1. KILLERGEE Devakottai Friday, January 29, 2016 10:17:00 pm

      //பிரமிப்பான தகவல்களும் புகைப்படங்களும் அருமை//

      பிரமிப்பான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      Delete
  23. Replies
    1. ashok Friday, January 29, 2016 10:59:00 pm

      Welcome Sir.

      //Awesome post sir...//

      Thank you very much, Sir.

      Delete
  24. அப்பப்பா ..... எவ்வளவு ஜோரா எழுதியிருக்கீங்க. தினமும் உங்க வலைப்பதிவுப் பக்கம் நான் வந்து, ஏதேனும் புதிய பதிவு இருக்கான்னு ஆசையாப் பார்த்து பார்த்து ஏமாந்து போவது என் வழக்கம். இதை ஏன் இங்கே இவரின் வலைத்தளத்தில் வெளியிடச் சொன்னீங்களோ ... எனக்குப் புரியலை.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Saturday, January 30, 2016 10:39:00 am

      வாங்கோ பூந்தளிர் .... வணக்கம்மா. நாளைக்கு வர ட்ரை பண்றேன்னு நேத்திக்குச் சொல்லிட்டுப்போனீங்க. கரெக்டா வந்துட்டீங்கோ. குட் கேர்ள்.:)

      //அப்பப்பா ..... எவ்வளவு ஜோரா எழுதியிருக்கீங்க.//

      அப்படியாச் சொல்றீங்கோ. நீங்க சொல்றதே ஜோராக்கீதூஊஊஊ எனக்கு :)

      //தினமும் உங்க வலைப்பதிவுப் பக்கம் நான் வந்து, ஏதேனும் புதிய பதிவு இருக்கான்னு ஆசையாப் பார்த்து பார்த்து ஏமாந்து போவது என் வழக்கம்.//

      அச்சச்சோ .... நான் தான் இப்போ என் வலைபதிவுகளிலிருந்து கொஞ்சம் விலகி ஓய்வில் இருக்கிறேனேம்மா. உங்க கிட்டச் சொல்ல மறந்துட்டேனோ என்னவோ .... கோச்சுக்காதீங்கோம்மா.

      //இதை ஏன் இங்கே இவரின் வலைத்தளத்தில் வெளியிடச் சொன்னீங்களோ ... எனக்குப் புரியலை.//

      இவர்தான் என்னை இந்தத்தொடர்பதிவு கொடுக்கச்சொல்லி அழைப்பு விடுத்திருந்தார். http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html
      என் வலைப்பக்கம்தான் என்னை இவர் எழுதச்சொன்னார். எனக்கு நிறைய நினைவூட்டல் கடிதங்களும் எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தார்.

      என் வலைப்பக்கம் நான் பெரிய பூட்டு போட்டு பூட்டியிருப்பதால், என் நெருங்கிய நண்பரான இவரின் அன்புக்கட்டளையை ஏற்று, பதிவினை எழுதி இவருக்கே நான் மெயில் மூலம் அனுப்பி வைத்துவிட்டேன். அவரும் என்னுடன் இது சம்பந்தமாக தொலைபேசியில் பேசிவிட்டு, பிறகு அவர் வலைத்தளத்திலேயே வெளியிட்டு உதவியுள்ளார்.

      இப்போதாவது கொஞ்சம் உங்களுக்குப் புரியுதாம்மா? :)

      Delete
  25. அடடா, 4-5 வயசு குழந்தையான ’குட்டி கோபு’ வைத் தொப்புன்னு ரயிலிலிருந்து கீழே போட்டுட்டாங்களா? மிகவும் கோபமா வருது எனக்கு :)

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Saturday, January 30, 2016 10:39:00 am

      //அடடா, 4-5 வயசு குழந்தையான ’குட்டி கோபு’ வைத் தொப்புன்னு ரயிலிலிருந்து கீழே போட்டுட்டாங்களா?//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      ’குட்டி கோபு’ என ஒரு பெண்குட்டி பறைவதைக் கேட்க இனிமையாகத்தான் உள்ளது :)

      // மிகவும் கோபமா வருது எனக்கு :) //

      எப்போதோ நடந்த சம்பவம் இது. தெரியாமல் யாரோ செஞ்சுட்டாங்கோ. அதனால் நீங்க இப்போ மிகவும் கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ். :)

      Delete

  26. பம்பாய் கோவான்னு ஜோடியே இல்லாம ஜாலியா சுத்திட்டு வந்தீங்களா ! உங்களுக்குன்னு பார்த்து ஏதாவது மேட்டர் (ரவி மூலமாகக்) கிடைக்குது பாருங்கோ . :)

    குறும்பும் குசும்பும் மேலிட எழுதியுள்ளீர்கள்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Saturday, January 30, 2016 10:40:00 am

      //பம்பாய் கோவான்னு ஜோடியே இல்லாம ஜாலியா சுத்திட்டு வந்தீங்களா !//

      ஜோடியாத்தான் போகணும்ன்னு நான் ஆசைப்பட்டேன். அப்போ என் ஆத்துக்காரிக்கு இரண்டாம் பிரஸவம் ஆகி, குழந்தைக்கு 3 மாதமே ஆகி இருந்தது. பெரிய குழந்தைக்கு ஒரு வயதும் ஒன்பது மாதங்களுமே ஆகி இருந்தது. 25.12.1975 அன்று கிளம்பாவிட்டால் 1974 + 1975 க்கான அந்த இரண்டு வருஷ LTC ஐ நாங்கள் இழக்க நேரிடும் என்ற ஓர் நெருக்கடி வேறு இருந்தது. அதனால் நாங்கள் 5-6 பேர்கள் மட்டும், ஜோடிப்புறாக்கள் இல்லாமல் பறந்தே விட்டோம்.

      //உங்களுக்குன்னு பார்த்து ஏதாவது மேட்டர் (ரவி மூலமாகக்) கிடைக்குது பாருங்கோ . :)//

      அதானே, எங்கே போனாலும் ஏதாவது இதுபோன்ற சுவாரஸ்ய மேட்டர்கள் நம்மைத்தேடி அதுவாக வந்து தொலைக்கத்தான் செய்கிறது. சிவ பூஜையிலே கரடி புகுந்தாற்போல, எங்களுடன் பயணத்தில், முன்னேபின்னே அதிக அறிமுக இல்லாத, அந்த ரவி என்பவன் கடைசியாக ஒட்டிக்கொண்டு விட்டான்.

      //குறும்பும் குசும்பும் மேலிட எழுதியுள்ளீர்கள்.//

      அடடா, நீங்க வேற ..... நான் அங்கு அன்று நடந்ததை நடந்தபடி மிகவும் நாகரீகமாக எழுதியுள்ளேனாக்கும்.

      Delete
  27. அலஹாபாத் திரிவேணி சங்கமம் போட்டோவில் சூப்பரா இருக்கீங்க ... ஒரே பக்தி மானாக :)

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Saturday, January 30, 2016 10:40:00 am

      //அலஹாபாத் திரிவேணி சங்கமம் போட்டோவில் சூப்பரா இருக்கீங்க ... ஒரே பக்தி மானாக :) //

      ஏதோ நீங்க சொன்னாச்சரி. கடைசியில் புத்திசாலித்தனமாக ‘பக்தி மானாக’ என்று சொல்லி முடித்திருப்பதுதான் இதில் அழகுக்கு அழகு ஊட்டுவதாக உள்ளது ! :) மிக்க நன்றிம்மா.

      Delete
  28. டெல்லி, ஜாம்ஷெட்பூர், ஹைதராபாத் போட்டோ எல்லாமே பார்க்க ரொம்ப நல்லா இருக்குது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Saturday, January 30, 2016 10:42:00 am

      //டெல்லி, ஜாம்ஷெட்பூர், ஹைதராபாத் போட்டோ எல்லாமே பார்க்க ரொம்ப நல்லா இருக்குது.//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, பூந்தளிர்.

      Delete
  29. நீங்களே நல்ல உயரமா ஆறு அடி இருப்பீங்க போலிருக்கு. உங்களைவிட உயரமா ஒன்பது அடிக்கு ஒரு கோமாளி தொப்பிப் போட்டுண்டு இருக்கானே. சிரிப்பு வந்தது. :)

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Saturday, January 30, 2016 10:43:00 am

      //நீங்களே நல்ல உயரமா ஆறு அடி இருப்பீங்க போலிருக்கு.//

      இதை எப்படி கரெக்டா துல்லியமா என்னை அளவு எடுத்ததுபோலச் சொன்னீங்க? சும்மாச் சொல்லக்கூடாது. நீங்க நல்ல புத்திசாலிதான்.

      உங்கக் கண்ணளவு மிகவும் கச்சிதம்தான் போங்கோ :)

      //உங்களைவிட உயரமா ஒன்பது அடிக்கு ஒரு கோமாளி தொப்பிப் போட்டுண்டு இருக்கானே. சிரிப்பு வந்தது. :)//

      அவன் என்னென்ன கட்டையெல்லாம் வெச்சுண்டு கஷ்டப்பட்டு நிற்கிறானோ, பாவம். அவனைப் பார்த்ததும் எங்களுக்கும் அங்கு அன்று சிரிப்புதான் வந்தது. அதனால் தான் அவனுடன் சேர்ந்து நின்றும், கைகுலுக்கியும் போட்டோ எடுத்துக்கொண்டேன்.

      Delete

  30. சம்பந்தி மாமா மாமியைப் பற்றி சொல்லியுள்ளது படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அவாளோடத்தானே துபாய்க்குக்கூட போனதாக உங்கள் பதிவினில் ஒருமுறை சொல்லி இருந்தீங்கோ. அதுவும் என் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Saturday, January 30, 2016 10:43:00 am

      //சம்பந்தி மாமா மாமியைப் பற்றி சொல்லியுள்ளது படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அவாளோடத்தானே துபாய்க்குக்கூட போனதாக உங்கள் பதிவினில் ஒருமுறை சொல்லி இருந்தீங்கோ. அதுவும் என் நினைவுக்கு வந்தது.//

      ஆமாம். உங்களுக்கு மெமெரி பவர் (ஞாபக சக்தி) நல்லாவே உள்ளது.

      இதோ அது விஷயம் அவர்களின் படங்களுடன் இந்தப்பதிவினில் விபரமாகவே என்னால் கொடுக்கப்பட்டுள்ளது.

      http://gopu1949.blogspot.in/2014/12/9.html

      Delete
  31. அந்த முரட்டுக் குதிரை தன் வாலால் உங்களைச் சின்ன வயதில் பிரஷ் அடித்ததைப் பற்றிச் சொன்னதைப் படித்ததும் எனக்குள் மிகவும் சிரித்துக்கொண்டேன். :)

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Saturday, January 30, 2016 10:44:00 am

      //அந்த முரட்டுக் குதிரை தன் வாலால் உங்களைச் சின்ன வயதில் பிரஷ் அடித்ததைப் பற்றிச் சொன்னதைப் படித்ததும் எனக்குள் மிகவும் சிரித்துக்கொண்டேன். :) //

      மிகவும் சந்தோஷம். இப்போதெல்லாம் முரட்டுக்குதிரை அல்லது ரேஸ் குதிரை என்றாலே எனக்கு ஒருவரின் ஞாபகம் மட்டுமேதான் வருகிறது.

      அது யார்? என்று உங்களுக்கே தெரிந்திருக்கும் என நான் நம்புகிறேன். :)

      Delete
  32. மொத்தத்தில் நீங்க நல்ல சுகவாசியானவர் என்பதைப் புரிந்துகொண்டேன். கேள்வி எண் 3 மற்றும் 10 இல் ஏதோ சஸ்பென்ஸ் வைத்துள்ளீர்களே .... எனக்கு மட்டும் தனியே அதைப்பற்றி விபரமாச் சொல்லக்கூடாதா?

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Saturday, January 30, 2016 10:44:00 am

      //மொத்தத்தில் நீங்க நல்ல சுகவாசியானவர் என்பதைப் புரிந்துகொண்டேன்.//

      நல்ல சுகவாசியாகவே எப்போதும் இருக்கத்தான் விரும்புகிறேன். இதுவரை அப்படித்தான் இருந்தும் வருகிறேன். என் பிற்காலம் எப்படி இருக்குமோ எனக்கே தெரியாது, புரியாது ..... புதிராக உள்ளது !

      //கேள்வி எண் 3 மற்றும் 10 இல் ஏதோ சஸ்பென்ஸ் வைத்துள்ளீர்களே .... எனக்கு மட்டும் தனியே அதைப்பற்றி விபரமாச் சொல்லக்கூடாதா?//

      சஸ்பென்ஸ் என்று நீங்களே சொல்லி விட்டீர்களே, பிறகு எப்படி அதனை என்னால் வெளிப்படையாகச் சொல்லமுடியும் .... சொல்லுங்கோ. :)

      Delete
  33. இந்தப்பதிவின் எழுத்துக்களைப் பெரிதாக மாற்றி எனக்கு தனி மெயிலில் அனுப்பி வைத்து உதவியதற்கு என் நன்றிகள், கோபு ஸார்.

    தங்களிடமிருந்து இந்தப்பதிவினை வாங்கி வெளியிட்டுள்ள தங்கள் நண்பருக்கும் என் பாராட்டுகள் + நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Saturday, January 30, 2016 10:45:00 am


      //இந்தப்பதிவின் எழுத்துக்களைப் பெரிதாக மாற்றி எனக்கு தனி மெயிலில் அனுப்பி வைத்து உதவியதற்கு என் நன்றிகள், கோபு ஸார்.//

      சரமாரியாக இத்தனைப்பின்னூட்டங்கள் கொடுக்கும் பூந்தளிருக்காக நான் இந்தச் சின்ன உதவிகூடச் செய்யாதுபோனால் எப்படி? மேலும் இது ஒன்றும் சிரமமான காரியமே இல்லையே.

      //தங்களிடமிருந்து இந்தப்பதிவினை வாங்கி வெளியிட்டுள்ள தங்கள் நண்பருக்கும் என் பாராட்டுகள் + நன்றிகள்.//

      தங்களின் பாராட்டுகளையும் நன்றிகளை, என் நண்பர் ஏற்றுக்கொள்வாராக !

      தங்களின் அன்பான வருகைக்கும், ஏராளமான சின்னச்சின்ன கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், பூந்தளிர்.

      இந்தப்பதிவினில் ரோஸ் கலரில் அழகாக 12 ரோஜாக்கள் பூத்திருப்பது பார்க்க மிக அழகாக உள்ளது.

      நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,
      நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி.

      பிரியமுள்ள கோபு

      Delete
  34. கோபால் சார் பதிவு என்றாலே கலர் ஃபுல்லா ரசனையுடன் படிக்க நிறைய விஷயங்கள் இருக்கும். இங்கயும் சூப்பரான படங்கல் சுவாரசியமான பயண அனுபவங்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. நார்த் ஸௌத் எல்லா இடங்கலும் சுத்தி பார்த்து நன்கு எஞ்சாய் பண்ணியிருக்கீங்க. இந்தப்பதிவை ஏன் உங்க பக்கம் ப்போடலே. தமிழ் இளங்கோ சார் அவர்கலுக்கு தான் நன்றி சொல்லனும். விடாப்பிடியாக உங்களை தொடர் பதிவு எழுத வச்சுட்டாங்களே. எங்க படிச்சா என்ன கோபால் சாரின் பதிவுகள் படிக்க எல்லாருமே ஓடி வந்து விடுவோமே.ஐந்து வயதில் குதிரை வண்டி சவாரி செய்ததைக்கூட நினைவில் கொண்டுவந்து நகைச்சுவையுடன் சொல்லி இருக்கீங்க. சம்பந்தி காரர்களைப்பற்றி பெருமையா சொல்லி இருக்கீங்க. நன்பர்களை பற்றியும் சிறப்பாக சொல்லி இருக்கீங்க.

    'திருமண சாமான்களை அவசர அவசரமாக ரயிலிலிருந்து இறக்கும் போது என்னையும் ஒரு மூட்டை போல நினைத்து தொப்பென்று கீழே போட்டார்கள்'-- இதை வாசித்து விட்டு சிரிப்பை அடக்கவே முடியல்லே திருவேணி சங்கமத்தில் எப்பவுமே தண்ணீர் நிறையவே ஓடுமே. எப்படியோ நல்ல சுவாரசியமான நகைச்சுவையுடன் கூடிய பதிவு படிச்சு ரசிக்கக்கிடைத்தது. நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... Saturday, January 30, 2016 11:29:00 am

      வாங்கோ, வணக்கம்.

      //கோபால் சார் பதிவு என்றாலே கலர் ஃபுல்லா ரசனையுடன் படிக்க நிறைய விஷயங்கள் இருக்கும். இங்கேயும் சூப்பரான படங்கள் சுவாரசியமான பயண அனுபவங்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது.//

      சிரித்தும், ரசித்தும், கலர் ஃபுல்லா, சுவாரஸ்யமாக எழுதியுள்ள தங்களின் கருத்துக்கள் மகிழ்வளிக்கின்றன.

      //நார்த் ஸௌத் எல்லா இடங்களும் சுத்தி பார்த்து நன்கு எஞ்சாய் பண்ணியிருக்கீங்க.//

      உடம்பில் ஏதோ கொஞ்சம் தெம்பு இருந்தபோது, போக வேண்டிய நிர்பந்தமான வாய்ப்புகள் கிடைத்தபோது, அவற்றை நான் கொஞ்சம் பயன் படுத்திக்கொண்டேன். மற்றபடி ஊர் ஊராகப்போய் ஒவ்வொன்றையும் எஞ்ஜாய் செய்யணும் என்ற ஆசையெல்லாம் எப்போதுமே எனக்குக் கிடையாது.

      //இந்தப்பதிவை ஏன் உங்க பக்கம் போடலே.//

      இதைப்பற்றி பூந்தளிர் அவர்களுக்கு, மேலே என் பதிலில் விளக்கியுள்ளேன்.

      //தமிழ் இளங்கோ சார் அவர்களுக்குத்தான் நன்றி சொல்லனும். விடாப்பிடியாக உங்களை தொடர் பதிவு எழுத வச்சுட்டாங்களே.//

      அவர் மிகவும் நல்ல மனிதர். என்னிடம் மிகவும் அன்பானவர். அனைவரிடமுமே மிகவும் பண்புடன் பழகி வருபவர். எங்கள் ஊர் திருச்சிக்காரர். அதனால் அவருடைய அன்புக்கட்டளையை என்னால் மீற முடியவில்லை.

      //எங்க படிச்சா என்ன கோபால் சாரின் பதிவுகள் படிக்க எல்லாருமே ஓடி வந்து விடுவோமே.//

      அடாடா ..... எவ்வளவு ஒரு அன்புடன் இதை இங்கு ஓடிவந்து சொல்லியுள்ளீர்கள். கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //ஐந்து வயதில் குதிரை வண்டி சவாரி செய்ததைக்கூட நினைவில் கொண்டுவந்து நகைச்சுவையுடன் சொல்லி இருக்கீங்க.//

      சிறு வயதில் முதன்முதலாகக் குதிரை வண்டிப்பயணம் அல்லவா. அதனால் அதை என்னால் மறக்க இயலவில்லை. மேலும் அந்தக் குதிரை தன் மிக நீண்ட வாலால் என் முகத்தில் பிரஷ் அடித்துக்கொண்டே அல்லவா வந்தது. அதனாலும் எனக்கு அது மறக்க முடியாத பயணமாகப் போய் விட்டது.

      // சம்பந்தி காரர்களைப்பற்றி பெருமையா சொல்லி இருக்கீங்க. நண்பர்களை பற்றியும் சிறப்பாக சொல்லி இருக்கீங்க. //

      நாங்கள் இருவரும் சம்பந்தியாவதற்கு முன்பே சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் நெருங்கிய நண்பர்கள். ஒரே ஆபீஸில் வேலை. அக்கம்பக்கத்தில் தான் எங்கள் வீடுகளும். இதைப்பற்றி மிகவும் சுவாரஸ்யமாக என் பதிவு ஒன்றில் எழுதியுள்ளேன். இதோ அதன் இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/12/9.html

      //'திருமண சாமான்களை அவசர அவசரமாக ரயிலிலிருந்து இறக்கும் போது என்னையும் ஒரு மூட்டை போல நினைத்து தொப்பென்று கீழே போட்டார்கள்'-- இதை வாசித்து விட்டு சிரிப்பை அடக்கவே முடியல்லே//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ..... என்னையும் ஒரு மூட்டை போல நினைத்து ரயில் பெட்டியிலிருந்து தொப்பென்று கீழே போட்டதில் ..... இங்கு எத்தனை பேருக்கு சிரிப்பு ! மிக்க மகிழ்ச்சி. :)

      // திரிவேணி சங்கமத்தில் எப்பவுமே தண்ணீர் நிறையவே ஓடுமே.//

      அங்கு நிறையவே தண்ணீர் ஓடும் தான். இருப்பினும் நாங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு அதிக இழுப்போ ஆழமோ இல்லாத ஓர் மணல் மேடான இடத்தினை தேர்ந்தெடுத்துக்கொண்டோம். எங்களுடன் காசியாத்திரைக்கு உடன் வந்தவர்கள் மிகவும் வயதானவர்கள் + முடியாதவர்கள்.

      // எப்படியோ நல்ல சுவாரசியமான நகைச்சுவையுடன் கூடிய பதிவு படிச்சு ரசிக்கக்கிடைத்தது. நன்றி சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிக நீ...ண்...ட... கருத்துரைகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  35. கோபால் சார் பதிவு பக்கம் எப்பவுமே சுவாரசியமா விஷயங்கள் இருக்கும். இந்த பயணத்திலும் நம்ம எல்லாரையும் கூடவே கூட்டிட்டு போறாங்க. ஒவ்வேரு விஷயத்தையும் நகைச்சுவை ததும்ப சொல்லி இருப்பது ரொம்ப நல்லா இருக்கு. தமிழ் இளங்கோ சாருக்கும் கோபால் சாருக்கும் நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் Saturday, January 30, 2016 3:45:00 pm

      வாங்கோ, வணக்கம். தாங்கள் இங்கு வருகைதர ‘பிராப்தம்’ அமைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. :)

      //கோபால் சார் பதிவு பக்கம் எப்பவுமே சுவாரசியமா விஷயங்கள் இருக்கும். இந்த பயணத்திலும் நம்ம எல்லாரையும் கூடவே கூட்டிட்டு போறாங்க. ஒவ்வொரு விஷயத்தையும் நகைச்சுவை ததும்ப சொல்லி இருப்பது ரொம்ப நல்லா இருக்கு. தமிழ் இளங்கோ சாருக்கும் கோபால் சாருக்கும் நன்றிகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். திரு. தமிழ் இளங்கோ சார் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகள்.

      Delete
  36. அருமை அய்யா
    செம நாஸ்டால்ஜிக் பதிவாக இருக்கிறதே..

    ReplyDelete
    Replies
    1. Mathu S Saturday, January 30, 2016 6:57:00 pm

      //அருமை அய்யா. செம நாஸ்டால்ஜிக் பதிவாக இருக்கிறதே..//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  37. சுவாரஸ்யமா இருக்கு உங்க பயண அனுபவம். நான் 2 நாள் பயணம் போனதால உங்க பக்கம் இப்போதான் வருகிறேன். வந்த களைப்பு போறதுக்குள்ள களைப்பு இல்லாமல் மீண்டும் உங்களுடன் பயணித்து வந்து விட்டேன்.

    நட்பான சம்பந்தி....அருமை.

    நல்ல ஞாபக சக்தி சார் உங்களுக்கு....சின்ன வயதுல இருந்து அழகா பயணத்தை சொல்லி இருக்கீங்களே!

    புகைப்படங்களின் தொகுப்பு....அசத்தல்

    ReplyDelete
    Replies
    1. R.Umayal Gayathri Saturday, January 30, 2016 8:47:00 pm

      வாங்கோ, வணக்கம்.

      //சுவாரஸ்யமா இருக்கு உங்க பயண அனுபவம்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //நான் 2 நாள் பயணம் போனதால உங்க பக்கம் இப்போதான் வருகிறேன்.//

      2 நாளாக உங்களைக் காணுமே என அனைவருமே தவித்துப் போய்விட்டோம்.

      //வந்த களைப்பு போறதுக்குள்ள களைப்பு இல்லாமல் மீண்டும் உங்களுடன் பயணித்து வந்து விட்டேன்.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! தாங்கள் இப்படி மேற்கொண்டு மேற்கொண்டு களைப்பு இல்லாமல் பயணிப்பதைக் கேட்கக் கேட்க, நான் இப்போ நானே என் கால்கடுக்க நடந்தே நெடுந்தூரம் பயணிப்பதுபோல நினைத்து, மிகவும் களைத்துப்போய் விட்டேன்.:)

      //நட்பான சம்பந்தி....அருமை.//

      அது ஏதோ தெய்வ சங்கல்ப்பம். அதுபோல அமைந்துள்ளது. எங்கள் நட்பும் இன்றுவரை நல்லபடியாகத் தொடர்ந்துகொண்டே உள்ளது.

      //நல்ல ஞாபக சக்தி சார் உங்களுக்கு....சின்ன வயதுல இருந்து அழகா பயணத்தை சொல்லி இருக்கீங்களே! //

      மறக்க முடியாத சில சம்பவங்களால், அவை இன்றும் என் நினைவில் நின்று, மிகப்பெரிய ஞாபக சக்தி ஆசாமிபோல என்னை உங்களுக்குக் காட்சிப் ப-டு-த்-து-கி-ற-து என நினைக்கிறேன்.

      //புகைப்படங்களின் தொகுப்பு....அசத்தல்//

      மிகவும் சந்தோஷம்.

      >>>>>

      Delete
  38. உங்களின் நேர்த்திக்கு...பத்தரை மாற்று தங்கத்தை கொடுத்துட்டேன்...சார்:)))

    ReplyDelete
    Replies
    1. R.Umayal Gayathri Saturday, January 30, 2016 8:49:00 pm

      //உங்களின் நேர்த்திக்கு...பத்தரை மாற்று தங்கத்தை கொடுத்துட்டேன்...சார்:))) //

      ஆஹா, என்னிடம் உள்ள தங்கங்களையே என்னால் கட்டிக்காக்க முடியாமல் உள்ளது. வைக்க இடமில்லாமல் நானே மிகவும் தவித்துக்கொண்டு இருக்கிறேன். அத்துடன் மேலும் தங்களிடமிருந்து .... அதுவும் பத்தரை மாற்றுத் தங்கமா .... தாங்காதம்மா .... தாங்காது. :)

      உங்களைப் போன்றவர்களின் மாறுபட்ட, வித்யாசமான, நகைச்சுவை கலந்த, படித்து ரஸிக்கும்படியான, தங்கம் போல ஜொலிக்கும், நேர்த்தியான பின்னூட்டங்களைவிட பத்தரை மாற்றுத் தங்கமா எனக்குப் பெரிசு?

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் VGK

      Delete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. Good memories shared. Interesting... Cart ride indeed was hilarious. Ofcourse Journey never ends.... :)

    ReplyDelete
    Replies
    1. Shakthiprabha Saturday, January 30, 2016 10:10:00 pm

      வாங்கோ, ஷக்தி. வணக்கம்.

      //Good memories shared. Interesting... Cart ride indeed was hilarious. Ofcourse Journey never ends.... :) //

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு

      Delete
  41. "ஓ" போடவேண்டும் என்று தோன்றுகிறது. பொறுமையாக பழைய நினைவுகளை மீட்டெடுத்துத் தொகுத்து வழங்கிய பாங்கு மிகவும் போற்றற்குரியது. எனக்கு பொறாமையாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பழனி.கந்தசாமி Sunday, January 31, 2016 4:34:00 am

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //"ஓ" போடவேண்டும் என்று தோன்றுகிறது. பொறுமையாக பழைய நினைவுகளை மீட்டெடுத்துத் தொகுத்து வழங்கிய பாங்கு மிகவும் போற்றற்குரியது.//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி. பழைய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் இன்று அசை போட்டுப்பார்ப்பதில்தான் ஆனந்தமே உள்ளது. ‘ஓ’ போட்டுக்கொள்ளவும்.

      //எனக்கு பொறாமையாய் இருக்கிறது.//

      தங்களின் இன்றைய எழுச்சிமிக்க பயண ஆர்வங்களையும் அதற்கான பதிவுகளையும் பார்த்தால் எனக்கும் உங்கள் மேல் பொறாமையாகத்தான் உள்ளது. :)

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

      அன்புடன் VGK

      Delete
  42. சார் நான் உங்க பக்கம் புது பதிவு ஏதாச்சிம் போட்டிருக்கீங்களான்னு அங்க தேடிக்கிட்டு இருந்தேன். படங்கள் எல்லாமே தனியா கதைசொல்லுராமாதிரி அழகான படங்களுடன் பயணகட்டுரை தூள் கிளப்புது. என்னமா ரசிச்சு ஒரு விஷயம் கூட நினைவுல வச்சு சுவாரசியமா எழுதி இருக்கீங்க. தமிழ் இளங்கோ சாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்

    ReplyDelete
    Replies
    1. ஆல் இஸ் வெல்....... Sunday, January 31, 2016 10:20:00 am

      வாங்கோ, வணக்கம்.

      //சார் நான் உங்க பக்கம் புது பதிவு ஏதாச்சிம் போட்டிருக்கீங்களான்னு அங்க தேடிக்கிட்டு இருந்தேன்.//

      அங்கு நான் என் வலைத்தளத்தில் புதிய வெளியீடுகள் ஏதும் இப்போது தராமல் கொஞ்சம் நீண்ட இடைவெளி கொடுத்துள்ளேன்.

      //படங்கள் எல்லாமே தனியா கதை சொல்லுரா மாதிரி. அழகான படங்களுடன் பயணகட்டுரை தூள் கிளப்புது. என்னமா ரசிச்சு ஒரு விஷயம் கூட நினைவுல வச்சு சுவாரசியமா எழுதி இருக்கீங்க.//

      தங்களின் தனி ரசனைக்கு மிகவும் சந்தோஷம். அதனை இங்கு சுவாரஸ்யமாக எடுத்துச்சொல்லியுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் தங்கள் கருத்துரையிலும் தூள் கிளம்ப்பிட்டீங்க. :)

      //தமிழ் இளங்கோ சாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் எங்கள் இருவரின் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  43. திரு தமிழ் இளங்கோ அவர்களின் வலைப்பக்கத்தில் தங்களது பயண அனுபவங்களைக் கண்டு மகிழ்ந்தேன். வழக்கமான உங்களது பாணியான செறிவான புகைப்படங்கள், கோர்வையான சொற்றொடர், கூரிய நினைவாற்றல் என்ற பல நிலைகளில் உங்களது பயணத்தில் நானும் கலந்துகொண்டேன். எனது தொடர் மகாமகப்பதிவுகளின் காரணமாக நண்பர்களின் தளங்களுக்குச் செல்ல தாமதமாகிறது. மகாமகம் வரை பொறுத்துக்கொள்ளவேண்டுகிறேன். பின்னர் தொடர்ந்து வருவேன். பகிர்ந்த உங்களுக்கும் வெளியிட்ட திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. Dr B Jambulingam Sunday, January 31, 2016 10:37:00 am

      வாங்கோ, வணக்கம்.

      //திரு தமிழ் இளங்கோ அவர்களின் வலைப்பக்கத்தில் தங்களது பயண அனுபவங்களைக் கண்டு மகிழ்ந்தேன். வழக்கமான உங்களது பாணியான செறிவான புகைப்படங்கள், கோர்வையான சொற்றொடர், கூரிய நினைவாற்றல் என்ற பல நிலைகளில் உங்களது பயணத்தில் நானும் கலந்துகொண்டேன். எனது தொடர் மகாமகப்பதிவுகளின் காரணமாக நண்பர்களின் தளங்களுக்குச் செல்ல தாமதமாகிறது. மகாமகம் வரை பொறுத்துக்கொள்ளவேண்டுகிறேன். பின்னர் தொடர்ந்து வருவேன். பகிர்ந்த உங்களுக்கும் வெளியிட்ட திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.//

      பல்வேறு வேலைகளுக்கு இடையேயும் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் எங்களின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      Delete
  44. படங்களுடன் பயண அனுபவங்கள் ரொம்ப நல்லா இருக்கு..தமிழ் இளங்கோ சாருக்கும் கோபால் சாருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்

    ReplyDelete
    Replies
    1. 98
      srini vasan Sunday, January 31, 2016 6:00:00 pm

      வாங்கோ, வணக்கம்.

      //படங்களுடன் பயண அனுபவங்கள் ரொம்ப நல்லா இருக்கு..தமிழ் இளங்கோ சாருக்கும் கோபால் சாருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் இருவரின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      Delete
  45. ஒரு பதிவினில் ஊரையே சுற்றிக் காட்டினார்கள் வி. ஜி. கே. அவர்கள்.
    படங்களும் விளக்கங்களும் சுவைபட இருந்தன.

    ReplyDelete
    Replies
    1. Reply

      அ. முஹம்மது நிஜாமுத்தீன் Sunday, January 31, 2016 9:35:00 pm

      வாங்கோ நண்பரே, வணக்கம்

      //ஒரு பதிவினில் ஊரையே சுற்றிக் காட்டினார்கள் வி. ஜி. கே. அவர்கள்.
      படங்களும் விளக்கங்களும் சுவைபட இருந்தன.//

      நினைத்தேன் வந்தாய் ..... நூறு வயது ..... :)

      இந்தப்பதிவின் படங்களும் விளக்கங்களும் போலவே தங்களின் பின்னூட்டமும் அதன் எண்ணிக்கையும் சுவைபட அமைந்துள்ளது.

      Delete
  46. //ஜிம்மா மசூதி//

    இரு இடங்களில் இப்படி இருப்பதை,
    'ஜும்ஆ மசூதி' என்று குறிப்பிடலாம்.
    (வெள்ளிக்கிழமை என்றும் வெள்ளிக்கிழமை மதிய சிறப்புத் தொழுகை என்றும் பொருள்படும்.)

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் Sunday, January 31, 2016 9:39:00 pm

      //ஜிம்மா மசூதி//

      இரு இடங்களில் இப்படி இருப்பதை, 'ஜும்ஆ மசூதி' என்று குறிப்பிடலாம்.
      (வெள்ளிக்கிழமை என்றும் வெள்ளிக்கிழமை மதிய சிறப்புத் தொழுகை என்றும் பொருள்படும்.)

      ஆஹா, தங்களின் இந்தத் தங்கமான தகவலுக்கு நன்றி.

      நம் இனிய நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் இதனை கவனத்தில் கொண்டு, தகுந்த திருத்தங்கள் செய்வார்கள் என நம்புவோம் !

      Delete
    2. 99-104
      அ. முஹம்மது நிஜாமுத்தீன் Sunday, January 31, 2016 9:42:00 pm

      //100 comments://

      நான் 100-ல் ஒருவன்!

      என்னைப்பொறுத்தவரை தாங்கள் ’ஆயிரத்தில் ஒருவன்!’

      இந்தப் பதிவைப் பொறுத்தவரை 99 to 104 நம்முடையதே, மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், நண்பரே.

      அன்புடன் VGK

      Delete
    3. சரி செய்து விட்டேன் அய்யா! சுட்டிக் காட்டிய நண்பருக்கு நன்றி!

      Delete
    4. தி.தமிழ் இளங்கோ Sunday, January 31, 2016 11:01:00 pm

      //சரி செய்து விட்டேன் அய்யா! சுட்டிக் காட்டிய நண்பருக்கு நன்றி!//

      'ஜும்ஆ மசூதி’ ..... மிக்க நன்றி, சார்.

      அன்புடன் VGK

      Delete
  47. எல்லாம் அருமையான நினைவலைகள். ஐந்து வயதில் இருந்து ஆரம்பித்து அந்த அந்த வயதுக்கேற்ற படங்களுடன் அருமையாகத் தொகுத்திருக்கிறார் திரு வைகோ அவர்கள். இதை இங்கே வெளியிட்ட திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. எல்லாம் நன்றாக உள்ளன. அருமையான பயண அனுபவங்கள். குதிரை வண்டிப் பயணம் மிக அருமை! :)

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam Monday, February 01, 2016 3:54:00 pm

      வாங்கோ மேடம், வணக்கம்.

      உங்களுக்கு என்ன அதிர்ஷ்டம் பாருங்கோ. உங்கள் வருகை எண்: 108 !

      //எல்லாம் அருமையான நினைவலைகள். ஐந்து வயதில் இருந்து ஆரம்பித்து அந்த அந்த வயதுக்கேற்ற படங்களுடன் அருமையாகத் தொகுத்திருக்கிறார் திரு வைகோ அவர்கள்.//

      தங்களின் கருத்துக்களும் அருமை. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      //இதை இங்கே வெளியிட்ட திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.//

      தங்களுடன் சேர்ந்து திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

      //எல்லாம் நன்றாக உள்ளன. அருமையான பயண அனுபவங்கள். குதிரை வண்டிப் பயணம் மிக அருமை! :)//

      மிகவும் சந்தோஷம் மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மீண்டும் என் இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு

      Delete
  48. Replies
    1. Pattu Raj Monday, February 01, 2016 5:09:00 pm

      வாங்கோ பட்டு மாமி, வணக்கம். செளக்யமா?

      //Arumai, as usual.//

      தங்களின் அபூர்வ வருகையும், ‘அருமை, வழக்கம்போல’ என்ற அருமையான வழக்கமான கருத்துக்களும், எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. மிக்க நன்றி, பட்டு மாமி.

      பிரியத்துடன் கோபு

      Delete
  49. அன்பின் கோபு ஸார் ,தங்களின் பயண அனுபவங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாகப் படித்ததும்,அந்தந்த இடங்களுக்கு அந்தந்த காலகட்டத்தில் சென்று வந்த ஒரு சுகானுபவத்தை எப்படி இவ்வளவு
    நினைவலைகளை மீட்டெடுத்து நெஞ்சின் அலைகளாக கரை புரள எழுதி அசத்தி இருக்கிறீர்கள். உங்களது எழுத்துத் திறமைக்கும் படிப்பவர்களையும் பார்க்க வைக்கும் திறமைக்கும்
    இன்னும் இன்றும் இங்கும் ஒரு தங்கப் பதக்கம் தரத்தான் வேண்டும்....! எத்தனையோ எழுத்துக்களை படித்துக் கொண்டே வந்தாலும் தங்களது எழுத்துகளில் எழும் ரசனையும்
    ஒரு ஜில்லென்ற நகைச்சுவையும் ஒரே எழுத்துவலையில் ஒரு லட்சம் மீன்கள் பிடிக்கும் சாதுரியமும்...உங்கள் எழுத்து ராஜ்யத்தில் நீங்கள் தான் இங்கு இணைய முடி சூடிய மன்னர்..!
    உங்களுக்கு வரும் பின்னூட்டங்களே அதைச் சொல்லாமல் சொல்லும்.. உங்கள் பயண அனுபவங்கள் அலாதியானது, படிப்பவர் நெஞ்சத்தை விட்டும் அகலாதது. அருமையான
    இந்தப் பதிவை படங்களுடன் பதித்து சொல்லி அழைப்பு விடுத்ததற்கு மிக்க நன்றி. இல்லாவிடில் தெரிந்திராது.
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்

    ReplyDelete
    Replies
    1. ஜெயஸ்ரீ ஷங்கர் Tuesday, February 02, 2016 10:18:00 pm

      வாங்கோ திருமதி. ’ஸ்ரீ’ மேடம், வணக்கம். செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?

      //அன்பின் கோபு ஸார், தங்களின் பயண அனுபவங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாகப் படித்ததும்,அந்தந்த இடங்களுக்கு அந்தந்த காலகட்டத்தில் சென்று வந்த ஒரு சுகானுபவத்தை ..... எப்படி இவ்வளவு நினைவலைகளை மீட்டெடுத்து நெஞ்சின் அலைகளாக கரை புரள எழுதி அசத்தி இருக்கிறீர்கள்.//

      எனக்கு மிகவும் பிடித்தமான, மிகச்சிறந்த தரமான, தங்கமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான தங்கள் மூலம் இதனைக் கேட்பதில் தன்யனானேன்.

      //உங்களது எழுத்துத் திறமைக்கும் படிப்பவர்களையும் பார்க்க வைக்கும் திறமைக்கும் இன்னும் இன்றும் இங்கும் ஒரு தங்கப் பதக்கம் தரத்தான் வேண்டும்....! //

      தங்களின் அன்பான வருகையே இன்று எனக்குக் கிடைத்த மாபெரும் தங்கப்புதையலாக நான் நினைத்து மகிழ்கிறேன். :)

      //எத்தனையோ எழுத்துக்களை படித்துக் கொண்டே வந்தாலும் தங்களது எழுத்துகளில் எழும் ரசனையும், ஒரு ஜில்லென்ற நகைச்சுவையும், ஒரே எழுத்துவலையில் ஒரு லட்சம் மீன்கள் பிடிக்கும் சாதுரியமும்...உங்கள் எழுத்து ராஜ்யத்தில் நீங்கள் தான் இங்கு இணைய முடி சூடிய மன்னர்..!//

      அப்படியெல்லாம் ஒரேயடியாகச் சொல்லாதீங்கோ. உங்களின் ஒருசில எழுத்துக்களுக்கு முன்னால், நானெல்லாம் ஒன்றுமே இல்லை என எனக்குள் நினைத்து வெட்கப்பட்டுக் கொண்டுள்ளேன்.

      உங்களிடம் இதுபற்றி நான் இன்னும் நிறைய தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலம் பேச வேண்டியது உள்ளது. தங்களைத் தொடர்ந்து உற்சாகமாக எழுதச் சொல்லி வற்புருத்த வேண்டிய கடமையும் எனக்கு உள்ளது.

      //உங்களுக்கு வரும் பின்னூட்டங்களே அதைச் சொல்லாமல் சொல்லும்..//

      பின்னூட்டங்கள் ஓரளவு வந்து குவிந்துகொண்டுதான் உள்ளன. இருப்பினும் ஆழந்த வாசிப்புடன் கூடிய தங்களைப் போன்ற ஓருசிலரின், ஆத்மார்த்தமான பின்னூட்டங்களையே நான் எப்போதும் எதிர்பார்த்து ஏங்குவது உண்டு.

      //உங்கள் பயண அனுபவங்கள் அலாதியானது, படிப்பவர் நெஞ்சத்தை விட்டும் அகலாதது. அருமையான இந்தப் பதிவை படங்களுடன் பதித்து சொல்லி அழைப்பு விடுத்ததற்கு மிக்க நன்றி. இல்லாவிடில் தெரிந்திராது.
      அன்புடன் ஜெயஸ்ரீ ஷங்கர் //

      தங்களின் சூழ்நிலைகள் தெரிந்து, நான் தங்களை அடிக்கடி என் பதிவுகள் பக்கம் வரச்சொல்லி தொந்தரவு செய்வது இல்லை.

      தங்களின் தங்கமான எழுத்துக்களை நான் பார்த்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகின்றது. அதனால் தங்களுக்கு இந்த ஒரு பதிவுக்கு மட்டும் அழைப்பு விடுத்துப்பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக என் அந்த அழைப்பு தங்களுக்குக் கிடைத்து, தாங்கள் அதனை ஏற்று, இங்கு வருகை தந்து கருத்தளித்துள்ளதில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது என்பதனை என்னால் எழுத்தில் சொல்லி உங்களுக்குப் புரிய வைக்க இயலவில்லை.

      தங்களின் பேரன்புடன் கூடிய வருகைக்கும், அரிய பெரிய ஆத்மார்த்தமான பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீ மேடம்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  50. கோபு அண்ணா
    இதெல்லாம் ரொம்ப ஓவர். நான் என்னடான்னா ஊர், ஊரா சுத்திட்டு (HIGHLIGHT 2010ல போன அந்தமான் பயணம்) பயணக் கட்டுரை எழுத முடியாம நொந்து நூடுல்ஸா இருக்கேன். என் வலைத் தளத்துல எழுதவே நேரத்தக் காணும்ன்னு நொந்திருக்கும் போது இப்படி இன்னொருத்தர் வலைத்தளத்துல எழுதி இருக்கீங்களே, இது என்ன நியாயம்! மனுஷனுக்கு ஞாபக மறதியே இருக்காதா. சமீபத்தில போன பயணத்தப் பத்தி எழுதவே ஞாபக சக்தி பத்தல. இவர் என்னடான்னா அம்மா வயத்துல இருந்த பொழுது போன பயணத்தப் பத்தி கூட எழுதுவார் போல இருக்கே.

    என்ன செய்ய! நமக்கு முடிவது ரசிப்பது மட்டுமே. அத்த செய்யறேன்.

    வணக்கத்துடனும்,
    வாழ்த்துக்களுடனும்,
    கொஞ்சம் புகைச்சலுடனும்

    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
    Replies
    1. 116
      Jayanthi Jaya Wednesday, February 03, 2016 5:12:00 pm

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா. உங்களை ஆளையே காணுமேன்னு ரொம்பக் கவலைப் பட்டுக்கொண்டே இருந்தேன். நினைத்தேன் வந்தாய் .... நூறு வயது. நூறு அல்ல 114, 115, 116, 117, 118 வயது. இந்தப்பதிவின் பின்னூட்ட எண்ணிக்கைகள் இவ்வாறு என்னைச் சொல்ல வைக்கின்றன.

      //கோபு அண்ணா, இதெல்லாம் ரொம்ப ஓவர். நான் என்னடான்னா ஊர், ஊரா சுத்திட்டு (HIGHLIGHT 2010ல போன அந்தமான் பயணம்) பயணக் கட்டுரை எழுத முடியாம நொந்து நூடுல்ஸா இருக்கேன். என் வலைத் தளத்துல எழுதவே நேரத்தக் காணும்ன்னு நொந்திருக்கும் போது//

      ’அந்த .... மானைப் பாருங்கள் .... அழகு’ ன்னு தலைப்பிட்டு இன்றைக்கே எழுதி இன்றைக்கே வெளியிடுங்கோ ஜெயா. ஆவலுடன் படிக்கக் காத்திருக்கிறான் உங்கள் கோபு அண்ணா.

      //இப்படி இன்னொருத்தர் வலைத்தளத்துல எழுதி இருக்கீங்களே, இது என்ன நியாயம்!//

      ஜெயாவைப்போலவே எனக்கு இந்தத் திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களும் மிகவும் நெருங்கிய நட்பானவர். அவர் சொல்லை என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை. அதனால் என் வலைப்பதிவுக்கு தற்காலிகமாக நான் மிகப் பெரிய பூட்டாகப் போட்டு பூட்டிவிட்டாலும்கூட, இந்த ஒரு கட்டுரையை அவரின் அன்புக்காக நான் எழுதி அவருக்கே மெயில் மூலம் அனுப்பி வைத்து, அவரின் வலைப்பதிவிலேயே வெளியிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் என் அன்புக்காக இதனை ஏற்றுக்கொண்டு உதவியுள்ளார். இது நியாயமா இல்லையான்னு ஜெயாதான் எனக்குச் சொல்ல வேண்டும். :)

      >>>>>

      Delete


    2. 117

      கோபு >>>>> ஜெயா (2)

      //மனுஷனுக்கு ஞாபக மறதியே இருக்காதா. சமீபத்தில போன பயணத்தப் பத்தி எழுதவே ஞாபக சக்தி பத்தல. இவர் என்னடான்னா அம்மா வயத்துல இருந்த பொழுது போன பயணத்தப் பத்தி கூட எழுதுவார் போல இருக்கே.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      அம்மா வயத்துல இருந்த பொழுது போன பயணத்தைப் பத்தி கூட கற்பனை செய்து எழுதலாமா என்ற ஆசையைக் கிளப்பி விட்டுட்டீங்களே, ‘ஜெ’ :)

      //என்ன செய்ய! நமக்கு முடிவது ரசிப்பது மட்டுமே. அத்த செய்யறேன்.//

      அத்தைச்செய்யவே இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டுள்ளீர்கள். கடந்த ஒருவாரமாகவே இதனை ரசித்துப் படித்துக் கொண்டு, என்ன எழுதலாம், அதை எப்படி எழுதலாம்ன்னு யோசித்துக்கொண்டே இருந்தீர்களோ, என்னவோ :)

      //வணக்கத்துடனும், வாழ்த்துக்களுடனும், கொஞ்சம் புகைச்சலுடனும்//

      வணக்கத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி, ஜெயா.

      கொஞ்சம் புகைச்சலுக்கு ..... மிக்க நன்றி, ஜெயா. :))))))

      //ஜெயந்தி ரமணி//

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  51. //திருமண சாமான் - சட்டிகளுடன் என்னையும் என் வீட்டார் சூலமங்கலம் கிராமத்திற்குக் கூட்டிப்போனார்கள். திருமண சாமான்களை அவசர அவசரமாக ரயிலிலிருந்து இறக்கும் போது என்னையும் ஒரு மூட்டை போல நினைத்து தொப்பென்று கீழே போட்டார்கள்.//

    அப்பவே அமுக்கு, துமுக்குன்னு இருந்திருப்பேளோ?

    ReplyDelete
    Replies
    1. 118
      Jayanthi Jaya Wednesday, February 03, 2016 5:14:00 pm

      **திருமண சாமான் - சட்டிகளுடன் என்னையும் என் வீட்டார் சூலமங்கலம் கிராமத்திற்குக் கூட்டிப்போனார்கள். திருமண சாமான்களை அவசர அவசரமாக ரயிலிலிருந்து இறக்கும் போது என்னையும் ஒரு மூட்டை போல நினைத்து தொப்பென்று கீழே போட்டார்கள்.**

      //அப்பவே அமுக்கு, துமுக்குன்னு இருந்திருப்பேளோ?//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இருக்கலாம், இருக்கலாம்.

      ஜெயாவைப்போல சுறுசுறுப்பாக, மிகவும் ஸ்லிம்மாக, காற்றில் பறக்கும் பஞ்சுபோல, இருக்கணும் என்று எனக்கும் ஆசைதான். என்ன செய்ய? ஆசை இருக்கு தாசில் பண்ண ..... ஆனால் அதிர்ஷ்டம் இருக்கு ..... என்னவோ மேய்க்க.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  52. தாமதத்திற்கு மன்னித்து கொள்ளவும்.....சில பிரச்சனைகள்காரணமாக இணையப்பக்கம் வராமல் இருந்தேன். இன்றுதான் மெயில் பார்த்தேன். வழக்கம் போல உங்கள் பாணியில் இந்த பயணப்பதிவு மிக நன்றாக வந்திருக்கிறது.......பாராட்டுக்கள்......வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. Avargal Unmaigal Friday, February 05, 2016 8:49:00 am

      வாங்கோ என் அன்புத்தம்பி .... தங்கக்கம்பி, வணக்கம்.

      //தாமதத்திற்கு மன்னித்து கொள்ளவும்.....சில பிரச்சனைகள்காரணமாக இணையப்பக்கம் வராமல் இருந்தேன். இன்றுதான் மெயில் பார்த்தேன்.//

      அதனால் என்ன? நானும் அப்படியேதான் இப்போதெல்லாம்.

      //வழக்கம் போல உங்கள் பாணியில் இந்த பயணப்பதிவு மிக நன்றாக வந்திருக்கிறது.......பாராட்டுக்கள்......வாழ்க வளமுடன்//

      தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
    2. குருஜி எம்பூட்டு எம்பூட்டு போட்டா படங்க அல்லா படமும் சூப்பரா கீதே.ரயிலு ஏ.ஸி.காரு படகு ரிக்சா அல்லாத்துலவும் போயிகினீக. மாட்டு வண்டில போயிகிடலயா..... போனீகனா அதுவும் போட்டா புடிச்சி போட்டுபோடுவீகல்லா.சரியான ஊருசுத்திதா எங்கட குருஜி.

      Delete
    3. mru Friday, February 05, 2016 10:22:00 am

      வாங்கோ முருகு, வணக்கம்மா, நல்லா சுகமா இருக்கீங்களா?

      //குருஜி எம்பூட்டு எம்பூட்டு போட்டா படங்க அல்லா படமும் சூப்பரா கீதே.//

      மிகவும் சந்தோஷம் முருகு. :)

      //ரயிலு, ஏ.ஸி.காரு, படகு, ரிக்சா அல்லாத்துலவும் போயிகினீக.//

      ஒரே ஒருமுறை டிரைவர் அருகே அமர்ந்துகொண்டு லாரியில்கூட திருச்சி to பெரம்பலூர் (சுமார் 50 கிலோ மீட்டர்) சென்றுள்ளேன்.

      அது போல டெம்போ என்ற வண்டியில், வடக்கே ஜபல்பூரிலிருந்து கமேரியா என்ற இடம்வரை பயணம் செய்துள்ளேன். ஆரம்பத்தில் செளகர்யமாக ஏறி அமர்ந்துவிட்டேன். பிறகு வண்டி கிளம்பி போகப்போக ஜனங்கள் பலரும் ஏறிக்கொண்டே இருந்தார்கள். புளிமூட்டை போல அடைக்கப்பட்டும், பலர் தொத்திக்கொண்டு பயணம் செய்தார்கள். 10 பேர்கள் மட்டுமே அமரக்கூடிய அந்த வண்டியில் 50 பேர்களை ஏற்றினார்கள். ஒரு அரை மணி நேரப் பயணம்தான். இருப்பினும் அதுவே மூச்சுவிடவே முடியாமல் திணறிப்போய் மிகவும் எனக்குக் கஷ்டமாகிவிட்டது. :)

      //மாட்டு வண்டில போயிகிடலயா..... போனீகனா அதுவும் போட்டா புடிச்சி போட்டுபோடுவீகல்லா.//

      ஒத்தை மாட்டு வண்டி, ரெட்டை மாட்டு வண்டி என அனைத்திலும் பயணம் செய்துள்ளேன். அந்தப் படங்களெல்லாம் என்னிடம் இல்லை. அப்போதெல்லாம் கேமாராவே யாரிடமும் இருக்காதும்மா. அதனால் அப்போது படமெல்லாம் எடுக்க முடியவில்லை.

      //சரியான ஊருசுத்திதா எங்கட குருஜி.//

      அதெல்லாம் ஒரு காலம். இப்போ வீட்டைவிட்டு எங்கும் அனாவஸ்யமாக புறப்படுவதே இல்லை. சுத்த சோம்பேறி ஆகிவிட்டேன். பயணங்கள் என்றாலே இப்போது எனக்கு மிகவும் வெறுப்பாக உள்ளது.

      முருகுவின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் குருஜி கோபு

      Delete
  53. விஜிகே சார் பதிவு அட்டகாசம். அருமை. குதிரை வண்டிப் பயணம் பற்றிப் படித்துச் சிரித்தேன். ஃப்ளைட் கார் பயணம் அருமை. அப்புறம் அந்த அவார்டு பயணங்களுக்கு வாழ்த்துகள். :) பகிர்வுக்கு நன்றி இளங்கோ சார் :)

    ReplyDelete
    Replies
    1. 124
      Thenammai Lakshmanan Monday, February 08, 2016 11:44:00 pm

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      //விஜிகே சார் பதிவு அட்டகாசம். அருமை. குதிரை வண்டிப் பயணம் பற்றிப் படித்துச் சிரித்தேன். ஃப்ளைட் கார் பயணம் அருமை. அப்புறம் அந்த அவார்டு பயணங்களுக்கு வாழ்த்துகள். :) பகிர்வுக்கு நன்றி இளங்கோ சார் :)//

      தங்களின் அன்பான வருகைக்கும், ரசித்து சிரித்து மகிழ்ந்ததற்கும், அருமையான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபால்

      Delete
  54. மனந்திறந்த அழகான பயண அனுபவப் பகிர்வு. நகைச்சுவை மிளிரும் பதில்களை மிகவும் ரசித்தேன். முக்கியமாய் அந்தக் குதிரை வண்டிப் பயணம். சாதனைகளின் சங்கமக் குறிப்புகள் வியக்கவைக்கின்றன. பயணத்துணை குறித்த பதில் வெகு சுவாரசியம். சரியான பயணத்துணைதான். பயணங்களில் படம் எடுத்துப் பாதுகாத்து வைத்திருப்பது சிறப்பு. அவற்றையெல்லாம் மீளப்பார்க்கையில் அந்நாளையக் காட்சிகள் கண்முன் தோன்றி மகிழ்விப்பது உண்மை. மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் கோபு சார். இங்கு வலையில் பகிர்ந்துகொண்ட இளங்கோ ஐயாவுக்கு நன்றி.

    ReplyDelete
  55. 127
    கீத மஞ்சரி Saturday, February 13, 2016 10:29:00 am

    வாங்கோ மேடம், வணக்கம்.

    //மனந்திறந்த அழகான பயண அனுபவப் பகிர்வு. நகைச்சுவை மிளிரும் பதில்களை மிகவும் ரசித்தேன். முக்கியமாய் அந்தக் குதிரை வண்டிப் பயணம். சாதனைகளின் சங்கமக் குறிப்புகள் வியக்கவைக்கின்றன. பயணத்துணை குறித்த பதில் வெகு சுவாரசியம். சரியான பயணத்துணைதான். பயணங்களில் படம் எடுத்துப் பாதுகாத்து வைத்திருப்பது சிறப்பு. அவற்றையெல்லாம் மீளப்பார்க்கையில் அந்நாளையக் காட்சிகள் கண்முன் தோன்றி மகிழ்விப்பது உண்மை. மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் கோபு சார். இங்கு வலையில் பகிர்ந்துகொண்ட இளங்கோ ஐயாவுக்கு நன்றி.//

    தங்களின் அன்பான வருகைக்கும், ஒவ்வொன்றையும் அழகாக ரஸித்துச் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் எங்கள் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் மேடம்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete