Saturday 28 September 2013

தென்றலின் கனவு – சசிகலா சங்கர் (நூல் விமர்சனம்)



முன்னுரை:

சகோதரி  சங்கர் சசிகலா  அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகிலுள்ள அம்மையப்பட்டுகிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். ” தென்றல்’ ( http://veesuthendral.blogspot.in ) என்ற தலைப்பில் தனது வலைப்பதிவினில் கவிதைகளை எழுதி வருகிறார். இவரது கவிதைகள் வராத நாளே இல்லை எனலாம். நான்வலைச்சரம்ஆசிரியராக இருந்தபோது அவரைப்பற்றி  // சகோதரி தென்றல்சசிகலா கவிதைகளில் உள்ள எளிமையான சொற்கள், கவிதைநடை புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு கவிதைகளை நினைவூட்டுகின்றன. சகோதரியின் அருமையான கவிதை வரிகள்.... // என்று எழுதி இருந்தேன்.( http://blogintamil.blogspot.in/2013/02/2.html  )

சென்ற ஆண்டு (நவம்பர், 2012)  தமிழ்நாடு எங்கும் நிலவிய காய்ச்சல் எனக்கும் வந்தது. அதுசமயம் ஓய்வில் புத்தகங்கள் படிப்பதில் நேரத்தைக் கழித்தேன். அப்போது  சகோதரி தென்றல் சசிகலா அவர்கள் , எனக்கு தபாலில் அவர் எழுதியதென்றலின் கனவு”  என்ற கவிதை நூலை அனுப்பி வைத்து  இருந்தார்அப்போதே படித்து முடித்து விட்டு  எழுதுவதற்கான குறிப்புகளையும் எடுத்துக் கொண்டேன். இப்போதுதான் விமர்சனம் எழுத முடிந்தது ( சென்ற ஆண்டு 26.08.2012 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பில் இந்த நூல் வெளியிடப்பட்டது..) இவருடைய கவிதைகளுக்கு வலைப்பதிவில் வாசகர்களிடையே இருக்கும் வரவேற்பே போதும்.
  
கிராமத்துப் பெண்:

கிராமத்திலேயே பிறந்து கிராமத்திலேயே வளர்ந்த தென்றலுக்கு பட்டணம் போனாலும்  அங்குள்ள மக்களை , இயற்கை சூழலை இன்னும் சுமந்தவராகவே இருக்கிறார். எனவே பெரும்பாலும் இவரது கவிதைகலில் ஒரு கிராமத்துப் பெண்ணாகவே பாடுகிறார். என் கிராமத்து வீடு என்ற தலைப்பில் அன்றைய கிராமத்து வீட்டின் இன்றைய நிலைமையைச் சொல்லுகிறார்.

ஊரெங்கும் வாணவேடிக்கை ..
வண்ண வண்ண விளக்குகள்,
சலசலப்பும் ...
பாடுசத்தமுமாய் நம்ம ஊர அம்மன் கோவில் .
பார்ப்பவர் முகத்தில் எல்லாம் சந்தோசம் ,
பார்வையால் பேசிக்கொள்ளும் ,
காதலர் கூட்டம் .
சிட்டென பறக்கும் சிறுசுகள் ,
என் வீட்டு வாசலிலேயே ..
போடப்பட்ட கூத்து மேடை ..
என்ன பயன் ..
பார்த்து மகிழ யாரும் இல்லாத ,
பாழடைந்த என் ..
கிராமத்து வீடு.              (பக்கம்:108)
  
கிராமத்தில் ந்மது அம்மா சுட்டிக் காட்டிய பொருட்கள் தமது பிள்ளைகளுக்கு சுட்டிகாட்டி ..மகிழ எதுவும் பட்டினத்தில் இல்லையே என்று ஏங்குகிறார்.



மாமரத்து குயில் ஓசை ,
மஞ்சு விரட்டிய மைதானம் ,
மலர் தேடும் வண்டு ,
ஊஞ்சல் ஆடி விழுந்த ,
ஆலமரத்தடி ..
ஒரே ஒரு முறை ,
ஊருக்குள் வந்து போகும் ஒற்றை பேருந்து ,
குளிக்க பயந்து ,
குதித்தோடிய குட்டித் திண்ணை ,
திருவிழா கூடத்தில் தொலைத்த  பகைமை ,
தினம் தினம் ..
நீச்சல் பழகிய ஆழ்கிணறு ,
ஆற்றங்கரை இல் ஆக்கிய ,
கூட்டான் சோறு ..
ஆயாவின் சுருக்குப்பை ,
இப்படி எதுவும் இந்த பட்டினத்தில்  இல்லை ,
உன்னிடம் சுட்டிகாட்டி ..மகிழ .     (பக்கம்:110)


இயற்கையை நேசிப்பவர்:


பட்டினத்தில் நண்பர்களிடமிருந்து அடிக்கடி வரும் அழைப்புகளில் புதுமனை புகு விழாவும் ஒன்று. இவருக்கு சிலந்தியின் வீடு அடிக்கடி மாறுவது தெரிகிறது. அதனையே வரிகளாக்கி விட்டார்
கிரஹபிரவேசம் என்ற தலைப்பினில்        

தினம் தினம் ...
புது வீடு கட்டி ...
கிரகபிரவேசதிருக்கு ..
நம்மை அழைக்கும் ..
சிலந்திகள் .            (பக்கம்: 59)


தமிழ் மீது காதலும், காதற் பாடல்களும்.

கவிஞர் என்றாலே தனது தாய்மொழியை நேசிப்பவர். இவரோ தமிழ்க் கவிஞர். சொல்லவா வேண்டும்?

தமிழ்த்தாயின் விரல்நுனிபற்றி  என்ற தலைப்பில், இவரது தமிழ்ப் பற்றினை இங்கு காணலாம்.

   நடக்கப் பழகிய தென்றலின்று,
   
இந்தியத்தாயின் பாதம் பணிந்து,
   
பயணம்தொடர விரும்புகிறேன்!
   
இந்தியராய்ப் பிறப்பதென்பது,
   
இனிமையான ஓர் வரனென்பேன்,
   
அதிலும் தமிழராய் ஜெனித்தல்,
   
தரணியில் பெரும் பேரென்பேன்!  - (பக்கம்:20”)

தமிழ் என்றாலே சங்க இலக்கியம். அகம், புறம். இவற்றுள் அகத்திணைப் பாடல்களே சுவை மிக்கவை!  நமது சகோதரியின்காதல் கவிதைகள்தமிழோடு தமிழாய் இருக்கின்றன.

ஒரு பெண்ணுக்கு காதல் வந்தால் என்ன வரும்? “காதல் வந்த பிறகு .. என்ற தலைப்பில் சொல்லுகிறார்.  
 

காதல் வந்த பிறகு ..
கோலமிட சென்று ..
உன் பெயர் எழுதி வருகிறேன் ..
குளிக்க சென்று ..
குருவியோடு பேசி நிற்கிறேன் ...
சாப்பிட அமர்ந்து ...
சத்தமிலாமல் படுத்துகொள்கிறேன் ...
கண்ணாடி முன்பு நின்று .
ஓவியம் வரைகிறேன் ...
என்னுள் வந்த மாற்றம் எல்லாம் ...
உன்னுள்ளும் நிகழ்கிறதா          - ( பக்கம்: 63 / 84 )

இப்போதெல்லாம் யாரும் யாருக்கும் கடிதம் எழுதுவதில்லை. துக்கம் மகிழ்ச்சி எல்லாவற்றிற்கும் SMS தான். அப்போதெல்லாம் மை போட்டு எழுதும் பேனாதான். அதுவும் கசியும் பேனா என்றால். அந்த பேனாவின் வழியே எழுதிய இவர் எழுதிய மை கசிவு

உன் பெயர் எழுத ....
என் விரல் பிடித்த பேனா ....
தாள்களில் ஜொள் விட்டது போதாதென ...
என் விரல்களிலும் அதன் மை கசிவு .  (பக்கம்:85)

நான் ஒருமுறை பஸ்ஸுக்காக ரொம்ப நேரம், காத்திருந்தபோது இருவர் மட்டும் எந்த பஸ்ஸிலும் ஏறவே இல்லை. எனக்கான பஸ் வந்ததும் உள்ளே ஏறி அமர்ந்ததும்தான் எனக்குள் உறைத்தது, அவர்கள் புதிய காதலர்கள் என்று. நமது சகோதரியும் இதுபோல் ஒரு காட்சியை பார்த்து இருப்பார் போலிருக்கிறது. தான் கண்ட காட்சியை பிடிக்கவே இல்லை .. என்ற தலைப்பினில் வடித்து விட்டார்.

பேருந்துக்காக  காத்திருப்பது ...
பிடிக்கவே இல்லை ..
இருந்தும் நீ ....
பேசிகொண்டிருகிறாய்...
என்பதற்காகவே ....
எத்தனை பேருந்தை வேண்டுமானாலும் .
தவற விடலாம்         - (பக்கம்:105)

வாழ்வியல் சிந்தனைகள்:

தத்துவம் என்றாலே எனக்கு பட்டினத்தார் பாடல்கள்தான் நினைவுக்கு வரும். அவர் தனது ஒரு மடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும் அன்புபொருந்தி உணர்வுகலங்கிஎன்று தொடங்கும் உடல் கூற்று வண்ணம்என்னும் ஒரே பாடலில் மனிதனின் வாழ்க்கையை காட்டுவார். அவர் ஒரு துறவி. எனவே அவற்றில் நிலையாமை இவரோ இல்லத்தரசி. ஒரு பெண் படும் பாட்டினை இயல்பாகவே இங்கு பார்வையில் ஜனனமின்றி என்ற தலைப்பில் சொல்லுகிறார்.

ஓடியது முன்னால் வாழ்க்கை
உருண்டது பின்னால் காலம்
குழந்தைகள் கணவன் வேலை
கற்பனை கோட்டை மெதுவாய்
கனவோடு உறவாடி நிற்க
பறந்தது பத்து வருடங்களும்!

இன்பமும் துன்பமும் மாறிமாறி
நிலையற்ற வருமானத்தோடு ஓடி
மழலைகளின் எதிர் காலம் நினைத்து
இனிவழியில்லை என்றெண்ணி
கொலுசுப்பாதமும் சுமையைப் பகிர
இயந்திர கதியாய் இயல்பு வாழ்க்கை!

ஐந்தில்  கல்வி பயம்
பத்தில் பரீட்சை பயம்
பதினாறில் இளமை பயம்
இருபதில் மணவாழ்வு  பயம்
முப்பதில் எதிர்கால பயம்
நாற்பதுக்குள் தீருமா பயம்!

இனியொன்றுமில்லையென
தலைதாழ்ந்தபோது
ஆதரவாய் கைதட்டல்
நினைவுகளும் கனவுகளும்
கவிதைகளாய் துணையாக
ஏதோவாழ்வு நிம்மதி பெருமூச்சோடு!   - (பக்கம்: 26)

உடல் ஊனம் பற்றி கவலை கொள்ளாதீர்கள். மன ஊனம் மட்டும் அடையாதீர்கள். நான் சொல்லவில்லை. கவிஞர் தென்றல் சொல்லுகிறார். உடலூனம்  தவறில்லை  என்ற தலைப்பில்

ஊனப்பார்வைகள் அழிந்தொழிந்தால்,
ஊனமென்பது உறவுககொன்றுமில்லை,
ஊரையும் உறவையும் ஏய்க்கின்ற,
ஊனமுற்ற பொய் எண்ணங்களே,
ஊமையாய்ப் பதிவிருந்துலகில்,
ஊழிகாலமும் தீமைசெய்யும்.

உடலூனம்  தவறில்லை,
உள்ளஊனம் பெருங்கேடு!!  - (பக்கம்:55)

வீடு வாசல் என்று ஒரு பெண் சுற்றி வந்தாள். அவளுக்கு எது உலகம் என்பது எப்போது தெரிந்தது. இதோ அதற்கான விடையை
அறிமுகம் செய்து வைக்கிறார்.

சமையலறையும்
சலவை துணியுமே
உலகம் என்றிருந்தேன்
கவிதையின் அறிமுகம்
கிடைக்கும் வரை            - (பக்கம்:123)


ஒரு காலத்தில் அரசியல் தலைவர்கள் கைத்தறி ஆடைகளை வாங்கச் சொல்லி பிரச்சாரம் செய்தார்கள். காந்தியின் கனவும் பொய்யாய் போனதடி என்ற தலைப்பினில் கைத்தறியின் இன்றைய கண்ணீர் நிலைமையைச் சொல்லுகிறார்.



ஆரோக்கியம் சமையலில் மட்டுமல்ல                                       
ஆடையிலும் இல்லாமலே போனது
பேறு காலத்தின் போது
பிறந்த குழந்தைக்கும் பின்னர்
கோடித் துணிக்கும்  மட்டுமே
தேடப் படுகிறது நூற்  துணிகள் .....!     - ( பக்கம்: 150 )

முடிவுரை:

புதுப்புது புதுக் கவிதைகள் அடங்கிய நல்ல நூல். கல்லூரி மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு பாடப் பிரிவில் வைக்கலாம்.



                  ( கவிதை நூலின் பின்பக்க அட்டை )

நூலின் பெயர்: தென்றலின் கனவு  (பக்கம் - 176)
நூல் வெளியீடு: டி ஜி வி பி சேகர், தாய்நாடு மக்கள் அறக்கட்டளை, 
2 G S T சாலை, கிண்டி, சென்னை - 600 016  






23 comments:

  1. முழுமையாகப் படித்து அருமையாக
    விமர்சனம் செய்துள்ளீர்கள்
    இன்னும் சிறந்த பதிவுகள் சசிகலா அவர்கள் தருவதற்கு
    தங்கள் பதிவு நிச்சயம் நல்ல தூண்டுகோலாக அமையும்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தினம் தினம் ...
    புது வீடு கட்டி ...
    கிரகபிரவேசதிருக்கு ..
    நம்மை அழைக்கும் ..
    சிலந்திகள் .

    ரசித்துப் படிக்கவைத்த அருமையான விமர்சனம் ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. அருமையான அழகான ரசிக்க வைக்கும் விமர்சனம் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
    // முழுமையாகப் படித்து அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள் இன்னும் சிறந்த பதிவுகள் சசிகலா அவர்கள் தருவதற்கு தங்கள் பதிவு நிச்சயம் நல்ல தூண்டுகோலாக அமையும் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் //

    கவிஞர் ரமணி அவர்களின் விரிவான கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  5. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    // ரசித்துப் படிக்கவைத்த அருமையான விமர்சனம் ..பாராட்டுக்கள்..! //

    ரசித்துப் படித்த சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  6. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    // அருமையான அழகான ரசிக்க வைக்கும் விமர்சனம் ஐயா... வாழ்த்துக்கள்... //

    வாழ்த்துக்கள் சொன்ன சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  7. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய கவிதைகள்.

    ReplyDelete
  8. நன்றாக அலசப்பட்ட விரிந்த விமரிசனம் மிக நன்று.
    ரசித்து வாசித்தேன்.
    இனிய நன்றியுடன் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. ஓராண்டுக்குப்பிறகு தங்களின் உயர் கருத்துக்களை கண்டு வியந்து போனேன். எப்படி இப்படியும் ஒரு பொறுமையான கருத்துக்களை பிரித்து கூறமுடியும் என்று....அப்படியொரு விளக்கத்தை வரிக்கு வரி கொடுத்து இருக்கிறீர்கள்... அதற்கு நான் உங்களுக்கு என் தலை சாய்ந்த பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்... உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி பாராட்டு தெரிவித்த உங்களின் நல்ல உள்ளத்திற்கு மீண்டும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்...

    ReplyDelete
  10. தென்றலின் கனவுகள் நூலை ஆழ்ந்து படித்து உங்கள் கருத்துக்களைக் கூறியிருக்கிறீர்கள். அவரது வலைதளத்தில் திரு DD அவர்கள் இந்தப் பதிவின் இணைப்பைக் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்து வந்தேன்.
    சசிகலாவின் கவிதைகளில் உள்ள எளிமை என்னை மிகவும் கவர்கிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல இந்தப் புத்தகத்தை கல்லூரிகளில் பாடப் புத்தகமாக வைக்கலாம்.

    ReplyDelete
  11. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
    // உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய கவிதைகள். //

    கம்பன், பாரதிதாசன், கண்ணதாசன் கவிதைகளில் தமிழ் வந்து விளையாடுவதைப் போலவே கவிஞரின் நாவினில் தமிழ் கவிதைகள் வருகின்றன. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > kovaikkavi said...
    // நன்றாக அலசப்பட்ட விரிந்த விமரிசனம் மிக நன்று.
    ரசித்து வாசித்தேன். இனிய நன்றியுடன் இனிய வாழ்த்து.//

    சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். வாழ்த்திற்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > Sasi Kala said...
    // ஓராண்டுக்குப்பிறகு தங்களின் உயர் கருத்துக்களை கண்டு வியந்து போனேன். எப்படி இப்படியும் ஒரு பொறுமையான கருத்துக்களை பிரித்து கூறமுடியும் என்று....அப்படியொரு விளக்கத்தை வரிக்கு வரி கொடுத்து இருக்கிறீர்கள்... அதற்கு நான் உங்களுக்கு என் தலை சாய்ந்த பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்... உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி பாராட்டு தெரிவித்த உங்களின் நல்ல உள்ளத்திற்கு மீண்டும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்... //
    இந் நூலாசிரியர், கவிஞர் சகோதரி தென்றல் சசிகலா அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > Ranjani Narayanan said...
    // தென்றலின் கனவுகள் நூலை ஆழ்ந்து படித்து உங்கள் கருத்துக்களைக் கூறியிருக்கிறீர்கள். அவரது வலைதளத்தில் திரு DD அவர்கள் இந்தப் பதிவின் இணைப்பைக் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்து வந்தேன்.//
    சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! இந்தப் பதிவின் இணைப்பைத் தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!
    // சசிகலாவின் கவிதைகளில் உள்ள எளிமை என்னை மிகவும் கவர்கிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல இந்தப் புத்தகத்தை கல்லூரிகளில் பாடப் புத்தகமாக வைக்கலாம். //
    அப்படியே நடக்கட்டும்.

    ReplyDelete
  15. சசிகலாவின் அழகிய கவிதைகளை தொகுத்துதந்துள்ளீர்கள். அவருக்கு வாழ்த்துகள்.

    விரிவாக பகிர்ந்த உங்களுக்கு பாராட்டுகள். நன்றிகள்.

    ReplyDelete
  16. அழகிய கவிதைகள் பற்றிய அருமையான விமர்சனம்!!

    ReplyDelete
  17. மறுமொழி > மாதேவி said..
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > மனோ சாமிநாதன் said...
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  19. நல்ல புத்த்க விமர்சனம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. அருமையானதொரு கவிதை நூலை அலசி ஆராய்ந்து எழுதியுள்ள விமர்சனம் மிகவும் அழகாக அமைந்துள்ளது, ஐயா. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    //தினம் தினம் ... புது வீடு கட்டி ... கிரகபிரவேசதிருக்கு .. நம்மை அழைக்கும் .. சிலந்திகள்.//

    மிகவும் ரஸித்தேன்.

    படங்களும் பதிவும் சூப்பர். கவிதாயினிக்கும் தங்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
  21. மறுமொழி > விமலன் said..
    .
    // நல்ல புத்த்க விமர்சனம் வாழ்த்துக்கள். //

    சகோதரரின் பாராட்டுரைக்கு நன்றி!

    ReplyDelete
  22. தங்களின் விளக்கமும் விமர்சனமும் நன்று .உங்களுக்கும் சசிகலாவுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete