Wednesday 21 December 2011

டமில்நாடு நல்ல தமிழ் நாடு


அறிஞர் அண்ணா, 1967 - இல் ஆட்சிக்கு வந்தவுடன், அதுவரை சென்னை மாகாணம் ( MADRAS STATE )  என்று இருந்த பெயரை தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்தார். பெயர் மாற்றம் நடந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் அரசு அலுவலக நடவடிக்கைகளில் ஆங்கிலத்தில் டமில் நாடு” ( TAMIL NADU ) என்றும் தமிழில் தமிழ் நாடு என்றும் குறிப்பிடப் படுகிறது. அதே போல தமிழையும் “டமில்” ( TAMIL )  என்றே குறிக்கின்றனர். இந்த நடைமுறை தமிழ் நாடு முழுக்க விரவி உள்ளது. தமிழ் என்பதற்கு ஆங்கிலத்தில் “ THAMIZH ” என்று எழுதுவதே சரியான வடிவம் ஆகும். சிலர் “ THAMIL “ என்றும் எழுதுகின்றனர்.

தமிழரசன் “டமிலரசன் (TAMILARASAN) எனவும், தமிழ் அரசி “டமில் அரசி(TAMILARASI) எனவும், தமிழ் மணி “டமில் மணி (TAMIL MANI) எனவும் தமிழர்களின் பெயர்கள் எழுதப் படுகின்றன. தமிழ் நாடு சைவம் வைணவம் இரண்டும் தழைத்தோங்கிய நாடு. எனவே திருக் கோயில்கள் உள்ள ஊர்கள் அனைத்தும் திரு ”  என்ற சொல்லொடு அழைக்கப் பட்டன. ஆனால் திருவுக்குப் பதிலாக டி ( T ) ஒலியில் டிரு (TIRU) என உச்சரிக்கப் படுகிறது. உதாரணம் திருவாரூர் > டிருவாரூர் (TIRUVARUR) , திருவையாறு > டிருவையாறு (TIRUVAIYARU) , திருவானைக் கோயில் > டிருவானைக் கோயில் ( TIRUVANAIK KOYIL) , திருவண்னாமலை > டிருவண்னாமலை (TIRUVANNAMALAI) , திருப்பூர் > டிருப்பூர் (TIRUPUR)  –  இவ்வாறாக பல ஊர்கள். சில ஊர்கள் ஆங்கிலேயர் அழைத்தது போலவே இன்னும் ஒலிக்கின்றன. தஞ்சாவூர் > ‘’டேஞ்சூர்” (TANJORE) திருவல்லிக்கேணி > ட்ரிப்ளிகேன்” (TRIPLICANE) திண்டுக்கல் > டிண்டிகல்” (DINDIGUL), திருச்சிராப் பள்ளி டிருச்சிராப்பள்ளி “ ( TIRUCHIRAPALLI) அல்லது ட்ரிச்சி “ (TRICHY), மதுரை > “மடுரை” (MADURAI).  

மெட்ராஸ் (MADRAS) என்ற பெயர் சென்னை (CHENNAI)  என்று மாற்றப் பட்டு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் சென்னை உயர் நீதி மன்றத்தில்,  “மெட்ராஸ் ஹைகோர்ட்” (MADRAS HIGH COURT) என்ற பெயரிலேயே  அலுவலக வேலைகள் நடைபெறுகின்றன. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் யாவும் இவ்வாறே இருக்கின்றன.

 மணக்க வரும் தென்றலிலே  
  குளிரா இல்லை?  தோப்பில்                  
  நிழலா இல்லை?
 தணிப்பரிதாம் துன்பமிது!
  தமிழகத்தின தமிழ்த் தெருவில்
  தமிழ்தான் இல்லை!            
                     - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.( தமிழியக்கம் )




3 comments:

  1. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    சைக்கிளை மிதிவண்டி என மாற்றலாம்
    ஆனால் சைக்கிளைப் பிரித்தால்
    தமிழ் காணாமல் போய் விடும் என்பார்கள்
    எல்லாமே மேலோட்டமாகத்தான் நடக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. // Ramani said...மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    சைக்கிளை மிதிவண்டி என மாற்றலாம் ஆனால் சைக்கிளைப் பிரித்தால் தமிழ் காணாமல் போய் விடும் என்பார்கள் எல்லாமே மேலோட்டமாகத்தான் நடக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள் //

    வணக்கம்! ரமணி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! அயல்நாட்டினர் கண்டுபிடித்த பல பொருட்களை, உலகப் பொதுத்தன்மை (UNIVERSAL) கருதி அந்த பெயரிலேயே அழைப்பதில் தவறு இல்லை. உதாரணம் நீங்கள் குறிப்பிட்ட சைக்கிள் ( CYCLE) மற்றும் பஸ் ( BUS ), ஆட்டோ ( AUTO), டியூப் ( TUBE ), டெலிவிஷன் (TELEVISION) போன்றவை. அதே போல அயல் நாட்டினர் பெயர்கள். ஷேக்ஸ்பியரையே ஜெகப் பிரியர் என்று சொல்ல வேண்டும் என்று சொன்னவர்களும் ஒரு காலத்தில் உண்டு. இது தேவையில்லை.

    ReplyDelete
  3. அருமை! த.ம. 2
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete