Friday, 13 April 2012

சித்திரைப் பெண்ணே!

எத் திரை போட்டாலும்
சித்திரைப் பெண்ணே! உன்
முத்திரையை மறைக்க முடியுமா?

இளவேனில் தாலாட்டில்!
இளஞ் சோலைகள் எங்கும்
இயற்கை இன்பம் பொங்கும்!
தேரோடும் வீதிகளில் மக்கள்
ஊர் கூடி தேர் இழுப்பர்!

பதமாய்ப் பருகிட பதநீர்!
இனிப்பும் கரிப்புமாய் இளநீர்!
சுவைத்து மகிழ்ந்திட                         
சுவையான பழங்கள்!                          
பள்ளிக்கு கோடை விடுமுறை
துள்ளிக் குதித்திடும் பிள்ளைகள்!

மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பு!
உன்னை ஒளித்து வைக்க
யாரால் முடியும்!
முகத்திரை போட்டிடும்
அரசியல் இங்கு வேண்டாம்!
அனைவருக்கும் 
எனது உளங் கனிந்த
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


(படம்: திருமழபாடி சிவன் கோயில்)